Announcement

Collapse
No announcement yet.

கீதை – நான்காவது அத்தியாயம் -4 [2]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – நான்காவது அத்தியாயம் -4 [2]

    கீதை – நான்காவது அத்தியாயம் 4[2]

    ஞான கர்ம சந்யாச யோகம் – Continued

    कर्मण्यकर्म यः पश्येदकर्मणि च कर्म यः।
    स बुद्धिमान्मनुष्येषु स युक्तः कृत्स्नकर्मकृत्॥१८॥

    கர்மண்யகர்ம ய: பஸ்²யேத³கர்மணி ச கர்ம ய:|
    ஸ பு³த்³தி⁴மாந்மநுஷ்யேஷு ஸ யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத் ||4-18||
    கர்மணி அகர்ம = செய்கையில் செயலின்மையும்
    ச அகர்மணி கர்ம = செயலின்மையில் செய்கையும்
    ய: பஸ்²யேத் = எவன் காணுகிறானோ
    ஸ மநுஷ்யேஷு பு³த்³தி⁴மாந் = அவனே மனிதரில் அறிவுடையோன்
    ஸ யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத் = அந்த யோகி அனைத்துக் கர்மங்களையும் செய்கிறவன் (ஆகிறான்)
    செய்கையில் செயலின்மையும், செயலின்மையில் செய்கையும் எவன் காணுகிறானோ, அவனே மனிதரில் அறிவுடையோன்; அவன் எத்தொழில் செய்கையிலும் யோகத்திலிருப்பான்.
    ________________________________________
    यस्य सर्वे समारम्भाः कामसङ्कल्पवर्जिताः।
    ज्ञानाग्निदग्धकर्माणं तमाहुः पण्डितं बुधाः॥१९॥
    யஸ்ய ஸர்வே ஸமாரம்பா⁴: காமஸங்கல்பவர்ஜிதா:|
    ஜ்ஞாநாக்³நித³க்³த⁴கர்மாணம் தமாஹு: பண்டி³தம் பு³தா⁴: ||4-19||
    யஸ்ய ஸர்வே ஸமாரம்பா⁴: = எவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம்
    காம ஸங்கல்ப வர்ஜிதா: = விருப்ப நினைவு தவிர்ந்தனவோ
    ஜ்ஞாநாக்³நி த³க்³த⁴ கர்மாணம் = எவனுடைய செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவோ
    தம் பு³தா⁴: = அவனை ஞானிகள்
    பண்டி³தம் ஆஹு: = அறிவுடையோன் என்கிறார்கள்
    எவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம் விருப்ப நினைவு தவிர்ந்தனவோ, அவனுடைய செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவாம்; அவனை ஞானிகள் அறிவுடையோனென்கிறார்கள்.
    ________________________________________
    त्यक्त्वा कर्मफलासङ्गं नित्यतृप्तो निराश्रयः।
    कर्मण्यभिप्रवृत्तोऽपि नैव किञ्चित्करोति सः॥२०॥
    த்யக்த்வா கர்மப²லாஸங்க³ம் நித்யத்ருப்தோ நிராஸ்²ரய:|
    கர்மண்யபி⁴ப்ரவ்ருத்தோऽபி நைவ கிஞ்சித்கரோதி ஸ: ||4-20||
    கர்ம ப²லா ஸங்க³ம் த்யக்த்வா = கர்மப் பயனிலே பற்றுக் களைந்தவனாக
    நித்யத்ருப்த: நிராஸ்²ரய: = திருப்தியுடையோனாக சார்பற்று நிற்போனாக
    ஸ: கர்மணி அபி⁴ப்ரவ்ருத்த: அபி = அவன் கர்மத்தில் நன்கு ஈடுபட்டிருந்தாலும் கூட
    கிஞ்சித் ஏவ ந கரோதி = சிறிது கூட செய்வதே இல்லை (செயலற்றவனாவான்)
    கர்மப் பயனிலே பற்றுக் களைந்தவனாய் எப்போதும் திருப்தியுடையோனாய் எதனிலும் சார்பற்று நிற்போன் செய்கை செய்து கொண்டிருக்கையிலும் செயலற்றவனாவான்.
    ________________________________________
    निराशीर्यतचित्तात्मा त्यक्तसर्वपरिग्रहः।
    शारीरं केवलं कर्म कुर्वन्नाप्*नोति किल्बिषम्॥२१॥
    நிராஸீ²ர்யதசித்தாத்மா த்யக்தஸர்வபரிக்³ரஹ:|
    ஸா²ரீரம் கேவலம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பி³ஷம் ||4-21||
    யதசித்தாத்மா = சித்தத்தை ஆத்மாவால் கட்டுப்படுத்தி
    த்யக்த ஸர்வ பரிக்³ரஹ: = எவ்வித தானங்களும் வாங்குவதைத் துறந்து
    நிராஸீ² = ஆசையற்றவனாய்
    கேவலம் ஸா²ரீரம் கர்ம குர்வந் = வெறுமே சரீரத் தொழில் மாத்திரம் செய்து கொண்டிருந்தாலும்
    கில்பி³ஷம் ந ஆப்நோதி = பாவத்தையடைய மாட்டான்
    ஆசையற்றவனாய், சித்தத்தை ஆத்மாவால் கட்டுப்படுத்தி, எவ்வித தானங்களும் வாங்குவதைத் துறந்து, வெறுமே சரீரத் தொழில் மாத்திரம் செய்து கொண்டிருப்போன் பாவத்தையடைய மாட்டான்.
    ________________________________________
    यदृच्छालाभसन्तुष्टो द्वन्द्वातीतो विमत्सरः।
    समः सिद्धावसिद्धौ च कृत्वापि न निबध्यते॥२२॥
    யத்³ருச்சா²லாப⁴ஸந்துஷ்டோ த்³வந்த்³வாதீதோ விமத்ஸர:|
    ஸம: ஸித்³தா⁴வஸித்³தௌ⁴ ச க்ருத்வாபி ந நிப³த்⁴யதே ||4-22||
    யத்³ருச்சா² லாப⁴ ஸந்துஷ்ட = தானாக வந்தெய்தும் லாபத்தில் சந்தோஷமுறுவோனாக
    விமத்ஸர: = பொறாமையற்றவனாக
    த்³வந்த்³வ அதீத: = இருமைகளைக் கடந்தவனாக
    ஸித்³தௌ⁴ அஸித்³தௌ⁴ ச ஸம: = வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை பெற்றான்
    க்ருத்வாபி ந நிப³த்⁴யதே = தொழில் செய்தாலும் அதனால் கட்டுப்படுவதில்லை
    தானாக வந்தெய்தும் லாபத்தில் சந்தோஷமுறுவோனாகி, இருமைகளைக் கடந்து, பொறாமையற்றவனாய் – வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை பெற்றான் தொழில் செய்தாலும் அதனால் கட்டுப்படுவதில்லை.
    ________________________________________
    गतसङ्गस्य मुक्तस्य ज्ञानावस्थितचेतसः।
    यज्ञायाचरतः कर्म समग्रं प्रविलीयते॥२३॥
    க³தஸங்க³ஸ்ய முக்தஸ்ய ஜ்ஞாநாவஸ்தி²தசேதஸ:|
    யஜ்ஞாயாசரத: கர்ம ஸமக்³ரம் ப்ரவிலீயதே ||4-23||
    க³தஸங்க³ஸ்ய = உலகப் பற்றை ஒழித்து
    முக்தஸ்ய = உடற்பற்று மமதை ஆகியவற்றை ஒழித்து
    ஜ்ஞாநாவஸ்தி²தசேதஸ: = ஞானத்தில் மதி நிலைக்கப் பெற்றவன்
    யஜ்ஞாய ஆசரத: = வேள்வியெனக் கருதித் தொழில்புரிவான்
    ஸமக்³ரம் கர்ம ப்ரவிலீயதே = கர்மமெல்லாம் தானே நழுவிப் போய்விடுகிறது
    பற்றுதலகன்றான், விடுதலை கொண்டான், ஞானத்தில் மதி நிலைக்கப் பெற்றான், வேள்வியெனக் கருதித் தொழில்புரிவான் -அவனுடைய கர்மமெல்லாம் தானே நழுவிப் போய்விடுகிறது.
    ________________________________________
    ब्रह्मार्पणं ब्रह्म हविः ब्रह्माग्नौ ब्रह्मणा हुतम्।
    ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्म कर्म समाधिना॥२४॥
    ப்³ரஹ்மார்பணம் ப்³ரஹ்ம ஹவி: ப்³ரஹ்மாக்³நௌ ப்³ரஹ்மணா ஹுதம்|
    ப்³ரஹ்மைவ தேந க³ந்தவ்யம் ப்³ரஹ்ம கர்ம ஸமாதி⁴நா ||4-24||
    அர்பணம் ப்³ரஹ்ம = வேள்வியில் உபயோகப் படும் பொருட்கள் பிரம்மம் தான்
    ஹவி: ப்³ரஹ்ம = ஹோமம் செய்யப் படும் திரவியமும் பிரம்மம் தான்
    ப்³ரஹ்மாக்³நௌ ஹுதம் = பிரம்மத் தீயில் பிரம்மத்தால் ஓமம் செய்யும் செயலும் பிரம்மம்தான்
    ப்³ரஹ்ம கர்ம ஸமாதி⁴நா தேந = பிரம்மத்தின் செய்கையில் ஊன்றி நிற்கின்ற அந்த யோகியினால்
    க³ந்தவ்யம் ப்³ரஹ்ம ஏவ = அடையத்தக்க பயனும் பிரம்மம் தான்
    பிரம்மத்துக்கு அர்ப்பணமாக பிரம்ம அவியை பிரம்மத் தீயில் பிரம்மத்தால் ஓமம் பண்ணுவோன், பிரம்மத்தின் செய்கையில் சமாதானமெய்தினோன், அவன் பிரம்மத்தை அடைவான்.
    ________________________________________
    दैवमेवापरे यज्ञं योगिनः पर्युपासते।
    ब्रह्माग्नावपरे यज्ञं यज्ञेनैवोपजुह्वति॥२५॥
    தை³வமேவாபரே யஜ்ஞம் யோகி³ந: பர்யுபாஸதே|
    ப்³ரஹ்மாக்³நாவபரே யஜ்ஞம் யஜ்ஞேநைவோபஜுஹ்வதி ||4-25||
    அபரே யோகி³ந: = சில யோகிகள்
    தை³வம் யஜ்ஞம் ஏவ = தேவருக்குச் செய்யப்படும் வேள்வியையே
    பர்யுபாஸதே = வழிபடுகிறார்கள்
    அபரே ப்³ரஹ்மாக்³நௌ = வேறு சிலர் பிரம்மத் தீயில்
    யஜ்ஞேந ஏவ யஜ்ஞம் = வேள்வியையே ஆகுதி செய்து
    உபஜுஹ்வதி = ஹோமம் செய்கிறார்கள்
    சில யோகிகள் தேவருக்குச் செய்யப்படும் வேள்வியை வழிபடுகிறார்கள். வேறு சிலர் பிரம்மத் தீயில் வேள்வியையே ஆகுதி செய்து வேட்கின்றனர்.
    ________________________________________
    श्रोत्रादीनीन्द्रियाण्यन्ये संयमाग्निषु जुह्वति।
    शब्दादीन्विषयानन्य इन्द्रियाग्निषु जुह्वति॥२६॥
    ஸ்²ரோத்ராதீ³நீந்த்³ரியாண்யந்யே ஸம்யமாக்³நிஷு ஜுஹ்வதி|
    ஸ²ப்³தா³தீ³ந்விஷயாநந்ய இந்த்³ரியாக்³நிஷு ஜுஹ்வதி ||4-26||
    அந்யே ஸ்²ரோத்ராதீ³நீ இந்த்³ரியாணி = வேறு சிலர் செவி முதலிய இந்திரியங்களை
    ஸம்யமாக்³நிஷு ஜுஹ்வதி = அடக்கம் என்னும் அக்னிகளில் ஆகுதி செய்கிறார்கள்
    அந்யே ஸ²ப்³தா³தீ³ந் விஷயாந்= வேறு சிலர் ஒலி முதலிய புலன் நுகர் விஷயங்களை
    இந்த்³ரியாக்³நிஷு ஜுஹ்வதி = இந்திரியங்களாகிய தழல்களில் ஹோமம் செய்கிறார்கள்
    வேறு சிலர் உட்கரணத்தை யடக்குதலாகிய சம்யமம் என்ற தீயில் செவி முதலிய இந்திரியங்களை ஆகுதி செய்கிறார்கள். வேறு சிலர் இந்திரியங்களாகிய தழல்களில் ஒலி முதலிய விஷயங்களைச் சொரிகிறார்கள்.
    ________________________________________
    सर्वाणीन्द्रियकर्माणि प्राणकर्माणि चापरे।
    आत्मसंयमयोगाग्नौ जुह्वति ज्ञानदीपिते॥२७॥
    ஸர்வாணீந்த்³ரியகர்மாணி ப்ராணகர்மாணி சாபரே|
    ஆத்மஸம்யமயோகா³க்³நௌ ஜுஹ்வதி ஜ்ஞாநதீ³பிதே ||4-27||
    அபரே ஸர்வாணீ இந்த்³ரியகர்மாணி = வேறு சிலர் எல்லா இந்திரியச் செயல்களையும்
    ப்ராணகர்மாணி ச = உயிர்ச்செயல்களையும்
    ஜ்ஞாநதீ³பிதே = ஞானத்தால் ஒளிபெற்ற
    ஆத்ம ஸம்யம யோகா³க்³நௌ = தன்னாட்சியென்ற யோகத் தீயில்
    ஜுஹ்வதி = ஹோமம் செய்கிறார்கள்
    வேறு சிலர் ஞானத்தால் கொளுத்துண்ட தன்னாட்சியென்ற யோகத் தீயில் எல்லா இந்திரியச் செயல்களையும் உயிர்ச்செயல்களையும் ஓமம் பண்ணுகிறார்கள்.
    ________________________________________
    द्रव्ययज्ञास्तपोयज्ञा योगयज्ञास्तथापरे।
    स्वाध्यायज्ञानयज्ञाश्च यतयः संशितव्रताः॥२८॥
    த்³ரவ்யயஜ்ஞாஸ்தபோயஜ்ஞா யோக³யஜ்ஞாஸ்ததா²பரே|
    ஸ்வாத்⁴யாயஜ்ஞாநயஜ்ஞாஸ்²ச யதய: ஸம்ஸி²தவ்ரதா: ||4-28||
    அபரே த்³ரவ்யயஜ்ஞா = வேறு சிலர் திரவியத்தால் வேள்வி செய்வோர்
    தபோயஜ்ஞா = தவத்தால் வேட்போர்
    ததா² யோக³யஜ்ஞா ச = அதே போல யோகத்தால் வேட்போர்
    ஸம்ஸி²தவ்ரதா: யதய: = அகிம்சை முதலிய கொள்கை உடையோர், முயற்சி செய்வோர்
    ஸ்வாத்⁴யாய ஜ்ஞாநயஜ்ஞா = சிலர் ஞானத்தால் வேட்போர்
    விரதங்களை நன்கு பாதுகாக்கும் முனிகளில் வேறு சிலர் திரவியத்தால் வேள்வி செய்வோர்; சிலர் தவத்தால் வேட்போர்; சிலர் கல்வியால் வேட்போர்; சிலர் ஞானத்தால் வேட்போர்.

    Continued

    Source:Sangatham.com
Working...
X