Announcement

Collapse
No announcement yet.

கீதை – நான்காவது அத்தியாயம் -4 [3]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – நான்காவது அத்தியாயம் -4 [3]

    கீதை – நான்காவது அத்தியாயம் 4[3]

    ஞான கர்ம சந்யாச யோகம் – Continued

    अपाने जुह्वति प्राणं प्राणेऽपानं तथापरे।
    प्राणापानगती रुद्ध्वा प्राणायामपरायणाः॥२९॥
    அபாநே ஜுஹ்வதி ப்ராணம் ப்ராணேऽபாநம் ததா²பரே|
    ப்ராணாபாநக³தீ ருத்³த்⁴வா ப்ராணாயாமபராயணா: ||4-29||
    அபரே ப்ராணாயாமபராயணா: = வேறு சிலர் பிரணாயாமத்தில் ஈடுபட்டவர்களாய்
    ப்ராணஅபாநக³தீ ருத்³த்⁴வா = பிராணன் அபானன் என்ற வாயுக்களின் நடையைக் கட்டுப்படுத்தி
    அபாநே ப்ராணம் ப்ராணே அபாநம் = அபானவாயுவில் பிராணவாயுவையும், பிராண வாயுவில் அபானத்தையும்
    ஜுஹ்வதி = ஆகுதி பண்ணுகிறார்கள்
    இனி வேறு சிலர் பிரணாயாமத்தில் ஈடுபட்டவர்களாய், பிராணன், அபானன் என்ற வாயுக்களின் நடையைக் கட்டுப்படுத்தி அபானவாயுவில் பிராணவாயுவையும், பிராண வாயுவில் அபானத்தையும் ஆகுதி பண்ணுகிறார்கள்.
    ________________________________________
    अपरे नियताहाराः प्राणान्प्राणेषु जुह्वति।
    सर्वेऽप्येते यज्ञविदो यज्ञक्षपितकल्मषाः॥३०॥
    அபரே நியதாஹாரா: ப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி|
    ஸர்வேऽப்யேதே யஜ்ஞவிதோ³ யஜ்ஞக்ஷபிதகல்மஷா: ||4-30||
    அபரே நியதாஹாரா: = வேறு சிலர் உணவை ஒழுங்குபடுத்தி
    ப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி = உயிரை உயிரில் ஆகுதி செய்கிறார்கள்
    ஏதே ஸர்வே அபி = இவ்வனைவரும்
    யஜ்ஞவிதோ³ = வேள்வி நெறியுணர்ந்து
    யஜ்ஞக்ஷபிதகல்மஷா: = வேள்வியால் பாவமற்றுப் போயினோர்.
    வேறு சிலர் உணவை ஒழுங்குபடுத்தி உயிரை உயிரில் ஆகுதி செய்கிறார்கள். இவ்வனைவரும் வேள்வி நெறியுணர்ந்து வேள்வியால் பாவமற்றுப் போயினோர்.
    ________________________________________
    यज्ञशिष्टामृतभुजो यान्ति ब्रह्म सनातनम्।
    नायं लोकोऽस्त्ययज्ञस्य कुतोऽन्यः कुरुसत्तम॥३१॥
    யஜ்ஞஸி²ஷ்டாம்ருதபு⁴ஜோ யாந்தி ப்³ரஹ்ம ஸநாதநம்|
    நாயம் லோகோऽஸ்த்யயஜ்ஞஸ்ய குதோऽந்ய: குருஸத்தம ||4-31||
    குருஸத்தம = குரு குலத்தாரில் சிறந்தோய்
    யஜ்ஞஸி²ஷ்ட அம்ருதபு⁴ஜ: = வேள்வியில் மிஞ்சிய அமுதை யுண்போர்
    ஸநாதநம் யாந்தி ப்³ரஹ்ம = என்றுமுளதாகிய பிரம்மத்தை எய்துகிறார்கள்
    அயஜ்ஞஸ்ய அயம் லோக: ந அஸ்தி = வேள்வி செய்யாதோருக்கிவ்வுலகமில்லை
    அந்ய: குத: = வேறு (பர உலகம்) ஏது?
    வேள்வியில் மிஞ்சிய அமுதை யுண்போர் என்றுமுளதாகிய பிரம்மத்தை எய்துகிறார்கள். வேள்வி செய்யாதோருக்கிவ்வுலகமில்லை. அவர்களுக்குப் பரலோகமேது, குரு குலத்தாரில் சிறந்தோய்?
    ________________________________________
    एवं बहुविधा यज्ञा वितता ब्रह्मणो मुखे।
    कर्मजान्विद्धि तान्सर्वानेवं ज्ञात्वा विमोक्ष्यसे॥३२॥
    ஏவம் ப³ஹுவிதா⁴ யஜ்ஞா விததா ப்³ரஹ்மணோ முகே²|
    கர்மஜாந்வித்³தி⁴ தாந்ஸர்வாநேவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே ||4-32||
    ஏவம் ப³ஹுவிதா⁴ யஜ்ஞா = இங்ஙனம் பலவித வேள்விகள்
    ப்³ரஹ்மண: முகே² = வேதங்களின் வாயிலாக
    விததா = விரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன
    தாந் ஸர்வாந் கர்மஜாந் = அவையெல்லாம் தொழிலிலே பிறப்பன
    வித்³தி⁴ = என்று உணர்.
    ஏவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே = இவ்வாறுணர்ந்தால் விடுதலை பெறுவாய்
    பிரம்மத்தின் முகத்தில் இங்ஙனம் பலவித வேள்விகள் விரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் தொழிலிலே பிறப்பனவென்றுணர். இவ்வாறுணர்ந்தால் விடுதலை பெறுவாய்.
    ________________________________________
    श्रेयान्द्रव्यमयाद्यज्ञाज्ज्ञानयज्ञः परन्तप।
    सर्वं कर्माखिलं पार्थ ज्ञाने परिसमाप्यते॥३३॥
    ஸ்²ரேயாந்த்³ரவ்யமயாத்³யஜ்ஞாஜ்ஜ்ஞாநயஜ்ஞ: பரந்தப|
    ஸர்வம் கர்மாகி²லம் பார்த² ஜ்ஞாநே பரிஸமாப்யதே ||4-33||
    பரந்தப பார்த² = பரந்தப அர்ஜுனா!
    த்³ரவ்யமயாத் யஜ்ஞாத் = திரவியத்தைக் கொண்டு செய்யப்படும்
    ஜ்ஞாநயஜ்ஞ: ஸ்²ரேயாந் = ஞானவேள்வி சிறந்தது
    அகி²லம் கர்ம: ஸர்வம் = கர்மமெல்லாம்
    ஜ்ஞாநே பரிஸமாப்யதே = ஞானத்தில் முடிவு பெறுகிறது
    பரந்தபா, திரவியத்தைக் கொண்டு செய்யப்படும் வேள்வியைக் காட்டிலும் ஞானவேள்வி சிறந்தது. பார்த்தா, கர்மமெல்லாம், முற்றிலும், ஞானத்தில் முடிவு பெறுகிறது.
    ________________________________________
    तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया।
    उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः॥३४॥
    தத்³வித்³தி⁴ ப்ரணிபாதேந பரிப்ரஸ்²நேந ஸேவயா|
    உபதே³க்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வத³ர்ஸி²ந: ||4-34||
    ப்ரணிபாதேந பரிப்ரஸ்²நேந ஸேவயா = வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும்
    தத்³ வித்³தி⁴ = அதனை அறிந்துகொள்
    தத்த்வத³ர்ஸி²ந: ஜ்ஞாநிந = உண்மை காணும் ஞானிகள்
    தே ஜ்ஞாநம் உபதே³க்ஷ்யந்தி = உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்
    அதனை வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும் அறிந்துகொள். உண்மை காணும் ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்.
    ________________________________________
    यज्ज्ञात्वा न पुनर्मोहमेवं यास्यसि पाण्डव।
    येन भूतान्यशेषेण द्रक्ष्यस्यात्मन्यथो मयि॥३५॥
    யஜ்ஜ்ஞாத்வா ந புநர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்ட³வ|
    யேந பூ⁴தாந்யஸே²ஷேண த்³ரக்ஷ்யஸ்யாத்மந்யதோ² மயி ||4-35||
    यज्ज्ञात्वा न पुनर्मोहमेवं यास्यसि पाण्डव।
    येन भूतान्यशेषाणि द्रक्ष्यस्यात्मन्यथो मयि॥३५॥
    யஜ்ஜ்ஞாத்வா ந புநர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்ட³வ|
    யேந பூ⁴தாந்யஸே²ஷாணி த்³ரக்ஷ்யஸ்யாத்மந்யதோ² மயி ||4-35||
    யத் ஜ்ஞாத்வா = எதை அறிந்து கொண்ட பின்னர்
    பாண்ட³வ புந: ஏவம் மோஹம் = பாண்டவா, நீ அப்பால் இவ்வித மயக்கம்
    ந யாஸ்யஸி = அடைய மாட்டாயோ
    யேந பூ⁴தாநி அஸே²ஷாணி = இதனால் எல்லா உயிர்களையும், மிச்சமின்றி
    ஆத்மநி அதோ² மயி த்³ரக்ஷ்யஸி = நின்னுள்ளேயும், பிறகு என்னுள்ளேயும் காண்பாய்.
    அந்த ஞானம் பெறுவதனால், பாண்டவா, நீ அப்பால் இவ்வித மயக்கமெய்த மாட்டாய். இதனால் நீ எல்லா உயிர்களையும், மிச்சமின்றி நின்னுள்ளே காண்பாய். அப்பால் அவற்றை என்னுள்ளே காண்பாய்.
    ________________________________________
    अपि चेदसि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः।
    सर्वं ज्ञानप्लवेनैव वृजिनं सन्तरिष्यसि॥३६॥
    அபி சேத³ஸி பாபேப்⁴ய: ஸர்வேப்⁴ய: பாபக்ருத்தம:|
    ஸர்வம் ஜ்ஞாநப்லவேநைவ வ்ருஜிநம் ஸந்தரிஷ்யஸி ||4-36||
    ஸர்வேப்⁴ய: பாபேப்⁴ய: அபி = பாவிகளெல்லாரைக் காட்டிலும்
    பாபக்ருத்தம: அஸி சேத் = நீ அதிகப் பாவியாக இருந்தாலும்
    ஜ்ஞாநப்லவேந ஏவ = ஞானத்தோணியால்
    ஸர்வம் வ்ருஜிநம் ஸந்தரிஷ்யஸி = அப்பாவத்தையெல்லாம் கடந்து செல்வாய்
    பாவிகளெல்லாரைக் காட்டிலும் நீ அதிகப் பாவியாக இருந்தாலும், அப்பாவத்தையெல்லாம் ஞானத்தோணியால் கடந்து செல்வாய்.
    ________________________________________
    यथैधांसि समिद्धोऽग्निर्भस्मसात्कुरुतेऽर्जुन।
    ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात्कुरुते तथा॥३७॥
    யதை²தா⁴ம்ஸி ஸமித்³தோ⁴ऽக்³நிர்ப⁴ஸ்மஸாத்குருதேऽர்ஜுந|
    ஜ்ஞாநாக்³நி: ஸர்வகர்மாணி ப⁴ஸ்மஸாத்குருதே ததா² ||4-37||
    அர்ஜுந = அர்ஜுனா!
    யதா² ஸமித்³த⁴ அக்³நி = நன்கு கொளுத்துண்ட தீ
    ஏதா⁴ம்ஸி ப⁴ஸ்மஸாத் குருதே = விறகுகளைச் சாம்பராக்கி விடுகிறதோ
    ததா² ஜ்ஞாநாக்³நி: = அதே போல ஞானத் தீ
    ஸர்வகர்மாணி ப⁴ஸ்மஸாத் குருதே = எல்லா வினைகளையும் சாம்பராக்கி விடும்
    நன்கு கொளுத்துண்ட தீ, விறகுகளைச் சாம்பராக்கி விடுதல் போலவே, அர்ஜுனா, ஞானத் தீ எல்லா வினைகளையும் சாம்பராக்கி விடும்.
    ________________________________________
    न हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते।
    तत्स्वयं योगसंसिद्धः कालेनात्मनि विन्दति॥३८॥
    ந ஹி ஜ்ஞாநேந ஸத்³ருஸ²ம் பவித்ரமிஹ வித்³யதே|
    தத்ஸ்வயம் யோக³ஸம்ஸித்³த⁴: காலேநாத்மநி விந்த³தி ||4-38||
    இஹ ஜ்ஞாநேந ஸத்³ருஸ²ம் = இவ்வுலகத்தில் ஞானத்தைப் போல்
    பவித்ரம் ஹி ந வித்³யதே = தூய்மை தரும் பொருள் வேறெதுவுமில்லை
    தத் காலேந யோக³ஸம்ஸித்³த⁴: = தக்க பருவத்தில் கடைப்பிடித்து யோகத்தில் நல்ல சித்தியடைந்தவன்
    ஸ்வயம் ஆத்மநி விந்த³தி = தனக்குத்தானே ஆத்மாவிடம் எய்தப் பெறுகிறான்
    ஞானத்தைப் போல் தூய்மை தரும் பொருள் இவ்வுலகத்தில் வேறெதுவுமில்லை. யோகத்தில் நல்ல சித்தியடைந்தவன் தானாகவே தக்க பருவத்தில் அதைத் தனக்குள் கிடைக்கப் பெறுகிறான்.
    ________________________________________
    श्रद्धावाँल्लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः।
    ज्ञानं लब्ध्वा परां शान्तिमचिरेणाधिगच्छति॥३९॥
    ஸ்²ரத்³தா⁴வாம்¿ல்லப⁴தே ஜ்ஞாநம் தத்பர: ஸம்யதேந்த்³ரிய:|
    ஜ்ஞாநம் லப்³த்⁴வா பராம் ஸா²ந்திமசிரேணாதி⁴க³ச்ச²தி ||4-39||
    ஸம்யதேந்த்³ரிய: = இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவனாக
    தத்பர: ஸ்²ரத்³தா⁴வாந் = சாதனையிலேயே ஒன்றிய சிரத்தையுடையோன்
    ஜ்ஞாநம் லப⁴தே = ஞானத்தையடைகிறான்
    ஜ்ஞாநம் லப்³த்⁴வா = ஞானத்தையடைந்த பின்
    அசிரேண பராம் ஸா²ந்திம் அதி⁴க³ச்ச²தி = விரைவிலே பர சாந்தி பெறுகிறான்
    பிரம்மத்தைப் பரமாகக் கொண்டு, இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவனாய், சிரத்தையுடையோன் ஞானத்தையடைகிறான். ஞானத்தையடைந்த பின் விரைவிலே பர சாந்தி பெறுகிறான்.
    ________________________________________
    अज्ञश्चाश्रद्दधानश्च संशयात्मा विनश्यति।
    नायं लोकोऽस्ति न परो न सुखं संशयात्मनः॥४०॥
    அஜ்ஞஸ்²சாஸ்²ரத்³த³தா⁴நஸ்²ச ஸம்ஸ²யாத்மா விநஸ்²யதி|
    நாயம் லோகோऽஸ்தி ந பரோ ந ஸுக²ம் ஸம்ஸ²யாத்மந: ||4-40||
    அஜ்ஞ ச ஸ்²ரத்³த³தா⁴ந் ச = அறிவும் சிரத்தையுமின்றி
    ஸம்ஸ²யாத்மா விநஸ்²யதி = ஐயத்தை இயல்பாகக் கொண்டோன் அழிந்து போகிறான்
    ஸம்ஸ²யாத்மந: அயம் லோக: ந அஸ்தி = ஐயமுடையோனுக்கு இவ்வுலகமில்லை
    பர: ந ஸுக²ம் ச ந = மேலுலகமில்லை; இன்பமுமில்லை
    அறிவும் சிரத்தையுமின்றி ஐயத்தை இயல்பாகக் கொண்டோன் அழிந்து போகிறான். ஐயமுடையோனுக்கு இவ்வுலகமில்லை; மேலுலகமில்லை; இன்பமுமில்லை.
    ________________________________________
    योगसन्न्यस्तकर्माणं ज्ञानसञ्छिन्नसंशयम्।
    आत्मवन्तं न कर्माणि निबध्नन्ति धनञ्जय॥४१॥
    யோக³ஸந்ந்யஸ்தகர்மாணம் ஜ்ஞாநஸஞ்சி²ந்நஸம்ஸ²யம்|
    ஆத்மவந்தம் ந கர்மாணி நிப³த்⁴நந்தி த⁴நஞ்ஜய ||4-41||
    தனஞ்ஜயா! = அர்ஜுனா
    யோக³ ஸந்ந்யஸ்த கர்மாணம் = யோகத்தால் செய்கைகளைத் துறந்து
    ஜ்ஞாந ஸஞ்சி²ந்ந ஸம்ஸ²யம் = ஞானத்தால் ஐயத்தை அறுத்து
    ஆத்மவந்தம் = தன்னைத் தான் ஆள்வோனை
    கர்மாணி ந நிப³த்⁴நந்தி = கட்டுப்படுத்த மாட்டா
    யோகத்தால் செய்கைகளைத் துறந்து, ஞானத்தால் ஐயத்தை அறுத்துத் தன்னைத் தான் ஆள்வோனை, தனஞ்ஜயா! கர்மங்கள் கட்டுப்படுத்த மாட்டா.
    ________________________________________
    तस्मादज्ञानसंभूतं हृत्स्थं ज्ञानासिनात्मनः।
    छित्त्वैनं संशयं योगमातिष्ठोत्तिष्ठ भारत॥४२॥
    தஸ்மாத³ஜ்ஞாநஸம்பூ⁴தம் ஹ்ருத்ஸ்த²ம் ஜ்ஞாநாஸிநாத்மந:|
    சி²த்த்வைநம் ஸம்ஸ²யம் யோக³மாதிஷ்டோ²த்திஷ்ட² பா⁴ரத ||4-42||
    தஸ்மாத் பா⁴ரத = ஆகவே பாரதா
    ஹ்ருத்ஸ்த²ம் = நெஞ்சில் நிலைகொண்டிருக்கும்
    அஜ்ஞாநஸம்பூ⁴தம் ஆத்மந: ஏநம் ஸம்ஸ²யம் = அஞ்ஞானத்தால் தோன்றும் இந்த ஐயத்தை
    ஜ்ஞாந அஸிநா: சி²த்த்வா = ஞானவாளால் அறுத்து
    யோக³ம் ஆதிஷ்ட²: உத்திஷ்ட² = யோக நிலைகொள், எழுந்து நில்
    அஞ்ஞானத்தால் தோன்றி நெஞ்சில் நிலைகொண்டிருக்கும் இந்த ஐயத்தை உன் ஞானவாளால் அறுத்து யோக நிலைகொள். பாரதா, எழுந்து நில்.
    ________________________________________
    ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
    श्रिकृष्णार्जुन सम्वादे ज्ञानकर्मसन्नयासयोगो नाम चतुर्थोऽध्याय: || 4 ||
    ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
    ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
    உரையாடலில் ‘ஞான கர்ம ஸந்யாஸ யோகம்’ எனப் பெயர் படைத்த
    நான்காம் அத்தியாயம் நிறைவுற்றது.


    Source:Sangatham.com
Working...
X