Announcement

Collapse
No announcement yet.

கீதை – ஐந்தாவது அத்தியாயம் 5[2]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – ஐந்தாவது அத்தியாயம் 5[2]

    கீதை – ஐந்தாவது அத்தியாயம் 5[2]
    சந்யாச யோகம்

    Continued

    नादत्ते कस्यचित्पापं न चैव सुकृतं विभुः।
    अज्ञानेनावृतं ज्ञानं तेन मुह्यन्ति जन्तवः॥१५॥

    நாத³த்தே கஸ்யசித்பாபம் ந சைவ ஸுக்ருதம் விபு⁴:|
    அஜ்ஞாநேநாவ்ருதம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவ: ||5-15||

    பாபம் ஸுக்ருதம் ச = பாவி அல்லது நற்செய்கையுடையோனென்று
    கஸ்யசித் ந ஆத³த்தே = எவனையும் கடவுள் ஏற்பதில்லை
    அஜ்ஞாநேந ஆவ்ருதம் ஜ்ஞாநம் = அஞ்ஞானத்தால் ஞானம் சூழப்பட்டிருக்கிறது
    தேந ஜந்தவ: முஹ்யந்தி = அதனால் ஜந்துக்கள் மயக்கமெய்துகின்றன

    எவனையும் பாவி அல்லது நற்செய்கையுடையோனென்று கடவுள் ஏற்பதில்லை. அஞ்ஞானத்தால் ஞானம் சூழப்பட்டிருக்கிறது. அதனால் ஜந்துக்கள் மயக்கமெய்துகின்றன.

    ज्ञानेन तु तदज्ञानं येषां नाशितमात्मनः।
    तेषामादित्यवज्ज्ञानं प्रकाशयति तत्परम्॥१६॥

    ஜ்ஞாநேந து தத³ஜ்ஞாநம் யேஷாம் நாஸி²தமாத்மந:|br />
    தேஷாமாதி³த்யவஜ்ஜ்ஞாநம் ப்ரகாஸ²யதி தத்பரம் ||5-16||

    து ஏஷாம் தத் அஜ்ஞாநம் = ஆனால் எவர்களுடைய அஞ்ஞானம்
    ஆத்மந: ஜ்ஞாநேந நாஸி²தம் = ஆத்ம ஞானத்தால் அழிக்கப் பட்டதோ
    தேஷாம் ஜ்ஞாநம் ஆதி³த்யவத் = அவர்களுடைய ஞானம் சூரியனைப் போன்றதாய்
    தத்பரம் ப்ரகாஸ²யதி = பரம்பொருளை ஒளியுறக் காட்டுகிறது

    அந்த அஞ்ஞானத்தை ஆத்ம ஞானத்தால் அழித்தவர்களுடைய ஞானம் சூரியனைப் போன்றதாய்ப் பரம்பொருளை ஒளியுறக் காட்டுகிறது.

    तद्बुद्धयस्तदात्मानस्तन्निष्ठास्तत्परायणाः।
    गच्छन्त्यपुनरावृत्तिं ज्ञाननिर्धूतकल्मषाः॥१७॥

    தத்³பு³த்³த⁴யஸ்ததா³த்மாநஸ்தந்நிஷ்டா²ஸ்தத்பராயணா:|
    க³ச்ச²ந்த்யபுநராவ்ருத்திம் ஜ்ஞாநநிர்தூ⁴தகல்மஷா: ||5-17||

    தத்³பு³த்³த⁴ய: ததா³த்மாந: தந்நிஷ்டா²: தத்பராயணா: = பிரம்மத்தால் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷ்டையெய்தி, அதில் ஈடுபட்டோர்
    ஜ்ஞாந நிர்தூ⁴த கல்மஷா: = ஞானத்தால் தம்முடைய பாவங்களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய்
    அபுநராவ்ருத்திம் க³ச்ச²ந்தி = மீளாப் பதமடைகிறார்கள்

    பிரம்மத்தால் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷ்டையெய்தி, அதில் ஈடுபட்டோர், தம்முடைய பாவங்களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய், மீளாப் பதமடைகிறார்கள்.

    विद्याविनयसम्पन्ने ब्राह्मणे गवि हस्तिनि।
    शुनि चैव श्वपाके च पण्डिताः समदर्शिनः॥१८॥

    வித்³யாவிநயஸம்பந்நே ப்³ராஹ்மணே க³வி ஹஸ்திநி|
    ஸு²நி சைவ ஸ்²வபாகே ச பண்டி³தா: ஸமத³ர்ஸி²ந: ||5-18||

    வித்³யா விநய ஸம்பந்நே ப்³ராஹ்மணே =
    க³வி ஹஸ்திநி ஸு²நி ச ஏவ = பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும் கூட
    ஸ்²வபாகே: ச = நாயைத் தின்னும் புலையனிடத்தும்
    பண்டி³தா: ஸமத³ர்ஸி²ந: = பண்டிதர் சமப் பார்வையுடையோர்

    கல்வியும் விநயமும் நன்கு கற்ற பிராமணனிடத்திலும், பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயைத் தின்னும் புலையனிடத்தும், பண்டிதர் சமப் பார்வையுடையோர்.

    इहैव तैर्जितः सर्गो येषां साम्ये स्थितं मनः।
    निर्दोषं हि समं ब्रह्म तस्माद् ब्रह्मणि ते स्थिताः॥१९॥

    இஹைவ தைர்ஜித: ஸர்கோ³ யேஷாம் ஸாம்யே ஸ்தி²தம் மந:|
    நிர்தோ³ஷம் ஹி ஸமம் ப்³ரஹ்ம தஸ்மாத்³ ப்³ரஹ்மணி தே ஸ்தி²தா: ||5-19||

    ஏஷாம் மந: ஸாம்யே ஸ்தி²தம் = எவர்களுடைய மனம் சமநிலையில் நிற்கிறதோ
    தை: இஹ ஏவ ஸர்க³: ஜித: = இவ்வுலகத்திலேயே (உயிர் வாழும் போதே) இயற்கையை வென்றோராவர்
    ஹி ப்³ரஹ்ம நிர்தோ³ஷம் ஸமம் = ஏனெனில் பிரம்மம் மாசற்றது. சமநிலையுற்றது
    தஸ்மாத்³ தே ப்³ரஹ்மணி ஸ்தி²தா: = ஆதலால் அவர்கள் பிரம்மத்தில் நிலைபெறுகிறார்கள்

    மனம் சமநிலையில் நிற்கப் பெற்றோர் இவ்வுலகத்திலேயே இயற்கையை வென்றோராவர். பிரம்மம் மாசற்றது. சமநிலையுற்றது. ஆதலால் அவர்கள் பிரம்மத்தில் நிலைபெறுகிறார்கள்.

    न प्रहृष्येत्प्रियं प्राप्य नोद्विजेत्प्राप्य चाप्रियम्।
    स्थिरबुद्धिरसम्मूढो ब्रह्मविद्ब्रह्मणि स्थितः॥२०॥

    ந ப்ரஹ்ருஷ்யேத்ப்ரியம் ப்ராப்ய நோத்³விஜேத்ப்ராப்ய சாப்ரியம்|
    ஸ்தி²ரபு³த்³தி⁴ரஸம்மூடோ⁴ ப்³ரஹ்மவித்³ப்³ரஹ்மணி ஸ்தி²த: ||5-20||

    ப்ரியம் ப்ராப்ய ந ப்ரஹ்ருஷ்யேத் = விரும்பிய பொருளைப் பெறும்போது மகிழ்ச்சி அடையாமலும்
    அப்ரியம் ப்ராப்ய ச ந உத்³விஜேத் = பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்படாமலும்
    ஸ்தி²ரபு³த்³தி⁴: அஸம்மூட⁴: = ஸ்திர புத்தி யுடையோனாய், மயக்கம் நீங்கி
    ப்³ரஹ்மவித் ப்³ரஹ்மணி ஸ்தி²த: = பிரம்மஞானி பிரம்மத்தில் நிலைபெறுகிறான்

    விரும்பிய பொருளைப் பெறும்போது களிகொள்ளான்; பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்பட மாட்டான்; பிரம்மஞானி ஸ்திர புத்தி யுடையோனாய், மயக்கம் நீங்கி, பிரம்மத்தில் நிலைபெறுகிறான்.

    बाह्यस्पर्शेष्वसक्तात्मा विन्दत्यात्मनि यत्सुखम्।
    स ब्रह्मयोगयुक्तात्मा सुखमक्षयमश्नुते॥२१॥

    பா³ஹ்யஸ்பர்ஸே²ஷ்வஸக்தாத்மா விந்த³த்யாத்மநி யத்ஸுக²ம்|
    ஸ ப்³ரஹ்மயோக³யுக்தாத்மா ஸுக²மக்ஷயமஸ்²நுதே ||5-21||

    பா³ஹ்ய ஸ்பர்ஸே²ஷு = புறத் தீண்டுதல்களில்
    அஸக்தாத்மா ஆத்மநி = பற்றற்ற சாதகன் உள்ளத்தில்
    யத் ஸுக²ம் விந்த³தி = எந்த சுகம் தியானத்தால் விளைகிறதோ அதை பெறுகிறான்
    ப்³ரஹ்ம யோக³ யுக்தாத்மா = (அதன் பிறகு) பிரம்ம யோகத்தில் பொருந்தி
    ஸ: அக்ஷயம் ஸுக²ம் அஸ்²நுதே = அவன் அழியாத இன்பத்தை எய்துகிறான்

    புறத் தீண்டுதல்களில் பற்றுதல் கொள்ளாமல் தனக்குள்ளே இன்பத்தைக் காண்போன் பிரம்ம யோகத்தில் பொருந்தி அழியாத இன்பத்தை எய்துகிறான்.

    ये हि संस्पर्शजा भोगा दुःखयोनय एव ते।
    आद्यन्तवन्तः कौन्तेय न तेषु रमते बुधः॥२२॥

    யே ஹி ஸம்ஸ்பர்ஸ²ஜா போ⁴கா³ து³:க²யோநய ஏவ தே|
    ஆத்³யந்தவந்த: கௌந்தேய ந தேஷு ரமதே பு³த⁴: ||5-22||

    ஸம்ஸ்பர்ஸ²ஜா யே போ⁴கா³: = புறத் தீண்டுதல்களில் எந்த இன்பங்கள் உள்ளனவோ
    தே ஹி து³:க²யோநய: ஏவ = அவை நிச்சயமாக துன்பத்துக்குக் காரணங்களாகும்
    ஆதி³ அந்தவந்த: = தொடக்கமும் இறுதியுமுடையன (அநித்யமானவை)
    கௌந்தேய = குந்தி மகனே
    பு³த⁴: தேஷு ந ரமதே = அறிவுடையோன் அவற்றில் களியுறுவதில்லை

    புறத் தீண்டுதல்களில் தோன்றும் இன்பங்கள் துன்பத்துக்குக் காரணங்களாகும். அவை தொடக்கமும் இறுதியுமுடையன. குந்தி மகனே, அறிவுடையோன் அவற்றில் களியுறுவதில்லை.

    शक्नोतीहैव यः सोढुं प्राक्शरीरविमोक्षणात्।
    कामक्रोधोद्भवं वेगं स युक्तः स सुखी नरः॥२३॥

    ஸ²க்நோதீஹைவ ய: ஸோடு⁴ம் ப்ராக்ஸ²ரீரவிமோக்ஷணாத்|
    காமக்ரோதோ⁴த்³ப⁴வம் வேக³ம் ஸ யுக்த: ஸ ஸுகீ² நர: ||5-23||

    ய: இஹ ஏவ = எவன் இவ்வுலகத்திலேயே
    ஸ²ரீரவிமோக்ஷணாத் ப்ராக் = சரீரம் நீங்குமுன்னர்
    காம க்ரோத⁴ உத்³ப⁴வம் = விருப்பத்தாலும் சினத்தாலும் விளையும்
    வேக³ம் ஸோடு⁴ம் ஸ²க்நோதி = எழுச்சியை பொறுக்க வல்லானோ
    ஸ நர: யுக்த: = அந்த மனிதன் யோகி

    ஸ ஸுகீ² = அவன் இன்பமுடையோன்

    சரீரம் நீங்குமுன்னர் இவ்வுலகத்திலேயே விருப்பத்தாலும் சினத்தாலும் விளையும் வேகத்தை எவன் பொறுக்க வல்லானோ அந்த மனிதன் யோகி. அவன் இன்பமுடையோன்.

    योऽन्तःसुखोऽन्तरारामस्तथान्तर्ज्योतिरेव यः।
    स योगी ब्रह्मनिर्वाणं ब्रह्मभूतोऽधिगच्छति॥२४॥

    யோऽந்த:ஸுகோ²’ந்தராராமஸ்ததா²ந்தர்ஜ்யோதிரேவ ய:|
    ஸ யோகீ³ ப்³ரஹ்மநிர்வாணம் ப்³ரஹ்மபூ⁴தோऽதி⁴க³ச்ச²தி ||5-24||

    ய: ஏவ அந்த:ஸுக² = எவன் தனக்குள்ளே இன்பமுடையவனாக
    அந்தராராம: = உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய்
    ததா² ய: அந்தர்ஜ்யோதி: = அவ்வாறே உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி எவனோ
    ஸ: ப்³ரஹ்மபூ⁴த: = அவன் தானே பிரம்மமாய்
    ப்³ரஹ்மநிர்வாணம் அதி⁴க³ச்ச²தி = பிரம்ம நிர்வாணமடைகிறான்

    தனக்குள்ளே இன்பமுடையவனாய், உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய், உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி, தானே பிரம்மமாய், பிரம்ம நிர்வாணமடைகிறான்.

    लभन्ते ब्रह्मनिर्वाणमृषयः क्षीणकल्मषाः।
    छिन्नद्वैधा यतात्मानः सर्वभूतहिते रताः॥२५॥

    லப⁴ந்தே ப்³ரஹ்மநிர்வாணம்ருஷய: க்ஷீணகல்மஷா:|
    சி²ந்நத்³வைதா⁴ யதாத்மாந: ஸர்வபூ⁴தஹிதே ரதா: ||5-25||

    சி²ந்நத்³வைதா⁴ = இருமைகளை வெட்டிவிட்டு
    ஸர்வபூ⁴தஹிதே ரதா: = எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சி யெய்தி
    யதாத்மாந: = எவர்கள் சஞ்சலமின்றி பரமாத்மாவில் நிலைத்துள்ளதோ
    ருஷய: க்ஷீணகல்மஷா: = (அந்த) ரிஷிகள் பாவங்களழிந்து
    ப்³ரஹ்மநிர்வாணம் லப⁴ந்தே = பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்

    இருமைகளை வெட்டிவிட்டுத் தம்மைத் தாம் கட்டுப்படுத்தி, எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சி யெய்தும் ரிஷிகள் பாவங்களழிந்து பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்.

    कामक्रोधवियुक्तानां यतीनां यतचेतसाम्।
    अभितो ब्रह्मनिर्वाणं वर्तते विदितात्मनाम्॥२६॥

    காமக்ரோத⁴வியுக்தாநாம் யதீநாம் யதசேதஸாம்|
    அபி⁴தோ ப்³ரஹ்மநிர்வாணம் வர்ததே விதி³தாத்மநாம் ||5-26||

    காமக்ரோத⁴வியுக்தாநாம் = விருப்பமும் சினமும் தவிர்த்து
    யதசேதஸாம் விதி³தாத்மநாம் = சித்தத்தைக் கட்டுப்படுத்திய ஆத்ம ஞானிகளாகிய
    யதீநாம் அபி⁴த: = முனிகளுக்கு நாற்புறமும்
    ப்³ரஹ்மநிர்வாணம் வர்ததே = பிரம்ம நிர்வாணம் அருகிலுள்ளது

    விருப்பமும் சினமும் தவிர்த்து சித்தத்தைக் கட்டுப்படுத்திய ஆத்ம ஞானிகளாகிய முனிகளுக்கு பிரம்ம நிர்வாணம் அருகிலுள்ளது.

    स्पर्शान्कृत्वा बहिर्बाह्यांश्चक्षुश्चैवान्तरे भ्रुवोः।
    प्राणापानौ समौ कृत्वा नासाभ्यन्तरचारिणौ॥२७॥

    ஸ்பர்ஸா²ந்க்ருத்வா ப³ஹிர்பா³ஹ்யாம்ஸ்²சக்ஷுஸ்²சைவாந்தரே ப்⁴ருவோ:|
    ப்ராணாபாநௌ ஸமௌ க்ருத்வா நாஸாப்⁴யந்தரசாரிணௌ ||5-27||

    பா³ஹ்யாந் ஸ்பர்ஸா²ந் ப³ஹி ஏவ க்ருத்வா = புறத் தீண்டுதல்களை வெளியிலேயே தள்ளி
    சக்ஷு: ப்⁴ருவோ: அந்தரே = புருவங்களுக்கிடையே விழிகளை நிறுத்தி
    நாஸாப்⁴யந்தர சாரிணௌ = மூக்கினுள்ளே இயங்கும் பிராண வாயுவையும் அபான வாயுவையும்
    ஸமௌ க்ருத்வா ச = சமமாகச் செய்துகொண்டு

    புறத் தீண்டுதல்களை அகற்றிப் புருவங்களுக்கிடையே விழிகளை நிறுத்தி மூக்கினுள்ளே இயங்கும் பிராண வாயுவையும் அபான வாயுவையும் சமமாகச் செய்துகொண்டு;

    यतेन्द्रियमनोबुद्धिर्मुनिर्मोक्षपरायणः।
    विगतेच्छाभयक्रोधो यः सदा मुक्त एव सः॥२८॥

    யதேந்த்³ரியமநோபு³த்³தி⁴ர்முநிர்மோக்ஷபராயண:|
    விக³தேச்சா²ப⁴யக்ரோதோ⁴ ய: ஸதா³ முக்த ஏவ ஸ: ||5-28||

    யதேந்த்³ரிய: மந: பு³த்³தி⁴: = புலன்களை, மனத்தை, மதியையும் அடக்கி
    விக³த: இச்சா² ப⁴ய க்ரோத⁴: = விருப்பமும் அச்சமும் சினமும் தவிர்த்து
    மோக்ஷபராயண: = மோட்சத்தை குறிக்கோளாக கொண்டிருக்கிற
    ய: முநி: ஸ: ஸதா³ முக்த ஏவ = அந்த முனிவன் எக்காலமும் முக்தனே யாவான்

    புலன்களை, மனத்தை, மதியையும் கட்டி
    விடுதலை யிலக் கெனக் கொண்டு
    விருப்பமும் அச்சமும் சினமும் தவிர்ந்தான்
    முக்தனே யாவான் முனி.

    भोक्तारं यज्ञतपसां सर्वलोकमहेश्वरम्।
    सुहृदं सर्वभूतानां ज्ञात्वा मां शान्तिमृच्छति॥२९॥

    போ⁴க்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஸ்²வரம்|
    ஸுஹ்ருத³ம் ஸர்வபூ⁴தாநாம் ஜ்ஞாத்வா மாம் ஸா²ந்திம்ருச்ச²தி ||5-29||

    மாம் யஜ்ஞதபஸாம் போ⁴க்தாரம் = என்னை வேள்வியும் தவமும் ஏற்பவன் என்றும்
    ஸர்வலோகமஹேஸ்²வரம் = உலகுகட்கெல்லாம் ஒருபேரரசன் என்றும்
    ஸர்வபூ⁴தாநாம் ஸுஹ்ருத³ம் = எல்லா உயிர்கட்கு நண்பன் என்றும்
    ஜ்ஞாத்வா ஸா²ந்திம் ருச்ச²தி = என்று அறிபவன் அமைதி அடைகிறான்

    வேள்வியுந் தவமும் மிசைவோன் யானே;
    உலகுகட்கெல்லாம் ஒரு பேரரசன்;
    எல்லா உயிர்கட்கு நண்பன் யான்” என்
    றறிவான் அமைதி யறிவான்.

    ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
    श्रिकृष्णार्जुन सम्वादे सन्नयासयोगो नाम पञ्चमोऽध्याय: || 5 ||

    ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
    ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
    உரையாடலில் ‘ஸந்யாஸ யோகம்’ எனப் பெயர் படைத்த
    ஐந்தாம் அத்தியாயம் நிறைவுற்றது.
Working...
X