Announcement

Collapse
No announcement yet.

புலிக்கால் முனிவர் எனும் வியாக்ரபாதர், ச

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • புலிக்கால் முனிவர் எனும் வியாக்ரபாதர், ச

    ரிஷிகள் தரிசனத்தில் இந்த வாரம் நாம் பார்க்கவிருப்பது வியாக்ரபாதர். வியாக்ரம் என்றால் சமஸ்கிருதத்தில் புலி என்று பொருள். தமிழில் இவர் புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்பட்டார். இவருக்கும் புலிக்கும் என்ன தொடர்பு? புலிக்கால் முனிவர் என்று பெயர் ஏற்பட்டது ஏன்? வாருங்கள்… வியாக்ரபாதரின் திவ்ய சரிதத்தை பார்ப்போம்.
    இறைபக்தியிலும் அறநெறிகளிலும் சிறந்தவர் மத்யந்தன முனிவர். சிவபெருமானின் அருளால் அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மழன் என பெயர் சூட்டி, வேதங்களையும் நீதி சாஸ்திரங்களையும் கற்று கொடுத்தார். மழன் படிப்பில் படு சுட்டியாக திகழ்ந்தான். தந்தையின் சிவபூஜைக்கு வில்வங்களை மலர்களை பறித்து தருவது, பூஜையின் போது அவருடன் பாடுவது மந்திரங்களை சொல்வது என குழந்தை மழன் உதவி வந்தான்.
    ஒருமுறை மழன், தனது தந்தை மத்யந்தனரிடம், “தந்தையே! ஆண்டவனை அடைய வழி தவம் செய்வது தானே?” என்று கேட்டான்.

    “மகனே! தவம் செய்வதால் மனிதனுக்கு சொர்க்கம் மட்டுமே கிடைக்கும். ஆனால், பிறவியில்லாத நிலை ஏற்படாது. சிவபூஜையைப் பக்தியுடன் செய்பவர்களே மறுபிறவி எடுப்பதில்லை. நீ தில்லைமரங்கள் அடர்ந்த வனத்தில் இருக்கும் சிவனை வழிபட்டால் உனக்கு நற்கதி கிடைக்கும்!” என்றார்.
    மழமுனிவர் சிவபூஜை செய்வதற்கு தில்லைவனம் வந்து சேர்ந்தார். தினமும் பூப்பறித்து அர்ச்சனை செய்வார். சில சமயங்களில் அழுகல் பூக்களும் சேர்ந்து வந்து விடும். அதனை எண்ணி வேதனைப்படுவார். “இறைவா… அழுகிய மலர்களால் உம்மை அர்ச்சித்தால் பாவம் வந்து விடுமே! விடிந்த பிறகு மலர் பறித்தாலோ, வண்டுகள் தேன் குடிக்க வந்து எச்சில்பட்டு விடுகிறது. விடியும் முன் பறிக்க எண்ணி மரம் ஏறினாலோ கால் வழுக்குகிறது. இருட்டில் மலர் பறித்தால் கண் தெரியாமல் அரும்பையும், அழுகலையும் பறித்து விடுகிறேன். நல்ல பூக்களை மட்டும் பறிக்க நீ தான் வழிகாட்ட வேண்டும்!” என்று வேண்டிக் கொண்டார்.

    பக்தனின் கோரிக்கையை ஏற்ற சிவன் அவர் முன் தோன்றினார். அதைக் கண்ட மழமுனிவர் பரவசம் அடைந்து, “எனக்கு வாழ்வில் எந்த சுகமும் வேண்டாம். உன்னைக் காலம் முழுவதும் பூக்களால் அர்ச்சிக்கும் பாக்கியம் மட்டும் போதும். வழுக்காமல் மரம் ஏற புலியின் கால்களைத் தரவேண்டும். கைவிரல்கள் புலி நகமாய் மாற வேண்டும். இதைத் தந்தால் எளிதாக மரம் ஏறமுடியும். அது மட்டுமல்ல! கால்களிலும், விரல்களிலும் கண்கள் இருந்தால் நல்ல மலர்களை மட்டும் பறிப்பேன். அவற்றையும் தர வேண்டும்!” என்று வேண்டினார்.
    எப்பேற்பட்ட பக்குவம்….. எப்பேற்பட்ட வேண்டுதல்… நாம் கேட்கும் எதையும் தரவல்ல இறைவனை கண்ட பிறகும் ‘எனக்கு எந்த சுகமும் வேண்டாம். உன்னை காலம் முழுதும் பூஜிக்கும் சுகம் ஒன்றே போதும்/ என்று கேட்கிறாரே, இதுவன்றோ பக்தி…
    வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் என்று திருநாவுக்கரசர் பாடியதைப் போல, சிவனும் அந்த வரத்தை வழங்கினார். புலியை சமஸ்கிருதத்தில் வியாக்ரம் என்பர். இதனால், மழமுனிவர் வியாக்ரபாதர் என்னும் பெயர் பெற்றார்.
    சிவதரிசனம் மூலம் அரிய வரம் பெற்ற அவரை அனைவரும் பாராட்டினர். வியாக்ர பாதரின் புகழ் திக்கெட்டும் பரவியது. இந்நிலையில் ஒரு நாள் வைகுண்டத்தில் விஷ்ணுவின் பாரத்தை திடீரென தாங்க முடியாமல் ஆதிசேஷன் அவதிப்பட்டார். இதற்கான காரணத்தைக் கேட்ட போது, மகாவிஷ்ணு, “ஆதிசேஷா! பூலோகத்திலுள்ள தில்லைவனத்தில் சிவனின் நடனக்காட்சியைப் பார்த்தேன். அந்த மகிழ்ச்சியில் என் உடல் பூரித்தது. அதனால் பாரம் அதிகமானது!” என்றார்.
    அந்தக்காட்சியைக் காண ஆதிசேஷன் விருப்பம் கொண்டார். விஷ்ணுவும் அனுமதித்தார். பூலோகத்தில் பிறக்க வேண்டுமானால் ஒரு தாய் தந்தை வேண்டுமல்லவா! தங்களுக்கு ஆதிசேஷன் பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என்று அத்திரி மகரிஷியும், அவர் மனைவி அனுசூயாவும் விஷ்ணுவிடம் வரம் பெற்றிருந்தனர். அந்த தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு பதஞ்சலி என்னும் பெயரிடப்பட்டது.
    வியாக்ரபாதர் தவம் செய்யும் வனத்திற்குச் சென்று அவரைச் சந்தித்த பதஞ்சலி, சிவனின் நடனத்தைக் காணும் ஆவலைத் தெரிவித்தார். இருவரும், சிவபெருமான் நடன தரிசனம் தரும் நன்னாளுக்காகக் காத்திருந்தனர். மார்கழி திருவாதிரையன்று பேரொளி ஒன்று அவர்கள் கண் முன் விரிந்தது. நந்திகேஸ்வரருடன் கருணையே வடிவான சிவன் எழுந்தருளினார். உமையவள் சிவகாமி இறைவனின் அருகில் நின்றாள். அப்போது சிவன் ஆனந்த நடனம் ஆடினர். வியாக்ரபாதரும், பதஞ்சலியும் ஈசனின் திருநடனம் கண்டு மகிழ்ந்தனர். நடராஜா என்று போற்றி மகிழ்ந்தனர்.
    அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
    அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
    தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
    திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
    கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
    கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
    பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
    இத்தோடு முடிந்ததா வியாக்ர பாதரின் தரிசனம்? அது தான் இல்லை…
    வியாக்ரபாத முனிவரை பற்றி ரிஷிகள் தரிசனத்தில் பதிவளிக்கலாம் என்று முடிவு செய்து நாம் பதிவை தயாரித்துக்கொண்டிருக்கும்போதே அவரது திருச்சமாதியை தரிசிக்கும் பொன்னான வாய்ப்பு கிடைத்தது.
    எங்கே? எப்படி?? எப்போது???
    அதை தனிப் பதிவாக அளிப்பதே பொருத்தம்.
    அடுத்த வாரம்… புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்பட்ட வியாக்ரபாதரின் திருச்சமாதி – ஒரு நேரடி அனுபவம்!
    (ரிஷிகள் தரிசனம் தொடரும்)
    - See more at: http://rightmantra.com/?p=12870#sthash.TspnQLE7.dpuf
Working...
X