Announcement

Collapse
No announcement yet.

கீதை – ஆறாவது அத்தியாயம் - தியான யோகம் - 5[3]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – ஆறாவது அத்தியாயம் - தியான யோகம் - 5[3]

    கீதை – ஆறாவது அத்தியாயம் - தியான யோகம் - 6[3]

    Continued

    ________________________________________
    चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवद्दृढम्।
    तस्याहं निग्रहं मन्ये वायोरिव सुदुष्करम्॥३४॥
    சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி² ப³லவத்³த்³ருட⁴ம்|
    தஸ்யாஹம் நிக்³ரஹம் மந்யே வாயோரிவ ஸுது³ஷ்கரம் ||6-34||
    ஹி க்ருஷ்ண = ஏனெனில் கண்ணா!
    மந: சஞ்சலம் = மனம் சஞ்சலமுடையது
    ப்ரமாதி² = தவறும் இயல்பினது
    ப³லவத் த்³ருட⁴ம் = வலியது; உரனுடையது
    தஸ்ய நிக்³ரஹம் வாயு: இவ = அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல்
    ஸுது³ஷ்கரம் அஹம் மந்யே = மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் நினைக்கிறேன்
    கண்ணா, மனம் சஞ்சலமுடையது; தவறும் இயல்பினது, வலியது; உரனுடையது. அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல் மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் மதிக்கிறேன்.
    ________________________________________
    श्रीभगवानुवाच
    असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम्।
    अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते॥३५॥
    ஸ்ரீப⁴க³வாநுவாச
    அஸம்ஸ²யம் மஹாபா³ஹோ மநோ து³ர்நிக்³ரஹம் சலம்|
    அப்⁴யாஸேந து கௌந்தேய வைராக்³யேண ச க்³ருஹ்யதே ||6-35||
    ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
    மஹாபா³ஹோ = பெருந்தோளாய்
    அஸம்ஸ²யம் மந: சலம் = ஐயமின்றி மனம் சலனமுடையதுதான்
    து³ர்நிக்³ரஹம் து = கட்டுதற்கரியது தான்
    கௌந்தேய! அப்⁴யாஸேந வைராக்³யேண ச = குந்தியின் மகனே! பழக்கத்தாலும், வைராக்கியத்தாலும்
    க்³ருஹ்யதே = வசப் படுத்தப் படுகிறது.
    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பெருந்தோளாய், மனம் கட்டுதற்கரியதுதான். சலனமுடையதுதான்; ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே, அதைப் பழக்கத்தாலும், விருப்பமின்மையாலும் கட்டி விடலாம்.
    ________________________________________
    असंयतात्मना योगो दुष्प्राप इति मे मतिः।
    वश्यात्मना तु यतता शक्योऽवाप्तुमुपायतः॥३६॥
    அஸம்யதாத்மநா யோகோ³ து³ஷ்ப்ராப இதி மே மதி:|
    வஸ்²யாத்மநா து யததா ஸ²க்யோऽவாப்துமுபாயத: ||6-36||
    அஸம்யத ஆத்மநா = தன்னைக் கட்டாதவன்
    யோக³: து³ஷ்ப்ராப = யோக மெய்துதல் அரிது
    து வஸ்²ய ஆத்மநா யததா உபாயத:= தன்னைக் கட்டியவன் முயற்சியாலும் உபாயத்தாலும்
    அவாப்தும் ஸ²க்ய: = யோகத்தை அடைவதும் சாத்தியமானது
    இதி மே மதி: = என்று நான் கருதுகிறேன்
    தன்னைக் கட்டாதவன் யோக மெய்துதல் அரிதென்று நான் கருதுகிறேன். தன்னைக் கட்டியவன் முயற்சியாலும் உபாயத்தாலும் அதை எய்த வல்லான்.
    ________________________________________
    अर्जुन उवाच
    अयतिः श्रद्धयोपेतो योगाच्चलितमानसः।
    अप्राप्य योगसंसिद्धिं कां गतिं कृष्ण गच्छति॥३७॥
    அர்ஜுந உவாச
    அயதி: ஸ்²ரத்³த⁴யோபேதோ யோகா³ச்சலிதமாநஸ:|
    அப்ராப்ய யோக³ஸம்ஸித்³தி⁴ம் காம் க³திம் க்ருஷ்ண க³ச்ச²தி ||6-37||
    அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்
    ஸ்²ரத்³த⁴யா உபேத: = யோகத்தில் சிரத்தை உள்ளவனாக இருந்தும்
    அயதி: யோகா³த் சலிதமாநஸ:= தன்னைக் கட்டாமையால் யோகத்தினின்றும் மனம் வழுவியவன்
    யோக³ஸம்ஸித்³தி⁴ம் அப்ராப்ய = யோகத்தில் தோற்றுப் போய்
    காம் க³திம் க³ச்ச²தி க்ருஷ்ண! = என்ன கதியடைகிறான் கண்ணா!
    அர்ஜுனன் சொல்லுகிறான்: நம்பிக்கையுடையோ னெனினும், தன்னைக் கட்டாமையால் யோகத்தினின்றும் மனம் வழுவியவன், யோகத்தில் தோற்றுப் போய், அப்பால் என்ன கதியடைகிறான், கண்ணா?
    ________________________________________
    कच्चिन्नोभयविभ्रष्टश्छिन्नाभ्रमिव नश्यति।
    अप्रतिष्ठो महाबाहो विमूढो ब्रह्मणः पथि॥३८॥
    கச்சிந்நோப⁴யவிப்⁴ரஷ்டஸ்²சி²ந்நாப்⁴ரமிவ நஸ்²யதி|
    அப்ரதிஷ்டோ² மஹாபா³ஹோ விமூடோ⁴ ப்³ரஹ்மண: பதி² ||6-38||
    மஹாபா³ஹோ ப்³ரஹ்மண: = பெருந்தோளாய்! பிரம்மத்தை அடைகின்ற
    பதி² விமூடோ⁴ = மார்க்கத்தில் வழி தெரியாமல் மயங்கி
    அப்ரதிஷ்ட²: = உறுதியற்றவனாக
    உப⁴ய விப்⁴ரஷ்ட = இரண்டுங் கெட்டவனாக
    சி²ந்ந அப்⁴ரம் இவ = உடைந்த மேகம்போல்
    கச்சித் ந நஸ்²யதி = அழிந்து போக மாட்டானா?
    ஒருவேளை அவன் இரண்டுங் கெட்டவனாய், உடைந்த மேகம்போல் அழிகிறானோ? பெருந்தோளாய், உறுதியற்றவனாய், பிரம்ம நெறியிலே குழப்பமெய்திய மூடன் யாதாகிறான்?
    ________________________________________
    एतन्मे संशयं कृष्ण छेत्तुमर्हस्यशेषतः।
    त्वदन्यः संशयस्यास्य छेत्ता न ह्युपपद्यते॥३९॥
    ஏதந்மே ஸம்ஸ²யம் க்ருஷ்ண சே²த்துமர்ஹஸ்யஸே²ஷத:|
    த்வத³ந்ய: ஸம்ஸ²யஸ்யாஸ்ய சே²த்தா ந ஹ்யுபபத்³யதே ||6-39||
    க்ருஷ்ண! மே ஏதத் ஸம்ஸ²யம் = கண்ணா! எனக்குள்ளே இந்த ஐயத்தை
    அஸே²ஷத: சே²த்தும் அர்ஹஸி = மீதமின்றி போக்க (நீயே) தகுதியானவன்
    ஹி அஸ்ய ஸம்ஸ²யஸ்ய சே²த்தா = ஏனெனில் இந்த சந்தேகத்தை போக்குபவர்
    த்வத் அந்ய: உபபத்³யதே = நின்னையன்றி வேறெவருமிலர்
    கண்ணா, எனக்குள்ளே இந்த ஐயத்தை நீ அறுத்து விடுக. நின்னையன்றி இந்த ஐயத்தை யறுப்போர் வேறெவருமிலர்.
    ________________________________________
    श्रीभगवानुवाच
    पार्थ नैवेह नामुत्र विनाशस्तस्य विद्यते।
    न हि कल्याणकृत्कश्चिद्दुर्गतिं तात गच्छति॥४०॥
    ஸ்ரீப⁴க³வாநுவாச
    பார்த² நைவேஹ நாமுத்ர விநாஸ²ஸ்தஸ்ய வித்³யதே|
    ந ஹி கல்யாணக்ருத்கஸ்²சித்³து³ர்க³திம் தாத க³ச்ச²தி ||6-40||
    ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
    பார்த² = பார்த்தா
    தஸ்ய இஹ விநாஸ² ந வித்³யதே = அவனுக்கு இவ்வுலகிலும் அழிவில்லை
    அமுத்ர ஏவ ந = மேலுலகத்திலும் இல்லை
    தாத = பிரியமானவனே (மகனே!)
    ஹி கல்யாணக்ருத் = ஏனெனில் ஆன்மீக மேம்பாட்டிற்காக
    கஸ்²சித் து³ர்க³திம் ந க³ச்ச²தி = எவனும் கெட்ட கதியடைய மாட்டான்
    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பார்த்தா, அவனுக்கு இவ்வுலகிலும், மேலுலகத்திலும் அழிவில்லை; மகனே, நன்மை செய்வோன் எவனும் கெட்ட கதியடைய மாட்டான்.
    ________________________________________
    प्राप्य पुण्यकृतां लोकानुषित्वा शाश्वतीः समाः।
    शुचीनां श्रीमतां गेहे योगभ्रष्टोऽभिजायते॥४१॥
    ப்ராப்ய புண்யக்ருதாம் லோகாநுஷித்வா ஸா²ஸ்²வதீ: ஸமா:|
    ஸு²சீநாம் ஸ்ரீமதாம் கே³ஹே யோக³ப்⁴ரஷ்டோऽபி⁴ஜாயதே ||6-41||
    யோக³ப்⁴ரஷ்ட: = யோகத்தில் தவறியவன்
    புண்யக்ருதாம் லோகாந் ப்ராப்ய = புண்ணியம் செய்வோரின் உலகங்களை யெய்தி
    ஸா²ஸ்²வதீ: ஸமா: ஊஷித்வா = அங்கு கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து
    ஸு²சீநாம் ஸ்ரீமதாம் கே³ஹே = தூய்மையுடைய செல்வர்களின் வீட்டில்
    அபி⁴ஜாயதே = பிறக்கிறான்.
    யோகத்தில் தவறியவன், புண்ணியம் செய்வோரின் உலகங்களை யெய்தி, அங்கு கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து, தூய்மையுடைய செல்வர்களின் வீட்டில் பிறக்கிறான்.
    ________________________________________
    अथवा योगिनामेव कुले भवति धीमताम्।
    एतद्धि दुर्लभतरं लोके जन्म यदीदृशम्॥४२॥
    அத²வா யோகி³நாமேவ குலே ப⁴வதி தீ⁴மதாம்|
    ஏதத்³தி⁴ து³ர்லப⁴தரம் லோகே ஜந்ம யதீ³த்³ருஸ²ம் ||6-42||
    அத²வா தீ⁴மதாம் யோகி³நாம் = அல்லது, புத்திமான்களாகிய யோகிகளின்
    குலே ஏவ ப⁴வதி = குலத்திலேயே பிறக்கிறான்
    ஈத்³ருஸ²ம் யத் எதத் ஜன்ம = இதுபோன்ற பிறவியெய்துதல்
    ஹி லோகே து³ர்லப⁴தரம் = ஐயமின்றி மிகவும் அரிது
    அல்லது, புத்திமான்களாகிய யோகிகளின் குலத்திலேயே பிறக்கிறான். இவ்வுலகில் இதுபோன்ற பிறவியெய்துதல் மிகவும் அரிது. 42
    ________________________________________
    तत्र तं बुद्धिसंयोगं लभते पौर्वदेहिकम्।
    यतते च ततो भूयः संसिद्धौ कुरुनन्दन॥४३॥
    தத்ர தம் பு³த்³தி⁴ஸம்யோக³ம் லப⁴தே பௌர்வதே³ஹிகம்|
    யததே ச ததோ பூ⁴ய: ஸம்ஸித்³தௌ⁴ குருநந்த³ந ||6-43||
    தத்ர தம் பௌர்வதே³ஹிகம் = அங்கே அவன் பூர்வ சரீரத்துக்குரிய
    பு³த்³தி⁴ஸம்யோக³ம் = புத்தியைப் பெறுகிறான்
    குருநந்த³ந = குருநந்தனா
    தத: பூ⁴ய: ஸம்ஸித்³தௌ⁴ = அப்பால் அவன் மறுபடியும் வெற்றிக்கு
    யததே = முயற்சி செய்கிறான்.
    அங்கே அவன் பூர்வ சரீரத்துக்குரிய புத்தியைப் பெறுகிறான். குருநந்தனா, அப்பால் அவன் மறுபடியும் வெற்றிக்கு முயற்சி செய்கிறான்.
    ________________________________________
    पूर्वाभ्यासेन तेनैव ह्रियते ह्यवशोऽपि सः।
    जिज्ञासुरपि योगस्य शब्दब्रह्मातिवर्तते॥४४॥
    பூர்வாப்⁴யாஸேந தேநைவ ஹ்ரியதே ஹ்யவஸோ²ऽபி ஸ:|
    ஜிஜ்ஞாஸுரபி யோக³ஸ்ய ஸ²ப்³த³ப்³ரஹ்மாதிவர்ததே ||6-44||
    ஸ: அவஸ: = அவன் தன் வசமின்றியும்
    தேந பூர்வாப்⁴யாஸேந ஏவ ஹ்ரியதே = பண்டைப் பழக்கத்தால் இழுக்கப்படுகிறான்
    யோக³ஸ்ய ஜிஜ்ஞாஸு அபி = யோகத்தை அறிய வேண்டுமென்று விரும்பவன் கூட
    ஸ²ப்³த³ ப்³ரஹ்ம = ஒருவன் ஒலியுலகத்தைக் (வேதத்தையும்) கடந்து
    அதிவர்ததே = செல்லுகிறான்
    பண்டைப் பழக்கத்தால் அவன் தன் வசமின்றியும் இழுக்கப்படுகிறான். யோகத்தை அறிய வேண்டுமென்ற விருப்பத்தாலேயே ஒருவன் ஒலியுலகத்தைக் கடந்து செல்லுகிறான்.
    ________________________________________
    प्रयत्नाद्यतमानस्तु योगी संशुद्धकिल्बिषः।
    अनेकजन्मसंसिद्धस्ततो याति परां गतिम्॥४५॥
    ப்ரயத்நாத்³யதமாநஸ்து யோகீ³ ஸம்ஸு²த்³த⁴கில்பி³ஷ:|
    அநேகஜந்மஸம்ஸித்³த⁴ஸ்ததோ யாதி பராம் க³திம் ||6-45||
    ஸம்ஸு²த்³த⁴ கில்பி³ஷ: = பாவம் நீங்கியவனாய்
    து ப்ரயத்நாத் யதமாந = முழு முயற்சியுடன் பயிற்சி செய்யும்
    யோகீ³ அநேகஜந்ம ஸம்ஸித்³த⁴: = யோகி பல பிறவிகளின் வெற்றிப் பயனாகிய
    தத: பராம் க³திம் யாதி = அக்கணமே பரகதியை அடைகிறான்
    பாவம் நீங்கியவனாய், ஊன்றி முயல்வானேயாயின், யோகி பல பிறவிகளின் வெற்றிப் பயனாகிய பரகதியை அப்போதடைகிறான்.
    ________________________________________
    तपस्विभ्योऽधिको योगी ज्ञानिभ्योऽपि मतोऽधिकः।
    कर्मिभ्यश्चाधिको योगी तस्माद्योगी भवार्जुन॥४६॥
    தபஸ்விப்⁴யோऽதி⁴கோ யோகீ³ ஜ்ஞாநிப்⁴யோऽபி மதோऽதி⁴க:|
    கர்மிப்⁴யஸ்²சாதி⁴கோ யோகீ³ தஸ்மாத்³யோகீ³ ப⁴வார்ஜுந ||6-46||
    யோகீ³ தபஸ்விப்⁴ய: அதி⁴க:= யோகி தவஞ் செய்வோரைக் காட்டிலும் சிறந்தோன்
    ஜ்ஞாநிப்⁴ய: அபி அதி⁴க: மத: = ஞானிகளிலும் அவன் சிறந்தோனாக கருதப்படுகிறான்
    ச கர்மிப்⁴ய: யோகீ³ அதி⁴க: = கர்மிகளிலும் அவன் சிறந்தோன்
    தஸ்மாத்³ யோகீ³ ப⁴வ அர்ஜுந! = ஆதலால், அர்ஜுனா, யோகியாகுக
    தவஞ் செய்வோரைக் காட்டிலும் யோகி சிறந்தோன்; ஞானிகளிலும் அவன் சிறந்தோனாகக் கருதப்படுகிறான்; கர்மிகளிலும் அவன் சிறந்தோன்; ஆதலால், அர்ஜுனா, யோகியாகுக.
    ________________________________________
    योगिनामपि सर्वेषां मद्गतेनान्तरात्मना।
    श्रद्धावान्भजते यो मां स मे युक्ततमो मतः॥४७॥
    யோகி³நாமபி ஸர்வேஷாம் மத்³க³தேநாந்தராத்மநா|
    ஸ்²ரத்³தா⁴வாந்ப⁴ஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத: ||6-47||
    ஸர்வேஷாம் யோகி³நாம் அபி = மற்றெந்த யோகிகளெல்லாரிலும்
    ய: ஸ்²ரத்³தா⁴வாந் = எவனொருவன் சிரத்தையுடைய யோகியோ
    மத்³க³தேந அந்தராத்மநா = என்னிடம் ஈடுபாடு கொண்ட உள்ளத்தால்
    மாம் ப⁴ஜதே = என்னை போற்றுகிறானோ
    ஸ: மே யுக்ததம மத: = அந்த யோகியே மேலான யோகியென்பது என்னுடைய கொள்கை
    மற்றெந்த யோகிகளெல்லாரிலும், எவனொருவன் அந்தராத்மாவில் என்னைப் புகுத்தி என்னை நம்பிக்கையுடன் போற்றுகிறானோ அவன், மிக மேலான யோகியென்பது என்னுடைய கொள்கை.
    ________________________________________
    ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
    श्रिकृष्णार्जुन सम्वादे ध्यानयोगो नाम षष्टोऽध्याय: || 6 ||
    ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
    ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
    உரையாடலில் ‘தியான யோகம்’ எனப் பெயர் படைத்த
    ஆறாம் அத்தியாயம் நிறைவுற்றது.

    Source:Sangatham.com
    Last edited by soundararajan50; 10-08-14, 08:43.
Working...
X