Announcement

Collapse
No announcement yet.

தியாகராஜர்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தியாகராஜர்!

    தியாகராஜர் மன்முறுகித் தொழுது வணங்கும் ராமர், சீதை பெயர்களே அவருடைய பெற்றோருக்கும் இருந்ததுதான் அதிசயம். ' சீதம்ம மாயம்ம, ஸ்ரீராமுடு நாதன்றி ' என்ற பாடலில், சீதம்மா என் தாய், ஸ்ரீராமர் என் தந்தை என்ற பொருள்பட அவர் பாடியிருப்பது, இரட்டை அர்த்ததில் அழைத்தது.
    சரபொஜி மகாராஜா தன்னைப் போற்றிப்பாட அழைத்த போது போகாத தியாகராஜர், ' மனிதர்களைப் பாடும் நரஸ்துதி சுகமா? என்ற அர்த்தம் கொண்ட
    ' நிதி சால சுகமா ' கீர்த்தனையைப் பாடினார். கோபமடைந்த அவரது தமையனார், தியாகராஜர் பூஜித்து வந்த சீதா, ராம, லஷ்மண விக்ரகங்களைத் தூக்கி காவிரியில் எறிந்துவிட்டார். அதில் வேதனையுற்ற தியாகராஜர், ' உன்னை எங்கெல்லாம் தேடுவேன்? ' என்ற வேதனை ஒலிக்கும் ' தே நெந்துவெத குதுரா ' கீர்த்தனையைப் பாடினார். பின்னர் ராமபிரான் அருளால் அந்த விக்ரகங்களைக் கண்டுபிடித்து மகிழ்ச்சியடைந்தார்.
    -- என்.கணேசன் எழுதிய ' சங்கீத மும்மூர்த்திகள் ' என்ற நூலிலிருந்து. -- பிரபா.
    -- தினமலர் ' புத்தக உலகம் ' 18 - 9 - 2013.
Working...
X