Announcement

Collapse
No announcement yet.

இதையும் தெரிஞ்சுக்கோங்க!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • இதையும் தெரிஞ்சுக்கோங்க!

    * கீரிக்கு ' நகுஷம் ' என்பது வடமொழிப் பெயர்.
    * இரவில் அதீக சுறுசுறுப்புடன் இரைதேடும் உயிரினம் கீரி.
    * உறங்கும்போது தலையையும், வாலையும் வயிற்றில் வைத்துத் தூங்குவது இதன் பழக்கம்.
    * பாம்பினைக் கழுத்தில் கடித்துத் துண்டாக்கிக் கொல்லும் உயிரினம் கீரி.
    * புளியம் பழத்திலோ, இலைகளிலோ கவுரி தேவியை ஆவாகனம் செய்து பூஜை செய்வது திருந்துருணி கவுரி விரதம் எனப்படும்.
    * மரக்கிளைகளில் உள்ள இலைகள் தலை தாழ்த்தி உறங்கும், புளிய மரத்தை தூங்குமூஞ்சி மரத்தைப் பார்த்தால் தெளிவாகப் புரியும்.
    * வைணவ திவ்ய தேசங்களில், திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஆழ்வார்திருநகரி, திருத்தலதில் உள்ள தலவிருட்சத்துக்கு ஏழு கிளைகள் உண்டு.
    இதன் கிளைகளில் உள்ள இலைகள் இரவில் உறங்குவது இல்லை.
    * ஸ்ரீநம்மாழ்வாரின் பூத உடல் இப்புளிய கரத்தடியில் புதைக்கப்பட்டு, அங்கேயே ஆழ்வார்க்கு கோயில் அமைக்கப்பட்டது.
    * கொங்கு நாட்டில், கோவைக்கு அருகில் உள்ள பேரூர்பட்டிசரம் புகழ் பெற்றதாகும். இங்கே இரண்டு அரிய மரங்கள் உள்ளன. ஒன்று இறவாப் பனை
    மற்றொன்று பிறவாப் புளி. புளியங்கொட்டைகளை நட்டால் அவை முளைக்கும். இங்குள்ள புளியமரக் கொட்டைகளை நட்டால் முளைப்பதில்லை.
    -- தினமலர். பக்திமலர்களிலிருந்து.
Working...
X