Announcement

Collapse
No announcement yet.

ராம நாமம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ராம நாமம்

    கங்கைக்கரையில் இருந்த குடிலில் ஒரு சாதுகுடியிருந்தார். இளைஞர்ஒருவருக்கு அவரோடு பழகும் ஆர்வம் எழுந்தது. தினமும் அவரது குடிலுக்கு வந்து வேண்டிய உதவிகளைச் செய்தார். அவரது அன்பு உள்ளத்தைக் கண்ட சாது,உன் பக்தியை மெச்சுகிறேன். விலை மதிப்பில்லாத பொருள் ஒன்றைத் தர விரும்புகிறேன். இதைப் பாதுகாக்க வேண்டியது உன் கடமை, என்று சொல்லி அருகில் அழைத்தார். அவரின் காதில் ராம நாமத்தை மூன்று முறை ஜெபித்தார். இதை இயன்ற பொழுதெல்லாம் ஜெபித்துக் கொண்டே இரு! உன் வாழ்வு நலம் பெறும் என்று ஆசிர்வதித்தார். இளைஞனுக்கு மனதிற்குள், ஏதாவது விலை மதிப்பில்லாத பொருளைக் கொடுத்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஊரிலுள்ள அனைவரும் ஜெபிக்கக் கூடியது தானே இந்த ராமநாமம். இதை விலை மதிப்பில்லாதது என்றுசொல்கிறாரே! என்று எண்ணித் தயங்கி நின்றார். இளைஞரின் மனநிலை சாதுவுக்குப் புரிந்தது.இருந்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டார்.
    மறுநாள் இளைஞர், தன் சந்தேகத்தை சாதுவிடம் கேட்டு விட முடிவெடுத்து வந்தார். ஆனால், வந்தும்வராததுமாக, தன் கையில் இருந்த ஒரு கண்ணாடிக் கல்லை இளைஞரிடம் கொடுத்து, சந்தைக்குப் போய் அதன் விலை என்ன என அறிந்து வரும் படி அனுப்பினார்.சந்தையில் தென்பட்ட காய்கறி வியாபாரியிடம் கேட்டான் இளைஞன்.வியாபாரியோ, பார்ப்பதற்கு பளீரென மின்னும் இந்த கண்ணாடிக் கல் என்பிள்ளைகளின் விளையாட்டுக்கு பயன்படும். இதற்கு விலையாக தேவையான காய்கறிகளை வாங்கிக் கொள், என்றார். இளைஞர் சாதுவின்குடிலுக்கு வந்தார். இந்த கண்ணாடிக்கு ஈடாக காய்கறி வாங்கலாம் என்றார்.சரி! இப்போது காசுக்கடை வீதிக்குச் சென்று அவர்களின் எண்ணத்தை அறிந்து வா! என சாது அனுப்பி வைத்தார். அங்கிருந்தவர்கள், இதற்கு விலையாக ஆயிரம் ரூபாய் தரலாம் என்றார். இளைஞனோ, இதை விற்கும் நோக்கமில்லை. மதிப்பை அறியத் தான் இங்கு வந்தேன் என்று சொல்லி புறப்பட்டார்.இளைஞரும் சாதுவிடம் நடந்ததைச் சொன்னார்.சரி! நகை வியாபாரியைப் போய் சந்திப்போம். அவர் இந்த கல்லுக்கு என்ன மதிப்பு கொடுக்கிறார் என்று பார்க்கலாம் என்று அழைத்துச் சென்றார். நகை வியாபாரி அது வைரக்கல் என்பதை அறிந்து, பல ஆயிரம் தருவதாகச் சொன்னார். ஆளுக்கு ஆள் விலை மாறுவதைப் பார்த்தாயா? விலை மதிக்க முடியாத வைரக்கல் இது. உன் மனதை தெளிவுபடுத்தவே இதைச் செய்ய நேர்ந்தது. ராமநாமத்தை யாரும் ஜெபிக்கலாம். அதை சொல்பவர் எவ்விதம்மதிக்கிறாரோ, அதைப் பொறுத்து அதன் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்லும். உனக்கும் இந்த ராம நாமம் விலை மதிப்பில்லாததாக இருக்கட்டும், என்று சொல்லி ஆசியளித்தார்.
Working...
X