Announcement

Collapse
No announcement yet.

கணபதி நம் குணநிதி!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கணபதி நம் குணநிதி!

    ஆக., 29 - விநாயகர் சதுர்த்தி

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான கடவுள் விநாயகர். நம் மனதில் மட்டுமல்ல, நாம் செல்கிற வழியெல்லாம் ஆற்றங்கரை, அரசமரம், முச்சந்தி, தெருக்கோடி, முட்டுச்சந்து, சாலையோரம் என, எல்லா இடங்களிலும் அமர்ந்திருக்கும் இவரே, நமக்குத் துணையாக வருபவர். இவருக்கு பிரமாண்ட கோவில் வேண்டாம்; நினைக்கும் நேரத்தில் நினைத்த இடத்தில், மஞ்சள் பொடி, களிமண் என எதில் பிடித்து வைத்தாலும், அதில் ஆவாஹனம் ஆகி, நமக்கு அருள்பாலிப்பார்.
    ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் முன், அது தடையின்றி நடக்க, விநாயகரை வணங்கி அவருடைய அனுக்ரகத்தைக் வேண்டுகிறோம். அம்பாள் பண்டாசுரனை வதம் செய்யும் போது, அசுரனும், அவனுடைய சகாக்களும் எய்த பாணங்களை, தன் யந்திரத்தினால் வீழ்த்தி, தேவியை வெற்றி பெறச் செய்தார் விநாயகர் என்பதை, லலிதா சகஸ்ரநாமத்தில், 'மஹா கணேச நிர்பின்ன விக்னயந்த்ர ப்ரஹர்ஷிதா' என்ற நாமா மூலம் அறியலாம். இதன் மூலம், இக்கட்டான சூழ்நிலையில் ஒரு செயலை முடிக்க நினைப்பவர்கள், விநாயகரை வணங்கி அந்த காரியத்தை துவங்கினால், அவர் நல்லபடியாக முடித்து தருவார்.
    விநாயகருக்கு மிக எளிய உணவுகளே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. ஆனால், அந்த எளிய உணவுக்குள் மிகப்பெரிய தத்துவங்கள் புதைந்துள்ளன. அவருக்கு மிகவும் பிடித்தது மோதகம்; இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில், இது விநாயகருக்கு படைக்கப்படுகிறது.
    அதேபோல் கரும்பும் இவருக்கு பிடிக்கும்; இனித்தாலும் கடிப்பதற்கு கடினமானது கரும்பு. வாழ்க்கையும் இப்படித்தான், கஷ்டப்பட்டு உழைத்தால், இனிமையாக வாழலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இது படைக்கப்படுகிறது. அவல், பொரியை இவருக்கு படைப்பர்; ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருட்கள், வாழ்க்கையில் நாம் சந்திக்கிற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதை குறிக்கிறது.
    அம்பாளுக்கு நவராத்திரி போல, விநாயகருக்கும் நவராத்திரி உண்டு. விநாயகர் சதுர்த்தியைத் தொடர்ந்து வரும் ஒன்பது நாட்களை, 'விநாயகர் நவராத்திரி' என்பர். ஒரு காலத்தில், இந்ந ஒன்பது நாட்களும் விரதம் இருந்து விநாயகரை பூஜித்து, ஒரு விழாவாகவே கொண்டாடி உள்ளனர். இவ்விரதத்தை அனுஷ்டிப்போருக்கு நிகழ்கால வாழ்வில் செல்வமும், வாழ்வுக்குப் பின் மோட்சமும் கிடைக்கும் என்பர். குணநிதியான கணபதியின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!

    தி.செல்லப்பா
Working...
X