Announcement

Collapse
No announcement yet.

கீதை – எட்டாவது அத்தியாயம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – எட்டாவது அத்தியாயம்

    அக்ஷர பிரம்ம யோகம்

    முற்கூறிய நான்குவித பக்தர்களும் தனித்தனியே கைப்பற்ற வேண்டிய பக்தி வழிகளும் அவைகளுக்குள் வித்தியாசமும் கூறப்படுகின்றன. ஆக்ஞையினின்றும் ஆவி கிளம்புங்கால் எத்தகைய எண்ணம் மனிதனின் மனத்துக்குள் இருக்கின்றதோ அத்தகைய பலனையே மறுபிறவியில் பெறுவானாதலால் பக்தர்கள் இறக்கும் தருணத்தில் கடவுளைத் தியானித்திருப்பது அவசியம்.

    வாழ்நாட்களில் மனதுக்குக் கடவுளிடம் நிலைத்திருக்கும் பழக்கத்தை உண்டுபண்ணினால்தான் அம்மனம் மரண காலத்தில் கடவுளிடம் நிலைபெறும். ஆகையால் பக்தர் அனைவரும் தங்கள் வாழ்நாட்களில் மனதால் கடவுளைத் தியானம் செய்துகொண்டே தங்கள் கர்மங்களைச் செய்ய வேண்டும்.

    நான்காவது வகையான பக்தர்கள் பெறும் பரமபதம்தான் அழிவற்றது. மற்ற பலனெல்லாம் அழிவுற்றது. பக்தர்கள் இறந்தபிறகு ஆத்மா செல்லும் வழி இருவகைப்பட்டிருக்கும். ஒன்றில் சென்றால் என்றைக்கும் திரும்பி வராத வீட்டைப் பெறலாம். மற்றொன்றில் சென்றால், காலக் கிரமத்தில் திரும்பி வரவேண்டிய இடத்தை அடையலாம்.

    अर्जुन उवाच
    किं तद्ब्रह्म किमध्यात्मं किं कर्म पुरुषोत्तम ।
    अधिभूतं च किं प्रोक्तमधिदैवं किमुच्यते ॥८- १॥

    அர்ஜுந உவாச
    கிம் தத்³ப்³ரஹ்ம கிமத்⁴யாத்மம் கிம் கர்ம புருஷோத்தம |
    அதி⁴பூ⁴தம் ச கிம் ப்ரோக்தமதி⁴தை³வம் கிமுச்யதே || 8- 1||

    அர்ஜுந உவாச = அர்ஜுனன் செல்லுகிறான்
    புருஷோத்தம தத் ப்³ரஹ்ம கிம்? = புருஷோத்தமா, அந்த பிரம்மம் எது?
    அத்⁴யாத்மம் கிம் = ஆத்ம ஞானம் யாது?
    கிம் கர்ம = கர்மமென்பது யாது?
    அதி⁴பூ⁴தம் கிம் ப்ரோக்தம் = பூத ஞானம் என்று எது அழைக்கப் படுகிறது?
    அதி⁴தை³வம் கிம் உச்யதே = தேவ ஞானம் என்பது எதனை அழைக்கிறார்கள்?

    அர்ஜுனன் செல்லுகிறான்: அந்த பிரம்மம் எது? ஆத்ம ஞானம் யாது? புருஷோத்தம, கர்மமென்பது யாது? பூத ஞானம் யாது? தேவஞானம் என்பது எதனை?

    अधियज्ञः कथं कोऽत्र देहेऽस्मिन्मधुसूदन ।
    प्रयाणकाले च कथं ज्ञेयोऽसि नियतात्मभिः ॥८- २॥

    அதி⁴யஜ்ஞ: கத²ம் கோऽத்ர தே³ஹேऽஸ்மிந்மது⁴ஸூத³ந |
    ப்ரயாணகாலே ச கத²ம் ஜ்ஞேயோऽஸி நியதாத்மபி⁴: || 8- 2||

    மது⁴ஸூத³ந! அதி⁴யஜ்ஞ: அத்ர க: = யாகஞானம் என்பதென்ன?
    அஸ்மிந் தே³ஹே கத²ம் ? = இந்த தேகத்தில் எப்படி (இருக்கிறார்?)
    ச நியதாத்மபி⁴: = மேலும் தம்மைத் தாம் கட்டியவர்களால்
    ப்ரயாணகாலே கத²ம் ஜ்ஞேய: அஸி = இறுதிக் காலத்திலேனும் எவ்வாறு அறியப் படுகிறாய்?

    யாகஞானம் என்பதென்ன? தம்மைத் தாம் கட்டியவர்களால் இறுதிக் காலத்திலேனும் இவ்வுலகத்தில் நீ அறியப்படுவதெங்ஙனே?

    श्रीभगवानुवाच
    अक्षरं ब्रह्म परमं स्वभावोऽध्यात्ममुच्यते ।
    भूतभावोद्भवकरो विसर्गः कर्मसंज्ञितः ॥८- ३॥

    ஸ்ரீப⁴க³வாநுவாச
    அக்ஷரம் ப்³ரஹ்ம பரமம் ஸ்வபா⁴வோऽத்⁴யாத்மமுச்யதே |
    பூ⁴தபா⁴வோத்³ப⁴வகரோ விஸர்க³: கர்மஸம்ஜ்ஞித: || 8- 3||

    ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
    ப்³ரஹ்ம அக்ஷரம் பரமம் = அழிவற்ற பரம்பொருளே பிரம்மம்
    ஸ்வபா⁴வ: அத்⁴யாத்மம் உச்யதே = அதனியல்பை அறிதல் ஆத்ம ஞானமெனப்படும்
    பூ⁴தபா⁴வ: உத்³ப⁴வகர: = உயிர்த் தன்மையை விளைவிக்கும் இயற்கை
    விஸர்க³: கர்மஸம்ஜ்ஞித: = இயற்கை கர்மமெனப்படுகிறது

    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அழிவற்ற பரம்பொருளே பிரம்மம். அதனியல்பை அறிதல் ஆத்ம ஞானமெனப்படும். உயிர்த் தன்மையை விளைவிக்கும் இயற்கை கர்மமெனப்படுகிறது.

    अधिभूतं क्षरो भावः पुरुषश्चाधिदैवतम् ।
    अधियज्ञोऽहमेवात्र देहे देहभृतां वर ॥८- ४॥

    அதி⁴பூ⁴தம் க்ஷரோ பா⁴வ: புருஷஸ்²சாதி⁴தை³வதம் |
    அதி⁴யஜ்ஞோऽஹமேவாத்ர தே³ஹே தே³ஹப்⁴ருதாம் வர: || 8- 4||

    க்ஷரோ பா⁴வ: அதி⁴பூ⁴தம் = அழிவுபடும் இயற்கையைக் குறித்தது பூத ஞானம்
    புருஷ அதி⁴தை³வதம் ச = புருஷனைப் பற்றியது தேவ ஞானம்
    தே³ஹப்⁴ருதாம் வர: = உடம்பெடுத்தோரில் உயர்ந்தவனே!
    அத்ர தே³ஹே அஹம் ஏவ அதி⁴யஜ்ஞ: = உடம்புக்குள் என்னையறிதல் யாக ஞானம்

    அழிவுபடும் இயற்கையைக் குறித்தது பூத ஞானம். புருஷனைப் பற்றியது தேவ ஞானம். உடம்பெடுத்தோரில் உயர்ந்தவனே! உடம்புக்குள் என்னையறிதல் யாக ஞானம்.

    अन्तकाले च मामेव स्मरन्मुक्त्वा कलेवरम् ।
    यः प्रयाति स मद्भावं याति नास्त्यत्र संशयः ॥८- ५॥

    அந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம் |
    ய: ப்ரயாதி ஸ மத்³பா⁴வம் யாதி நாஸ்த்யத்ர ஸம்ஸ²ய: || 8- 5||

    ய: அந்தகாலே ச மாம் ஏவ ஸ்மரந் = எவன் இறுதிக் காலத்தில் எனது நினைவுடன்
    கலேவரம் முக்த்வா ப்ரயாதி = உடம்பைத் துறந்து கிளம்புகிறானோ (இறப்போன்)
    ஸ: மத்³பா⁴வம் யாதி = எனதியல்பை எய்துவான்
    நாஸ்தி அத்ர ஸம்ஸ²ய: = இதில் ஐயமில்லை.

    இறுதிக் காலத்தில் உடம்பைத் துறந்து எனது நினைவுடன் இறப்போன் எனதியல்பை எய்துவான். இதில் ஐயமில்லை.

    यं यं वापि स्मरन्भावं त्यजत्यन्ते कलेवरम् ।
    तं तमेवैति कौन्तेय सदा तद्भावभावितः ॥८- ६॥

    யம் யம் வாபி ஸ்மரந்பா⁴வம் த்யஜத்யந்தே கலேவரம் |
    தம் தமேவைதி கௌந்தேய ஸதா³ தத்³பா⁴வபா⁴வித: || 8- 6||

    கௌந்தேய! அந்தே = குந்தியின் மகனே! மரணத்தருவாயில்
    யம் யம் பா⁴வம் வா ஸ்மரந் அபி = எந்தெந்த ஸ்வரூபத்தை சிந்தித்த வண்ணமாய்
    கலேவரம் த்யதி = உடலைத் துறக்கின்றானோ
    ஸதா³ தத்³பா⁴வ பா⁴வித: = எப்போதும் அத்தன்மையிலே கருத்துடையவனாய்
    தம் தம் ஏவ ஏதி = அந்த அந்த ஸ்வரூபத்தையே அடைகிறான்

    ஒருவன் முடிவில் எவ்வெத் தன்மையை நினைப்பானாய் உடலைத் துறக்கின்றானோ, அவன் எப்போதும் அத்தன்மையிலே கருத்துடையவனாய் அதனையே எய்துவான்.

    तस्मात्सर्वेषु कालेषु मामनुस्मर युध्य च ।
    मय्यर्पितमनोबुद्धिर्मामेवैष्यस्यसंशयम् ॥८- ७॥

    தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு மாமநுஸ்மர யுத்⁴ய ச |
    மய்யர்பிதமநோபு³த்³தி⁴ர்மாமேவைஷ்யஸ்யஸம்ஸ²யம் || 8- 7||

    தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு = ஆதலால், எல்லாக் காலங்களிலும்
    மாம் அநுஸ்மர: = என்னை நினை
    யுத்⁴ய ச = போர் செய்
    மயி அர்பித மந: பு³த்³தி⁴: = என்னிடத்தே மனத்தையும், புத்தியையும் அர்ப்பணம் செய்வதனால்
    அஸம்ஸ²யம் மாம் ஏவ ஏஷ்யஸி = ஐயமின்றி என்னையே பெறுவாய்

    ஆதலால், எல்லாக் காலங்களிலும் என்னை நினை, போர் செய். என்னிடத்தே மனத்தையும், புத்தியையும் அர்ப்பணம் செய்வதனால் என்னையே பெறுவாய்.

    अभ्यासयोगयुक्तेन चेतसा नान्यगामिना ।
    परमं पुरुषं दिव्यं याति पार्थानुचिन्तयन् ॥८- ८॥

    அப்⁴யாஸயோக³யுக்தேந சேதஸா நாந்யகா³மிநா |
    பரமம் புருஷம் தி³வ்யம் யாதி பார்தா²நுசிந்தயந் || 8- 8||

    பார்த²! ந அந்ய கா³மிநா = பார்த்தா! வேறிடஞ் செல்ல விரும்பாமல்
    யோக³ அப்⁴யாஸ யுக்தேந சேதஸா = யோகம் பயிலும் சித்தத்துடன்
    அநுசிந்தயந் = சிந்தனை செய்து கொண்டிருப்போன்
    தி³வ்யம் பரமம் புருஷம் = தேவனாகிய பரம புருஷனை
    யாதி = அடைகிறான்.

    வேறிடஞ் செல்லாமலே யோகம் பயிலும் சித்தத்துடன் சிந்தனை செய்து கொண்டிருப்போன் தேவனாகிய பரம புருஷனை அடைகிறான்.

    कविं पुराणमनुशासितारमणोरणीयांसमनुस्मरेद्यः ।
    सर्वस्य धातारमचिन्त्यरूपमादित्यवर्णं तमसः परस्तात् ॥८- ९॥

    கவிம் புராணமநுஸா²ஸிதாரமணோரணீயாம்ஸமநுஸ்மரேத்³ய: |
    ஸர்வஸ்ய தா⁴தாரமசிந்த்யரூபமாதி³த்யவர்ணம் தமஸ: பரஸ்தாத் || 8- 9||

    கவிம் புராணம் = அறிவாளியானவரை, பழமையானவரை
    அநுஸா²ஸிதாரம் = எல்லாவற்றையும் ஆள்பவரை
    அணோ: அணீயாம்ஸம் = அணுவைக் காட்டிலும் நுண்ணியவரை
    ஸர்வஸ்ய தா⁴தாரம் = எல்லாவற்றையும் தாங்குபவரை
    ஆதி³த்யவர்ணம் = சூரியனின் நிறம் கொண்டிருப்பவரை
    அசிந்த்யரூபம் = எண்ணுதற்கரிய வடிவுடையவரை
    தமஸ: பரஸ்தாத் = அஞ்ஞான இருளுக்கு அப்பற்பட்டவரை
    ய: அநுஸ்மரேத் = எவன் நினைக்கிறானோ

    கவியை, பழையோனை, ஆள்வோனை, அணுவைக் காட்டிலும் அணுவை, எல்லாவற்றையும் தரிப்பவனை எண்ணுதற்கரிய வடிவுடையோனை, இருளுக்கப்பால் கதிரோனது நிறங்கொண்டிருப்பானை, எவன் நினைக்கின்றானோ,
Working...
X