Announcement

Collapse
No announcement yet.

கீதை – எட்டாவது அத்தியாயம்-8[2]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – எட்டாவது அத்தியாயம்-8[2]

    அக்ஷர பிரம்ம யோகம் - Continued


    प्रयाणकाले मनसाचलेन भक्त्या युक्तो योगबलेन चैव ।
    भ्रुवोर्मध्ये प्राणमावेश्य सम्यक् स तं परं पुरुषमुपैति दिव्यम् ॥८- १०॥

    ப்ரயாணகாலே மநஸாசலேந ப⁴க்த்யா யுக்தோ யோக³ப³லேந சைவ |
    ப்⁴ருவோர்மத்⁴யே ப்ராணமாவேஸ்²ய ஸம்யக் ஸ தம் பரம் புருஷமுபைதி தி³வ்யம் || 8- 10||

    ப்ரயாணகாலே = இறுதிக் காலத்தில்
    அசலேந மநஸா = அசைவற்ற மனத்துடன்
    ப்⁴ருவோ: மத்⁴யே ப்ராணம் ஸம்யக் ஆவேஸ்²ய = புருவங்களிடையே உயிரை நன்கேற்றி
    ப⁴க்த்யா யோக³ப³லேந ச யுக்த: = பக்தியுடனும், யோக பலத்துடனும் (நினைத்துக் கொண்டு)
    தம் தி³வ்யம் பரம் புருஷம் உபைதி = அவன் அந்தக் கடவுளாகிய பரம புருஷனை அடைகிறான்

    இறுதிக் காலத்தில் அசைவற்ற மனத்துடன், புருவங்களிடையே உயிரை நன்கேற்றி, பக்தியுடனும், யோக பலத்துடனும், எவன் நினைக்கிறானோ அவன் அந்தக் கடவுளாகிய பரம புருஷனை அடைகிறான்.

    यदक्षरं वेदविदो वदन्ति विशन्ति यद्यतयो वीतरागाः ।
    यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण प्रवक्ष्ये ॥८- ११॥

    யத³க்ஷரம் வேத³விதோ³ வத³ந்தி விஸ²ந்தி யத்³யதயோ வீதராகா³: |
    யதி³ச்ச²ந்தோ ப்³ரஹ்மசர்யம் சரந்தி தத்தே பத³ம் ஸங்க்³ரஹேண ப்ரவக்ஷ்யே || 8- 11||

    யத் அக்ஷரம் வேத³வித³: வத³ந்தி = எந்த நிலையை வேதமுணர்ந்தோர் அழிவற்ற தென்பர்
    வீதராகா³: யதய: யத் விஸ²ந்தி = விருப்பமற்ற முனிகள் எதனுட் புகுவர்
    யத் இச்ச²ந்த: ப்³ரஹ்மசர்யம் சரந்தி = எதை விரும்பி பிரம்மச்சரிய விரதம் காக்கப்படும்
    தத் பத³ம் தே = அந்த பதத்தைப் பற்றி உனக்கு
    ஸங்க்³ரஹேண ப்ரவக்ஷ்யே = சுருக்கமாகச் சொல்லுகிறேன்

    எந்த நிலையை வேதமுணர்ந்தோர் அழிவற்ற தென்பர், விருப்பமற்ற முனிகள் எதனுட் புகுவர். எதை விரும்பி பிரம்மச்சரிய விரதம் காக்கப்படும், அந்த நிலையை உனக்குச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்.

    सर्वद्वाराणि संयम्य मनो हृदि निरुध्य च ।
    मूर्ध्न्याधायात्मनः प्राणमास्थितो योगधारणाम् ॥८- १२॥

    ஸர்வத்³வாராணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி³ நிருத்⁴ய ச |
    மூர்த்⁴ந்யாதா⁴யாத்மந: ப்ராணமாஸ்தி²தோ யோக³தா⁴ரணாம் || 8- 12||

    ஸர்வத்³வாராணி ஸம்யம்ய = எல்லா வாயில்களையும் நன்கு கட்டி
    மந: ஹ்ருதி³ நிருத்⁴ய = மனத்தை உள்ளத்தில் நிறுத்தி
    ப்ராணம் மூர்த்⁴நி ஆதா⁴ய = உயிரைத் தலையின் உச்சியில் நிலையுறுத்தி
    ஆத்மந: யோக³தா⁴ரணாம் ஸ்தி²த: = யோக தாரணையில் உறுதி பெற்று

    எல்லா வாயில்களையும் நன்கு கட்டி, மனத்தை உள்ளத்தில் நிறுத்தி, உயிரைத் தலையின் உச்சியில் நிலையுறுத்தி யோக தாரணையில் உறுதி பெற்று,

    ओमित्येकाक्षरं ब्रह्म व्याहरन्मामनुस्मरन् ।
    यः प्रयाति त्यजन्देहं स याति परमां गतिम् ॥८- १३॥

    ஓமித்யேகாக்ஷரம் ப்³ரஹ்ம வ்யாஹரந்மாமநுஸ்மரந் |
    ய: ப்ரயாதி த்யஜந்தே³ஹம் ஸ யாதி பரமாம் க³திம் || 8- 13||

    ஓம் இதி ஏகாக்ஷரம் ப்³ரஹ்ம = ஓம் என்ற பிரம்ம எழுத்து ஒன்றையே
    வ்யாஹரந் மாம் அநுஸ்மரந் = ஜபித்துக்கொண்டு என்னை ஸ்மரிப்பவனாய்
    ய: தே³ஹம் த்யஜந் ப்ரயாதி = உடம்பைத் துறந்து
    பரமாம் க³திம் யாதி = பரமகதி பெறுகிறான்

    ஓம் என்ற பிரம்ம எழுத்து ஒன்றையே ஜபித்துக்கொண்டு என்னை ஸ்மரிப்பவனாய் உடம்பைத் துறப்போன் பரமகதி பெறுகிறான்.

    अनन्यचेताः सततं यो मां स्मरति नित्यशः ।
    तस्याहं सुलभः पार्थ नित्ययुक्तस्य योगिनः ॥८- १४॥

    அநந்யசேதா: ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஸ²: |
    தஸ்யாஹம் ஸுலப⁴: பார்த² நித்யயுக்தஸ்ய யோகி³ந: || 8- 14||

    பார்த²: ய: = பார்த்தா! எவன்
    அநந்யசேதா: = பிரிது நினைப்பின்றி
    நித்யஸ²: ஸததம் மாம் ஸ்மரதி = என்னை எப்பொழுதும் நினைக்கிறானோ
    நித்யயுக்தஸ்ய தஸ்ய யோகி³ந: = அந்த நித்தியமாக யோகத்தில் இசைந்திருக்கும் யோகிக்கு
    அஹம் ஸுலப⁴: = நான் எளிதில் அகப்படுவேன்

    நித்திய யோகத் திசைந்து, பிரிது நினைப்பின்றி என்னை எப்பொழுதும் எண்ணும் யோகிக்கு நான் எளிதில் அகப்படுவேன், பார்த்தா.

    मामुपेत्य पुनर्जन्म दुःखालयमशाश्वतम् ।
    नाप्नुवन्ति महात्मानः संसिद्धिं परमां गताः ॥८- १५॥

    மாமுபேத்ய புநர்ஜந்ம து³:கா²லயமஸா²ஸ்²வதம் |
    நாப்நுவந்தி மஹாத்மாந: ஸம்ஸித்³தி⁴ம் பரமாம் க³தா: || 8- 15||

    மாம் உபேத்ய = என்னையடைந்து
    பரமாம் ஸம்ஸித்³தி⁴ம் க³தா: = பரம சித்தி பெற்ற
    மஹாத்மாந: = மகாத்மாக்கள்
    அஸா²ஸ்²வதம் து³:கா²லயம் = நிலையற்றதும் துன்பத்தின் ஆலயமும் ஆகிய
    புநர்ஜந்ம ந ஆப்நுவந்தி = மறு பிறப்பை யடைய மாட்டார்

    என்னையடைந்து பரம சித்தி பெற்ற மகாத்மாக்கள், மறுபடி நிலையற்றதும் துன்பத்தின் ஆலயமும் ஆகிய மறு பிறப்பை யடைய மாட்டார்.

    आब्रह्मभुवनाल्लोकाः पुनरावर्तिनोऽर्जुन ।
    मामुपेत्य तु कौन्तेय पुनर्जन्म न विद्यते ॥८- १६॥

    ஆப்³ரஹ்மபு⁴வநால்லோகா: புநராவர்திநோऽர்ஜுந |
    மாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம ந வித்³யதே || 8- 16||

    அர்ஜுந! ஆப்³ரஹ்மபு⁴வநாத் = பிரம்மலோகம் வரை
    லோகா: புந: ஆவர்திந: = எல்லா உலகங்களும் மறுபிறப்பு உடையன
    து கௌந்தேய = ஆனால் குந்தி மகனே!
    மாம் உபேத்ய = என்னை அடைந்தவனுக்கு
    புநர்ஜந்ம ந வித்³யதே = மறுபிறப்பு இல்லை

    அர்ஜுனா, பிரம்மலோகம் வரை எல்லா உலகங்களும் மறுபிறப்பு உடையன. குந்தி மகனே! என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை.

    सहस्रयुगपर्यन्तमहर्यद्ब्रह्मणो विदुः ।
    रात्रिं युगसहस्रान्तां तेऽहोरात्रविदो जनाः ॥८- १७॥

    ஸஹஸ்ரயுக³பர்யந்தமஹர்யத்³ப்³ரஹ்மணோ விது³: |
    ராத்ரிம் யுக³ஸஹஸ்ராந்தாம் தேऽஹோராத்ரவிதோ³ ஜநா: || 8- 17||

    ப்³ரஹ்மண: யத் அஹ: = பிரம்மாவுக்கு எது ஒரு பகலோ (அது)
    ஸஹஸ்ர யுக³ பர்யந்தம் = ஆயிரம் யுகங்களைக் கொண்டது
    ராத்ரிம் யுக³ஸஹஸ்ராந்தரம் = இரவும் ஆயிரம் யுகங்களைக் கொண்டது என்று
    விது³: = அறிகிறார்களோ
    தே ஜநா: அஹோராத்ரவித³: = அந்த மக்களே இரவு பகலின் தத்துவத்தை அறிந்தவர்கள்

    பிரம்மத்துக்கு ஆயிரம் யுகம் ஒரு பகல் ஆயிரம் யுகம் ஓரிரவு. இதையறிந்தோரே இராப் பகலின் இயல்பறிவார்.

    अव्यक्ताद्व्यक्तयः सर्वाः प्रभवन्त्यहरागमे ।
    रात्र्यागमे प्रलीयन्ते तत्रैवाव्यक्तसंज्ञके ॥८- १८॥

    அவ்யக்தாத்³வ்யக்தய: ஸர்வா: ப்ரப⁴வந்த்யஹராக³மே |
    ராத்ர்யாக³மே ப்ரலீயந்தே தத்ரைவாவ்யக்தஸம்ஜ்ஞகே || 8- 18||

    அஹராக³மே = பிரம்மாவின் பகல் தொடங்கும் போது
    ஸர்வா: வ்யக்தய: = எல்லா விதமான சராசர தொகுதிகளும்
    அவ்யக்தாத் ப்ரப⁴வந்தி = மறைவுபட்ட உலகத்தினின்றும் வெளிப்படுகின்றன
    ராத்ர்யாக³மே = இரவு வந்தவுடன்
    தத்ர அவ்யக்த ஸம்ஜ்ஞகே ஏவ = அந்த மறைவுலகத்திலேயே
    ப்ரலீயந்தே = மீண்டும் மறைகின்றன

    ‘அவ்யக்தம்,அதாவது, மறைவுபட்ட உலகத்தினின்றும் தோற்றப் பொருள்கள் வெளிப்படுகின்றன. இரவு வந்தவுடன் அந்த மறைவுலகத்துக்கே மீண்டும் கழிந்துவிடுகின்றன
Working...
X