Announcement

Collapse
No announcement yet.

கீதை – எட்டாவது அத்தியாயம் -8[3]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – எட்டாவது அத்தியாயம் -8[3]

    அக்ஷர பிரம்ம யோகம் - Continued

    भूतग्रामः स एवायं भूत्वा भूत्वा प्रलीयते ।
    रात्र्यागमेऽवशः पार्थ प्रभवत्यहरागमे ॥८- १९॥

    பூ⁴தக்³ராம: ஸ ஏவாயம் பூ⁴த்வா பூ⁴த்வா ப்ரலீயதே |
    ராத்ர்யாக³மேऽவஸ²: பார்த² ப்ரப⁴வத்யஹராக³மே || 8- 19||

    பார்த² ஸ: ஏவ அயம் = அர்ஜுனா! அதே இந்த
    பூ⁴தக்³ராம: = உயிரினங்களின் தொகுதிகள்
    பூ⁴த்வா பூ⁴த்வா அவஸ²: = மீண்டும் மீண்டும் தன் வசமின்றியே
    ராத்ர்யாக³மே ப்ரலீயதே = இரவு வந்தவுடன் அழிகிறது
    அஹராக³மே ப்ரப⁴வதி = பகல் வந்தவுடன் பிறக்கிறது

    இந்த பூதத் தொகுதி ஆதியாகித் தன் வசமின்றியே இரவு வந்தவுடன் அழிகிறது. பார்த்தா, பகல் வந்தவுடன் இது மீண்டும் பிறக்கிறது.

    परस्तस्मात्तु भावोऽन्योऽव्यक्तोऽव्यक्तात्सनातनः ।
    यः स सर्वेषु भूतेषु नश्यत्सु न विनश्यति ॥८- २०॥

    பரஸ்தஸ்மாத்து பா⁴வோऽந்யோऽவ்யக்தோऽவ்யக்தாத்ஸநாதந: |
    ய: ஸ ஸர்வேஷு பூ⁴தேஷு நஸ்²யத்ஸு ந விநஸ்²யதி || 8- 20||

    து தஸ்மாத் அவ்யக்தாத் = ஆனால் அந்த அவ்யக்தத்தை காட்டிலும்
    பர: அந்ய: ஸநாதந: = மிகவும் உயர்ந்த வேறான சாஸ்வதமான
    அவ்யக்த: பா⁴வ: ய: = வெளிப்படாத தன்மையுடன் எது இருக்கிறதோ
    ஸ: ஸர்வேஷு பூ⁴தேஷு நஸ்²யத்ஸு = அது எல்லா உயிர்களும் அழிகையில்
    ந விநஸ்²யதி = அழிவதில்லை

    அவ்யக்ததினும் அவ்யக்தமாய் அதற்கப்பால் சநாதன பதமொன்றிருக்கிறது. எல்லா உயிர்களும் அழிகையில் அப்பதம் அழியாது

    अव्यक्तोऽक्षर इत्युक्तस्तमाहुः परमां गतिम् ।
    यं प्राप्य न निवर्तन्ते तद्धाम परमं मम ॥८- २१॥

    அவ்யக்தோऽக்ஷர இத்யுக்தஸ்தமாஹு: பரமாம் க³திம் |
    யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத்³தா⁴ம பரமம் மம || 8- 21||

    அவ்யக்த: அக்ஷர: இதி உக்த: = அவ்யக்தம் அழிவற்றதெனப்படும்
    தம் பரமாம் க³திம் ஆஹு: = அதனையே பரமகதி யென்பர்
    யம் ப்ராப்ய ந நிவர்தந்தே = எதை எய்திய பின் மீள்வதில்லையோ
    தத் மம பரமம் தா⁴ம = அது என்னுடைய பரம பதம் (உயர்ந்த வீடு)

    அவ்யக்தம் அழிவற்றதெனப்படும். அதனையே பரமகதி யென்பர். எதை எய்தபின் மீள்வதில்லையோ, அதுவே என் பரமபதம்.

    पुरुषः स परः पार्थ भक्त्या लभ्यस्त्वनन्यया ।
    यस्यान्तःस्थानि भूतानि येन सर्वमिदं ततम् ॥८- २२॥

    புருஷ: ஸ பர: பார்த² ப⁴க்த்யா லப்⁴யஸ்த்வநந்யயா |
    யஸ்யாந்த:ஸ்தா²நி பூ⁴தாநி யேந ஸர்வமித³ம் ததம் || 8- 22||

    பார்த² பூ⁴தாநி யஸ்ய அந்த: ஸ்தா²நி = அர்ஜுனா எவனுள்ளே எல்லா உயிர்களும் இருக்கின்றனவோ
    யேந இத³ம் ஸர்வம் ததம் = எவனால் இவை எல்லாம் நிறைந்திருக்கின்றதோ
    ஸ: பர: புருஷ: து = அந்த பரம புருஷன்
    அநந்யயா ப⁴க்த்யா = வேறிடஞ் செல்லாத பக்தியால்
    லப்⁴ய = அடையப் படுவான்

    வேறிடஞ் செல்லாத பக்தியால், பார்த்தா, அந்தப் பரம புருஷன் எய்தப்படுவான். அவனுள்ளே எல்லாப் பொருள்களும் நிலைகொண்டன. அவன் இவ்வுலகமெங்கும் உள்ளூரப் பரந்திருக்கிறான்.

    यत्र काले त्वनावृत्तिमावृत्तिं चैव योगिनः ।
    प्रयाता यान्ति तं कालं वक्ष्यामि भरतर्षभ ॥८- २३॥

    யத்ர காலே த்வநாவ்ருத்திமாவ்ருத்திம் சைவ யோகி³ந: |
    ப்ரயாதா யாந்தி தம் காலம் வக்ஷ்யாமி ப⁴ரதர்ஷப⁴ || 8- 23||

    ப⁴ரதர்ஷப⁴ = பரதர் ஏறே!
    யத்ர காலே ப்ரயாதா யோகி³ந: = எக்காலத்தில் இறப்பதால் யோகிகள்
    அநாவ்ருத்திம் ச ஆவ்ருத்திம் ஏவ யாந்தி = மீளா நிலையும் மீளும் நிலையும் பெறுவாரோ
    தம் காலம் வக்ஷ்யாமி = அக்காலத்தைச் சொல்லுகிறேன்

    யோகிகள் இறப்பதால் எக்காலத்தில் மீளா நிலையும் மீளும் நிலையும் பெறுவாரோ, அக்காலத்தைச் சொல்லுகிறேன்.

    अग्निर्ज्योतिरहः शुक्लः षण्मासा उत्तरायणम् ।
    तत्र प्रयाता गच्छन्ति ब्रह्म ब्रह्मविदो जनाः ॥८- २४॥

    அக்³நிர்ஜ்யோதிரஹ: ஸு²க்ல: ஷண்மாஸா உத்தராயணம் |
    தத்ர ப்ரயாதா க³ச்ச²ந்தி ப்³ரஹ்ம ப்³ரஹ்மவிதோ³ ஜநா: || 8- 24||

    அக்³நி: ஜ்யோதி: அஹ: = தீ, ஒளி, பகல்
    ஸு²க்ல: உத்தராயணம் ஷண்மாஸா = சுக்கில பக்ஷம், உத்தராயாணத்தின் ஆறு மாதங்கள்
    தத்ர ப்ரயாதா ப்³ரஹ்மவித³: ஜநா:= இவற்றில் இறக்கும் பிரம்ம ஞானிகள்
    ப்³ரஹ்ம: க³ச்ச²ந்தி = பிரம்மத்தை அடைகிறார்கள்

    தீ, ஒளி, பகல், சுக்கில பக்ஷம், உத்தராயாணத்தின் ஆறு மாதங்கள்; இவற்றில் இறக்கும் பிரம்ம ஞானிகள் பிரம்மத்தை யடைகிறார்கள்.

    धूमो रात्रिस्तथा कृष्णः षण्मासा दक्षिणायनम् ।
    तत्र चान्द्रमसं ज्योतिर्योगी प्राप्य निवर्तते ॥८- २५॥

    தூ⁴மோ ராத்ரிஸ்ததா² க்ருஷ்ண: ஷண்மாஸா த³க்ஷிணாயநம் |
    தத்ர சாந்த்³ரமஸம் ஜ்யோதிர்யோகீ³ ப்ராப்ய நிவர்ததே || 8- 25||

    தூ⁴ம: ராத்ரி: ததா² க்ருஷ்ண: = புகை, இரவு, கிருஷ்ண பக்ஷம்
    த³க்ஷிணாயநம் ஷண்மாஸா = தக்ஷிணாயனத்தின் ஆறு மாதங்கள் இவற்றில் இறக்கும்
    தத்ர யோகீ³ சாந்த்³ரமஸம் ஜ்யோதி ப்ராப்ய = அந்த யோகி சந்திரனொளியைப் பெற்றிருந்து
    நிவர்ததே = மீளுகிறான்

    புகை, இரவு, கிருஷ்ண பக்ஷம், தக்ஷிணாயனத்தின் ஆறு மாதங்கள்; இவற்றில் இறக்கும் யோகி சந்திரனொளியைப் பெற்றிருந்து மீளுகிறான்.

    शुक्लकृष्णे गती ह्येते जगतः शाश्वते मते ।
    एकया यात्यनावृत्तिमन्ययावर्तते पुनः ॥८- २६॥

    ஸு²க்லக்ருஷ்ணே க³தீ ஹ்யேதே ஜக³த: ஸா²ஸ்²வதே மதே |
    ஏகயா யாத்யநாவ்ருத்திமந்யயாவர்ததே புந: || 8- 26||

    ஹி ஜக³த: ஏதே ஸு²க்ல க்ருஷ்ணே க³தீ = ஏனெனில் உலகத்தில் இந்த ஒளி வழியும், இருள் வழியும்
    ஸா²ஸ்²வதே மதே = சாசுவதமாகக் கருதப்பட்டன
    ஏகயா அநாவ்ருத்திம் யாதி = இவற்றுள் ஒன்றினால் மனிதன் மீளாப் பதம் பெறுவான்
    அந்யயா: புந: வர்ததே = மற்றொன்று மீளும் பதந் தருவது

    உலகத்தில் எந்த ஒளி வழியும், இருள் வழியும் சாசுவதமாகக் கருதப்பட்டன. இவற்றுள் ஒன்றினால் மனிதன் மீளாப் பதம் பெறுவான். மற்றொன்று மீளும் பதந் தருவது.

    नैते सृती पार्थ जानन्योगी मुह्यति कश्चन ।
    तस्मात्सर्वेषु कालेषु योगयुक्तो भवार्जुन ॥८- २७॥

    நைதே ஸ்ருதீ பார்த² ஜாநந்யோகீ³ முஹ்யதி கஸ்²சந |
    தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு யோக³யுக்தோ ப⁴வார்ஜுந || 8- 27||

    பார்த²! ஏதே ஸ்ருதீ ஜாநந் = பார்த்தா! இவ் வழிகளிரண்டையும் உணர்ந்த
    கஸ்²சந யோகீ³ முஹ்யதி = எந்த யோகியும் மயக்கமுறுவதில்லை
    தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு = ஆதலால் எப்போதும் யோகத்தில்
    யோக³ யுக்த: ப⁴வ = யோகத்தில் கலந்திரு

    இவ் வழிகளிரண்டையும் உணர்ந்தால் அப்பால் யோகி மயக்கமுறுவதில்லை. ஆதலால், அர்ஜுன, எப்போதும் யோகத்தில் கலந்திரு.

    वेदेषु यज्ञेषु तपःसु चैव दानेषु यत् पुण्यफलं प्रदिष्टम् ।
    अत्येति तत्सर्वमिदं विदित्वा योगी परं स्थानमुपैति चाद्यम् ॥८- २८॥

    வேதே³ஷு யஜ்ஞேஷு தப:ஸு சைவ தா³நேஷு யத் புண்யப²லம் ப்ரதி³ஷ்டம் |
    அத்யேதி தத்ஸர்வமித³ம் விதி³த்வா யோகீ³ பரம் ஸ்தா²நமுபைதி சாத்³யம் || 8- 28||

    யோகீ³ இத³ம் விதி³த்வா = யோகி இதனை யறிவதால்
    வேதே³ஷு யஜ்ஞேஷு தப:ஸு தா³நேஷு ச = வேதங்களிலும், யாகங்களிலும், தவங்களிலும், தானங்களிலும்
    யத் புண்யப²லம் ப்ரதி³ஷ்டம் = எந்த புண்ணியத்தின் பயன் சொல்லப் பட்டிருக்கிறதோ
    தத் ஸர்வம் அத்யேதி = அவை அனைத்தையும் கடந்து செல்கிறான்
    ச ஆத்³யம் பரம் ஸ்தா²நம் உபைதி = மேலும் ஆதி நிலையாகிய பரநிலையை எய்துகிறான்

    இதனை யறிவதால் யோகி வேதங்களிலும், தவங்களிலும், தானங்களிலும் காட்டிய தூய்மைப் பயனைக் கடந்து, ஆதி நிலையாகிய பரநிலையை எய்துகிறான்.

    ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
    श्रिकृष्णार्जुन सम्वादे अक्षरब्रह्मयोगो नामाष्टमोऽध्याय: || 8 ||

    ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
    ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
    உரையாடலில் ‘அக்ஷர பிரம்ம யோகம்’ எனப் பெயர் படைத்த
    எட்டாம் அத்தியாயம் நிறைவுற்றது.
Working...
X