Announcement

Collapse
No announcement yet.

கீதை – ஒன்பதாவது அத்தியாயம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – ஒன்பதாவது அத்தியாயம்

    ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்
    இங்கு வித்தைகளுள் சிறந்ததும், ரகசியங்களுள் மேலானதுமான பக்தி யோகத்தின் சொரூபமும் மேன்மையும், பலன் முதலானவையும் கூறப்படுகின்றன. பக்தி யோகத்தில் இறங்குவோன், அதில் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும். பின்வரும் கடவுள் பெருமைகளையும் நன்குணர வேண்டும்:- கடவுள் எங்கும் நிறைந்த பரம்பொருள். உலகமனைத்தும் அவரிடத்திலேயே நிலைபெற்று நிற்கிறது.
    பிரளய காலத்தில் உலகங்கள் அனைத்தும் அவற்றின் முதற் கிழங்காகிய பிரகிருதியில் மறைகின்றன. சிருஷ்டி காலத்தில் கடவுள் அவைகளைப் பிரகிருதியினின்றும் வெளிப்படுத்துகிறார். உலகத்திற்கு இறைவனும், இருப்பிடமும், சரணும், தோழனும் கடவுளே. பக்தர்கள் தங்கள் செயல்களனைத்தும் கடவுளுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும்.


    மற்ற விஷயங்களைத் துறந்து கடவுளையே தியானம் செய்பவன் எத்தகைய கொடிய பாவியாயினும் நல்லோன் என்றே கருதப்பட வேண்டும். கடவுளிடத்திலேயே மனத்தைச் செலுத்த வேண்டும். கடவுளையே நேசிக்க வேண்டும். கடவுளையே வணங்க வேண்டும். இப்படி இருப்பவன் கடவுளையே அடைவான்.

    श्रीभगवानुवाच
    इदं तु ते गुह्यतमं प्रवक्ष्याम्यनसूयवे ।
    ज्ञानं विज्ञानसहितं यज्ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात् ॥९- १॥
    ஸ்ரீப⁴க³வாநுவாச
    இத³ம் து தே கு³ஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்யநஸூயவே |
    ஜ்ஞாநம் விஜ்ஞாநஸஹிதம் யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேऽஸு²பா⁴த் || 9- 1||
    ஸ்ரீப⁴க³வாநுவாச = கடவுள் சொல்லுகிறான்
    யத் ஜ்ஞாத்வா து = எதை தெரிந்து கொள்வதாலேயே
    அஸு²பா⁴த் மோக்ஷ்யஸே = தீமையில் இருந்து (துக்கவடிவமான உலகியலில் இருந்து) விடுபடுவாயோ
    கு³ஹ்யதமம் = ரகசியமான விஞ்ஞானத்துடன் கூடிய
    இத³ம் ஜ்ஞாநம் = இந்த ஞானத்தை
    அநஸூயவே தே = அசூயை யற்றவனாகிய உனக்கு
    விஜ்ஞாநஸஹிதம் ப்ரவக்ஷ்யாமி = விஞ்ஞானத்துடன் சொல்லுகிறேன்
    கடவுள் சொல்லுகிறான்: அசூயை யற்றவனாகிய உனக்கு இந்த அதி ரகசியமான ஞானத்தை விஞ்ஞானத்துடன் சொல்லுகிறேன். இதையறிவதால் தீமையிலிருந்து விடுபடுவாய்.

    राजविद्या राजगुह्यं पवित्रमिदमुत्तमम् ।
    प्रत्यक्षावगमं धर्म्यं सुसुखं कर्तुमव्ययम् ॥९- २॥
    ராஜவித்³யா ராஜகு³ஹ்யம் பவித்ரமித³முத்தமம் |
    ப்ரத்யக்ஷாவக³மம் த⁴ர்ம்யம் ஸுஸுக²ம் கர்துமவ்யயம் || 9- 2||
    இத³ம் = இது
    ராஜவித்³யா ராஜகு³ஹ்யம் பவித்ரம் உத்தமம் = ராஜவித்தை, ராஜ ரகசியம், தூய்மை தருவதில் மிக மாண்புடையது
    ப்ரத்யக்ஷாவக³மம் = கண்ணெதிரே காண்டற்குரியது
    த⁴ர்ம்யம் = அறத்துக் கிசைந்தது
    ஸுஸுக²ம் கர்தும்= செய்தற்கு மிக எளிது
    அவ்யயம் = அழிவற்றது
    ராஜவித்தை, ராஜ ரகசியம், தூய்மை தருவதில் மிக மாண்புடையது. கண்ணெதிரே காண்டற்குரியது. அறத்துக் கிசைந்தது. செய்தற்கு மிக எளிது. அழிவற்றது.

    अश्रद्दधानाः पुरुषा धर्मस्यास्य परन्तप ।
    अप्राप्य मां निवर्तन्ते मृत्युसंसारवर्त्मनि ॥९- ३॥
    அஸ்²ரத்³த³தா⁴நா: புருஷா த⁴ர்மஸ்யாஸ்ய பரந்தப |
    அப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ருத்யுஸம்ஸாரவர்த்மநி || 9- 3||
    பரந்தப = பகையைச் சுடுவோய்
    அஸ்ய த⁴ர்மஸ்ய = இந்த அறத்தில்
    அஸ்²ரத்³த³தா⁴நா: புருஷா = நம்பிக்கையற்ற மனிதர்
    மாம் அப்ராப்ய = என்னை அடையாமல்
    ம்ருத்யு ஸம்ஸார வர்த்மநி = நரக சம்சாரப் பாதைகளில்
    நிவர்தந்தே = மீளுகின்றனர்
    பகையைச் சுடுவோய், இல்லறத்தில் நம்பிக்கையற்ற மனிதர் என்னை எய்தாமே மீட்டும் நரக சம்சாரப் பாதைகளில் மீளுகின்றனர்.

    मया ततमिदं सर्वं जगदव्यक्तमूर्तिना ।
    मत्स्थानि सर्वभूतानि न चाहं तेष्ववस्थितः ॥९- ४॥
    மயா ததமித³ம் ஸர்வம் ஜக³த³வ்யக்தமூர்திநா |
    மத்ஸ்தா²நி ஸர்வபூ⁴தாநி ந சாஹம் தேஷ்வவஸ்தி²த: || 9- 4||
    அவ்யக்தமூர்திநா = அவ்யக்த வடிவாய்
    மயா = என்னால்
    இத³ம் ஸர்வம் ஜக³த் = இந்த அனைத்து உலகம் முழுவதும்
    ததம் = சூழ்ந்திருக்கிறேன்
    ஸர்வபூ⁴தாநி மத்ஸ்தா²நி = பூதங்களெல்லாம் என்னிடத்தே நிலைபெற்றன
    அஹம் தேஷு அவஸ்தி²த: = நான் அவற்றில் நிலை பெற்று இருக்கவில்லை
    அவ்யக்த வடிவாய் நான் இவ்வுலக முழுமையும் சூழ்ந்திருக்கிறேன். என்னிடத்தே பூதங்களெல்லாம் நிலைபெற்றன. அவற்றுட்பட்டதன்று என்நிலை. 4

    न च मत्स्थानि भूतानि पश्य मे योगमैश्वरम् ।
    भूतभृन्न च भूतस्थो ममात्मा भूतभावनः ॥९- ५॥
    ந ச மத்ஸ்தா²நி பூ⁴தாநி பஸ்²ய மே யோக³மைஸ்²வரம் |
    பூ⁴தப்⁴ருந்ந ச பூ⁴தஸ்தோ² மமாத்மா பூ⁴தபா⁴வந: || 9- 5||
    பூ⁴தாநி ந மத்ஸ்தா²நி ச = பூதங்கள் என்னுள் நிலை பெறுவன அல்ல
    மே ஐஸ்²வரம் யோக³ம் பஸ்²ய = இந்த ஈஸ்வரத் தன்மையுடைய யோக சக்தியை பார்
    பூ⁴தப்⁴ருத் ச = பூதங்களைத் தாங்குபவனும்
    பூ⁴தபா⁴வந: ச = பூதங்களை உண்டாக்குகிறவனாக இருந்த போதிலும்
    மம ஆத்மா = என் ஆத்மா
    பூ⁴தஸ்த²: ந = உயிரினங்களில் நிலை பெற்று இருப்பதில்லை
    (மற்றொரு வகையால் நோக்குமிடத்தே) பூதங்கள் என்றும் நிற்பனவுமல்ல, என் ஈசுவர யோகத்தின் பெருமையை இங்குப் பார், பூதங்களைத் தரிக்கிறேன். அவற்றுட்பட்டேனல்லேன். என் ஆத்மாவில் பூத சிந்தனை இயல்கிறது.

    यथाकाशस्थितो नित्यं वायुः सर्वत्रगो महान् ।
    तथा सर्वाणि भूतानि मत्स्थानीत्युपधारय ॥९- ६॥
    யதா²காஸ²ஸ்தி²தோ நித்யம் வாயு: ஸர்வத்ரகோ³ மஹாந் |
    ததா² ஸர்வாணி பூ⁴தாநி மத்ஸ்தா²நீத்யுபதா⁴ரய || 9- 6||
    ஸர்வத்ரக³: மஹாந் வாயு: = எங்கும் செல்கின்ற, பெருங்காற்று
    யதா² நித்யம் ஆகாஸ²ஸ்தி²த: = எப்படி எப்போதும் வானில் நிலை பெற்றிருக்கிறானோ
    ததா² ஸர்வாணி பூ⁴தாநி = அவ்வாறே எல்லா பொருட்களும்
    மத்ஸ்தா²நீ இதி உபதா⁴ரய = நிலைபெற்றனவென்று தெரிந்துகொள்
    எங்கும் இயல்வானும் பெரியானுமாகிய காற்று, எப்படி எப்போதும் வானில் நிலை பெற்றிருக்கிறானோ, அப்படியே பொருள்களெல்லாம் என்னுள் நிலைபெற்றனவென்று தெரிந்துகொள். 6

    सर्वभूतानि कौन्तेय प्रकृतिं यान्ति मामिकाम् ।
    कल्पक्षये पुनस्तानि कल्पादौ विसृजाम्यहम् ॥९- ७॥
    ஸர்வபூ⁴தாநி கௌந்தேய ப்ரக்ருதிம் யாந்தி மாமிகாம் |
    கல்பக்ஷயே புநஸ்தாநி கல்பாதௌ³ விஸ்ருஜாம்யஹம் || 9- 7||
    கௌந்தேய = குந்தி மகனே
    கல்பக்ஷயே ஸர்வபூ⁴தாநி = கல்ப முடிவில் எல்லா உயிர்களும்
    மாமிகாம் ப்ரக்ருதிம் யாந்தி = என் இயல்பை எய்துகின்றன
    கல்பாதௌ³ தாநி புந: = மறுபடி கல்பத்தின் துவக்கத்தில் அவற்றை மீண்டும்
    அஹம் விஸ்ருஜாமி = நான் படைக்கிறேன்.
    குந்தி மகனே, கர்ப்ப நாசத்தால் எல்லா உயிர்களும் என் இயல்பை எய்துகின்றன. மறுபடி கர்ப்பத் தொடக்கத்தில் நான் அவற்றைப் படைக்கிறேன்.

    प्रकृतिं स्वामवष्टभ्य विसृजामि पुनः पुनः ।
    भूतग्राममिमं कृत्स्नमवशं प्रकृतेर्वशात् ॥९- ८॥
    ப்ரக்ருதிம் ஸ்வாமவஷ்டப்⁴ய விஸ்ருஜாமி புந: புந: |
    பூ⁴தக்³ராமமிமம் க்ருத்ஸ்நமவஸ²ம் ப்ரக்ருதேர்வஸா²த் || 9- 8||
    ப்ரக்ருதே: வஸா²த் = இயற்கையின் வசத்தால்
    அவஸ²ம் இமம் க்ருத்ஸ்நம் பூ⁴தக்³ராமம் = தன் வசமிழந்த இந்த அனைத்து உயிர் தொகுதிகளையும்
    புந: புந: = திரும்ப திரும்ப
    ஸ்வாம் ப்ரக்ருதிம் அவஷ்டப்⁴ய= என்னுடைய இயற்கையின் வசத்தால் ஏற்றுக் கொண்டு
    விஸ்ருஜாமி = படைக்கிறேன்
    என் சக்தியில் உறுதிகொண்டு மீண்டும் மீண்டும் பூதத் தொகுதி முழுவதையும் என் வசமின்றி, சக்தி, அதாவது இயற்கையின் வசத்தால் நான் படைக்கிறேன்.

    न च मां तानि कर्माणि निबध्नन्ति धनंजय ।
    उदासीनवदासीनमसक्तं तेषु कर्मसु ॥९- ९॥
    ந ச மாம் தாநி கர்மாணி நிப³த்⁴நந்தி த⁴நஞ்ஜய |
    உதா³ஸீநவதா³ஸீநமஸக்தம் தேஷு கர்மஸு || 9- 9||
    த⁴நஞ்ஜய = தனஞ்ஜயா!
    தேஷு கர்மஸு = அந்த தொழில்களில் (கர்மங்களில்)
    அஸக்தம் = பற்றில்லாமலும்
    தாநி கர்மாணி = அந்த செயல்கள்
    உதா³ஸீநவத் ஆஸீநம் ச = (ஒதுங்கி) மேற்பட்டவன் போல் இருக்கின்ற
    மாம் ந நிப³த்⁴நந்தி = என்னை கட்டுப் படுத்துவதில்லை
    தனஞ்ஜயா, என்னை அத்தொழில்கள் தளையுறுத்தா. அவ்வினைகளிடையே நான் மேற்பட்டவன் போல் அமர்ந்திருக்கிறேன்.

    मयाध्यक्षेण प्रकृतिः सूयते सचराचरम् ।
    हेतुनानेन कौन्तेय जगद्विपरिवर्तते ॥९- १०॥
    மயாத்⁴யக்ஷேண ப்ரக்ருதி: ஸூயதே ஸசராசரம் |
    ஹேதுநாநேந கௌந்தேய ஜக³த்³விபரிவர்ததே || 9- 10||
    கௌந்தேய = குந்தி மகனே
    அத்⁴யக்ஷேண மயா = தலைவனான என்னால் (என் மேற்பார்வையில்)
    ப்ரக்ருதி: ஸசராசரம் = ப்ரக்ருதியானது அசைவன, அசையாதன எல்லாம்
    ஸூயதே = தோற்றுவிக்கிறது.
    அநேந ஹேதுநா = இந்த காரணத்தால்
    ஜக³த்³ விபரிவர்ததே = உலகமே சுழல்கிறது.
    என் மேற்பார்வையில் சக்தி சராசர உலகங்களைப் பெறுகிறாள். குந்தி மகனே, இந்த ஏதுவால் உலகமே சுழல்கிறது.

    अवजानन्ति मां मूढा मानुषीं तनुमाश्रितम् ।
    परं भावमजानन्तो मम भूतमहेश्वरम् ॥९- ११॥
    அவஜாநந்தி மாம் மூடா⁴ மாநுஷீம் தநுமாஸ்²ரிதம் |
    பரம் பா⁴வமஜாநந்தோ மம பூ⁴தமஹேஸ்²வரம் || 9- 11||
    மம பரம் பா⁴வம் = என்னுடைய மேலான இயல்பை
    அஜாநந்த: மூடா⁴ = அறியாதவர்களான மூடர்கள்
    மாநுஷீம் தநும் = மனித உடலை
    ஆஸ்²ரிதம் பூ⁴தமஹேஸ்²வரம் = தாங்கிக் கொண்டிருக்கும் உயிரினங்களுக்கு தலைவனான
    மாம் அவஜாநந்தி = என்னை புறக்கணிக்கிறார்கள்
    மனித சரீரந் தரித்த என்னை மூடர் புறக்கணிக்கிறார்கள். உயிர்களுக்கெல்லாம் உயர் தலைவன் நான் என்ற என் பரமநிலையை அவர்கள் அறிகிலர்.
    Continued
Working...
X