Announcement

Collapse
No announcement yet.

கீதை – ஒன்பதாவது அத்தியாயம் 9[2]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – ஒன்பதாவது அத்தியாயம் 9[2]

    கீதைஒன்பதாவது அத்தியாயம் 9[2]
    ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம் Continued
    मोघाशा मोघकर्माणो मोघज्ञाना विचेतसः ।
    राक्षसीमासुरीं चैव प्रकृतिं मोहिनीं श्रिताः ॥९- १२॥
    மோகா⁴ஸா² மோக⁴கர்மாணோ மோக⁴ஜ்ஞாநா விசேதஸ: |
    ராக்ஷஸீமாஸுரீம் சைவ ப்ரக்ருதிம் மோஹிநீம் ஸ்²ரிதா: || 9- 12||
    மோகா⁴ஸா²: = வீணாசையுடையோர்
    மோக⁴கர்மாண: = வீண் செயலாளர்
    மோக⁴ஜ்ஞாநா = வீணறிவாளர்
    விசேதஸ: = மதியற்றோர்
    ராக்ஷஸீம் ஆஸுரீம் மோஹிநீம் ச = மயக்கத்துக்கு இடமான ராக்ஷத அசுர மோகினி சக்திகளின்
    ப்ரக்ருதிம் ஏவ ஸ்²ரிதா: = இயல்பையே சார்ந்து நிற்கின்றனர்
    வீணாசையுடையோர், வீண் செயலாளர், வீணறிவாளர், மதியற்றோர், மயக்கத்துக்கு இடமான ராக்ஷத அசுர மோகினி சக்திகளைச் சார்ந்து நிற்கின்றனர். (ராக்ஷத, அசுர, மோகினி சக்திகளாவன – அவா, குரூரம், மயக்கம் என்ற சித்த இயல்புகள்).


    महात्मानस्तु मां पार्थ दैवीं प्रकृतिमाश्रिताः ।
    भजन्त्यनन्यमनसो ज्ञात्वा भूतादिमव्ययम् ॥९- १३॥
    மஹாத்மாநஸ்து மாம் பார்த² தை³வீம் ப்ரக்ருதிமாஸ்²ரிதா: |
    ப⁴ஜந்த்யநந்யமநஸோ ஜ்ஞாத்வா பூ⁴தாதி³மவ்யயம் || 9- 13||
    து பார்த² = ஆனால் பார்த்தா
    தை³வீம் ப்ரக்ருதிம் ஆஸ்²ரிதா: = தெய்விக இயல்பைக் கைகொண்ட
    மஹாத்மாந: = மகாத்மாக்கள்
    மாம் பூ⁴தாதி³ம் அவ்யயம் ஜ்ஞாத்வா = என்னை எல்லா உயிர்களுக்கும் முதல் என்றும், அழிவற்றவன் என்றும் அறிந்து
    அநந்யமநஸ: = வேறு எதிலும் நாட்டமில்லாத மனதுடன்
    ப⁴ஜந்தி = வழிபடுகிறார்கள்
    பார்த்தா, மகாத்மாக்கள் தெய்விக இயல்பைக் கைகொண்டு பூத முதலும் கேடற்றவனுமாகிய என்னை வேறு மனம் இன்றி வழிபடுகிறார்கள்.


    सततं कीर्तयन्तो मां यतन्तश्च दृढव्रताः ।
    नमस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते ॥९- १४॥
    ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஸ்²ச த்³ருட⁴வ்ரதா: |
    நமஸ்யந்தஸ்²ச மாம் ப⁴க்த்யா நித்யயுக்தா உபாஸதே || 9- 14||
    த்³ருட⁴வ்ரதா: = திடவிரதத்துடன்
    ஸததம் கீர்தயந்த: ச = இடைவிடாது நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டும்
    யதந்த: ச = முயற்சி புரிவோராகவும்
    நமஸ்யந்த: ச = என்னைப் பக்தியால் வணங்குவோராய்
    நித்யயுக்தா: ப⁴க்த்யா உபாஸதே = நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள்
    திடவிரதத்துடன் முயற்சி புரிவோராய், எப்போதும் என்னைப் புகழ்வோராய், என்னைப் பக்தியால் வணங்குவோராய் நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள்.


    ज्ञानयज्ञेन चाप्यन्ये यजन्तो मामुपासते ।
    एकत्वेन पृथक्त्वेन बहुधा विश्वतोमुखम् ॥९- १५॥
    ஜ்ஞாநயஜ்ஞேந சாப்யந்யே யஜந்தோ மாமுபாஸதே |
    ஏகத்வேந ப்ருத²க்த்வேந ப³ஹுதா⁴ விஸ்²வதோமுக²ம் || 9- 15||
    அந்யே மாம் ஜ்ஞாநயஜ்ஞேந ஏகத்வேந = வேறு சிலர் ஞான வேள்வியால் ஒன்றிய பாவனையுடன்
    யஜந்த: அபி = வழிபட்டுக் கொண்டும்
    ச ப³ஹுதா⁴ விஸ்²வதோமுக²ம் = மற்றும் சிலர் விராட்ஸ்வரூபத்துடன் ஈஸ்வரனாக என்னை
    ப்ருத²க்த்வேந உபாஸதே = தன்னிலும் வேறாக எண்ணி உபாசிக்கிறார்கள்
    வேறு சிலர் ஞான வேள்வியால் வேட்போராய் என்னை ஒருமையாகவும் பன்மையாகவும் பலவாறாக எல்லாவிடத்தும் வழிபடுகிறார்கள். 15


    अहं क्रतुरहं यज्ञः स्वधाहमहमौषधम् ।
    मन्त्रोऽहमहमेवाज्यमहमग्निरहं हुतम् ॥९- १६॥
    அஹம் க்ரதுரஹம் யஜ்ஞ: ஸ்வதா⁴ஹமஹமௌஷத⁴ம் |
    மந்த்ரோऽஹமஹமேவாஜ்யமஹமக்³நிரஹம் ஹுதம் || 9- 16||
    அஹம் க்ரது: = நான் ஹோமம்
    அஹம் யஜ்ஞ: = நான் யாகம்
    அஹம் ஸ்வதா⁴ = நான் ‘ஸ்வதா’ என்ற வாழ்த்துரை
    அஹம் ஔஷத⁴ம் = நான் மருந்து
    அஹம் மந்த்ர: = நானே மந்திரம்
    அஹம் ஆஜ்யம் = நானே நெய்
    அஹம் அக்³நி = நானே தீ
    அஹம் ஹுதம் = நான் அவி
    அஹம் ஏவ = நானே தான்!
    நான் ஓமம்; நான் யாகம்; நான் ‘ஸ்வதா’ என்ற வாழ்த்துரை; நான் மருந்து; மந்திரம்; நான் நெய்; நான் தீ; நான் அவி.


    पिताहमस्य जगतो माता धाता पितामहः ।
    वेद्यं पवित्रमोंकार ऋक्साम यजुरेव च ॥९- १७॥
    பிதாஹமஸ்ய ஜக³தோ மாதா தா⁴தா பிதாமஹ: |
    வேத்³யம் பவித்ரமோங்கார ருக்ஸாம யஜுரேவ ச || 9- 17||
    அஸ்ய ஜக³த: தா⁴தா = இந்த உலகம் அனைத்தையும் தாங்குபவனும்
    பிதா மாதா பிதாமஹ: = தந்தை, தாய், பாட்டனாரும்
    வேத்³யம் பவித்ரம் = அறியத் தக்கவனும், புனிதமானவனும்
    ஓங்கார: = ஓங்காரமும்
    ருக் ஸாம யஜு: ச = ரிக்; ஸாம; யஜுர் என்ற வேதங்களும்
    அஹம் ஏவ = நானே தான்
    இந்த உலகத்தின் அப்பன் நான்; இதன் அம்மா நான்; இதைத் தரிப்போன் நான்; இதன் பாட்டன் நான்; இதன் அறியப்படு பொருள் நான்; தூய்மை செய்வது நான்; ஓங்காரம் நான்; நான் ரிக்; நான் ஸாமம்; நான் யஜுர்.


    गतिर्भर्ता प्रभुः साक्षी निवासः शरणं सुहृत् ।
    प्रभवः प्रलयः स्थानं निधानं बीजमव्ययम् ॥९- १८॥
    க³திர்ப⁴ர்தா ப்ரபு⁴: ஸாக்ஷீ நிவாஸ: ஸ²ரணம் ஸுஹ்ருத் |
    ப்ரப⁴வ: ப்ரலய: ஸ்தா²நம் நிதா⁴நம் பீ³ஜமவ்யயம் || 9- 18||
    க³தி: = அடையத் தக்க பரம பதம்
    ப⁴ர்தா = காப்பவன்
    ப்ரபு⁴: = ஆள்பவன்
    ஸாக்ஷீ = நல்லன – தீயனவற்றைப் சாட்சியாக இருந்து பார்ப்பவன்
    நிவாஸ: = உறைவிடம்
    ஸ²ரணம் = சரண் புகலிடம்
    ஸுஹ்ருத் = தோழன்
    ப்ரப⁴வ: ப்ரலய: = தொடக்கமும் அழிவும்
    ஸ்தா²நம் நிதா⁴நம் = நிலையாகத் தாங்குமிடமும், நிதானமும்
    அவ்யயம் பீ³ஜம் = அழியாத விதை
    இவ்வுலகத்தின் புகல், இதனிறைவன், இதன் கரி, இதனுறையுள், இதன் சரண், இதன் தோழன், இதன் தொடக்கம், இதன் அழிவு, இதன் இடம், இதன் நிலை, இதன் அழியாத விதை.


    तपाम्यहमहं वर्षं निगृह्णाम्युत्सृजामि च ।
    अमृतं चैव मृत्युश्च सदसच्चाहमर्जुन ॥९- १९॥
    தபாம்யஹமஹம் வர்ஷம் நிக்³ருஹ்ணாம்யுத்ஸ்ருஜாமி ச |
    அம்ருதம் சைவ ம்ருத்யுஸ்²ச ஸத³ஸச்சாஹமர்ஜுந || 9- 19||
    அஹம் தபாமி = நான் வெப்பந் தருகிறேன்
    வர்ஷம் நிக்³ருஹ்ணாமி உத்ஸ்ருஜாமி ச = மழையை நான் கட்டி விடுகிறேன். நான் அதைப் பெய்விக்கிறேன்
    அம்ருதம் ச ம்ருத்யு: ச = நானே அமிர்தம்; நானே மரணம்
    ஸத் அஸத் ச அஹம் அர்ஜுந = உள்ளதும்; இல்லதும் நான் அர்ஜுனா!
    நான் வெப்பந் தருகிறேன்; மழையை நான் கட்டி விடுகிறேன். நான் அதைப் பெய்விக்கிறேன். நானே அமிர்தம்; நானே மரணம். அர்ஜுனா, உள்ளதும் யான்; இல்லதும் யான்.


    त्रैविद्या मां सोमपाः पूतपापा यज्ञैरिष्ट्वा स्वर्गतिं प्रार्थयन्ते ।
    ते पुण्यमासाद्य सुरेन्द्रलोक मश्नन्ति दिव्यान्दिवि देवभोगान् ॥९- २०॥
    த்ரைவித்³யா மாம் ஸோமபா: பூதபாபா யஜ்ஞைரிஷ்ட்வா ஸ்வர்க³திம் ப்ரார்த²யந்தே |
    தே புண்யமாஸாத்³ய ஸுரேந்த்³ரலோகமஸ்²நந்தி தி³வ்யாந்தி³வி தே³வபோ⁴கா³ந் || 9- 20||
    த்ரைவித்³யா: ஸோமபா: = மூன்று வேதம் அறிந்தோர், சோமம் உண்டோர்
    பூதபாபா = பாவம் அகன்றவர்கள்
    மாம் யஜ்ஞை: இஷ்ட்வா = என்னை வேள்விகளால் உபாசித்து
    ஸ்வர்க³திம் ப்ரார்த²யந்தே = வானுலகு தர வேண்டுகின்றனர்
    தே புண்யம் ஸுரேந்த்³ரலோகம் ஆஸாத்³ய = அவர்கள் புண்ணிய ஸ்தானமாகிய தேவேந்திர லோகத்தை அடைந்து
    தி³வி = ஸ்வர்கத்தில்
    தி³வ்யாந் தே³வபோ⁴கா³ந் அஸ்²நந்தி = திவ்யமான தேவ போகங்களைத் துய்க்கிறார்கள்
    சோமமுண்டார், பாவமகன்றார், மூன்று வேதமறிந்தார், என்னை வேள்விகளால் வேட்டு வானுலகு தர வேண்டுகின்றனர். அவர்கள் புண்ணிய ஸ்தானமாகிய தேவேந்திர லோகத்தை யெய்தி வானுலகில் திவ்யமான தேவ போகங்களைத் துய்க்கிறார்கள்.


    ते तं भुक्त्वा स्वर्गलोकं विशालं क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति ।
    एवं त्रयीधर्ममनुप्रपन्ना गतागतं कामकामा लभन्ते ॥९- २१॥
    தே தம் பு⁴க்த்வா ஸ்வர்க³லோகம் விஸா²லம் க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விஸ²ந்தி |
    ஏவம் த்ரயீத⁴ர்மமநுப்ரபந்நா க³தாக³தம் காமகாமா லப⁴ந்தே || 9- 21||
    தே தம் விஸா²லம் ஸ்வர்க³லோகம் பு⁴க்த்வா = அவர்கள் விரிவாகிய வானுலகத்திலே இன்புற்று
    புண்யே க்ஷீணே மர்த்யலோகம் விஸ²ந்தி = புண்ணியந் தீர்ந்தவுடன் மறுபடி அழிவுடைய உலகத்துக்குத் திரும்புகிறார்கள்
    ஏவம் த்ரயீத⁴ர்மம் = இப்படி மூன்று வேத முறைகளை
    அநுப்ரபந்நா: காமகாமா: = சார்ந்திருக்கிற போகப் பற்றுள்ளவர்கள்
    க³தாக³தம் = திரும்ப திரும்ப பிறந்து இறத்தலை
    லப⁴ந்தே = அடைகிறார்கள்
    விரிவாகிய வானுலகத்திலே இன்புற்றுப் புண்ணியந் தீர்ந்தவுடன் மறுபடி அழிவுடைய மனித உலகத்துக்குத் திரும்புகிறார்கள். இப்படி மூன்று வேத முறைகளைத் தொழுவார் விருப்பங்களில் வீழ்ந்து உழல்வார்.


    अनन्याश्चिन्तयन्तो मां ये जनाः पर्युपासते ।
    तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् ॥९- २२॥
    அநந்யாஸ்²சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே |
    தேஷாம் நித்யாபி⁴யுக்தாநாம் யோக³க்ஷேமம் வஹாம்யஹம் || 9- 22||
    அநந்யா: யே ஜநா = வேறு எதிலும் நாட்டமில்லாத எந்த பக்தர்கள்
    மாம் சிந்தயந்த: = என்னை தியானித்துக் கொண்டு
    பர்யுபாஸதே = எந்த பயனும் எதிர்பார்க்காது உபாசிக்கின்றாரோ
    நித்யாபி⁴யுக்தாநாம் தேஷாம் = இடைவிடாது என்னையே நினைத்துக் கொண்டிருக்கிற அவர்களுடைய
    யோக³க்ஷேமம் அஹம் வஹாமி = நன்மை தீமைகளுக்கு நானே பொறுப்பாவேன்
    வேறு நினைப்பின்றி என்னை வழிபடுவோர் யாவரோ, அந்த நித்திய யோகிகளின் நன்மை தீமையை நான் பொறுப்பேன்.


    येऽप्यन्यदेवताभक्ता यजन्ते श्रद्धयान्विताः ।
    तेऽपि मामेव कौन्तेय यजन्त्यविधिपूर्वकम् ॥९- २३॥
    யேऽப்யந்யதே³வதாப⁴க்தா யஜந்தே ஸ்²ரத்³த⁴யாந்விதா: |
    தேऽபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதி⁴பூர்வகம் || 9- 23||
    கௌந்தேய = குந்தியின் மகனே
    யே ப⁴க்தா = எந்த பக்தர்கள்
    ஸ்²ரத்³த⁴யா அந்விதா: அபி = நம்பிக்கையுடன் கூடியவர்களாக இருந்த போதிலும்
    அந்ய தேவதா: யஜந்தே = மற்ற தேவதைகளை வழிபடுகிறார்களோ
    தே அபி அவிதி⁴ பூர்வகம்= அவர்களும் விதிமுறைப்படி அல்லாமல் (அஞ்ஞானத்துடன்)
    மாம் ஏவ யஜந்தி = என்னையே தொழுகின்றனர்
    அந்நிய தேவதைகளை நம்பிக்கையுடன் தொழும் அன்பரும், குந்தியின் மகனே, விதி வழுவி என்னையே தொழுகின்றனர்.


    अहं हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुरेव च ।
    न तु मामभिजानन्ति तत्त्वेनातश्च्यवन्ति ते ॥९- २४॥
    அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போ⁴க்தா ச ப்ரபு⁴ரேவ ச |
    ந து மாமபி⁴ஜாநந்தி தத்த்வேநாதஸ்²ச்யவந்தி தே || 9- 24||
    ஹி ஸர்வயஜ்ஞாநாம் = ஏனெனில் எல்லா வேள்விகளிலும்
    போ⁴க்தா ச ப்ரபு⁴ ச அஹம் ஏவ = உணவு உண்பவனும்; தலைவனும் நானே தான்!
    து தே மாம் = ஆனால் என்னை அவர்கள்
    தத்த்வேந ந அபி⁴ஜாநந்தி = உள்ளபடி அறியாதவர்
    அத: ச்யவந்தி = ஆகையால் வீழ்ச்சி அடைகிறார்கள்
    நானே வேள்விகளில் எல்லாம் உணவு உண்பவன்; நானே தலைவன்; என்னை மனிதர் உள்ளபடி அறியார்; ஆதலால் நழுவி வீழ்வார்.
    Continued
Working...
X