Announcement

Collapse
No announcement yet.

கீதை – ஒன்பதாவது அத்தியாயம் 9[3]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – ஒன்பதாவது அத்தியாயம் 9[3]

    கீதைஒன்பதாவது அத்தியாயம் 9[3]
    ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம் Continued
    यान्ति देवव्रता देवान्पितॄन्यान्ति पितृव्रताः ।
    भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्याजिनोऽपि माम् ॥९- २५॥
    யாந்தி தே³வவ்ரதா தே³வாந்பித்ரூந்யாந்தி பித்ருவ்ரதா: |
    பூ⁴தாநி யாந்தி பூ⁴தேஜ்யா யாந்தி மத்³யாஜிநோऽபி மாம் || 9- 25||
    தே³வவ்ரதா: தே³வாந் யாந்தி = தேவதைகளை வழிபடுபவர்கள் தேவதைகளை அடைகிறார்கள்
    பித்ருவ்ரதா: பித்ரூந் யாந்தி = பித்ருக்களை வழிபடுவோர் பித்ருக்களை அடைவார்
    பூ⁴தேஜ்யா பூ⁴தாநி யாந்தி = பூதங்களைத் தொழுவார் பூதங்களை யடைவார்
    மத்³யாஜிந: அபி மாம் யாந்தி = என்னை வழிபடுபவர்கள் என்னை அடைகிறார்கள்
    தேவ விரதிகள் தேவரை எய்துவார்;
    பிதிர்க்களை நோற்பார் பிதிர்க்களை யடைவார்;
    பூதங்களைத் தொழுவார் பூதங்களை யடைவார்;
    என்னை வேட்போர் என்னை எய்துவார்.


    पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति ।
    तदहं भक्त्युपहृतमश्नामि प्रयतात्मनः ॥९- २६॥
    பத்ரம் புஷ்பம் ப²லம் தோயம் யோ மே ப⁴க்த்யா ப்ரயச்ச²தி |
    தத³ஹம் ப⁴க்த்யுபஹ்ருதமஸ்²நாமி ப்ரயதாத்மந: || 9- 26||
    ய: ப⁴க்த்யா = எவர் அன்புடனே
    பத்ரம் புஷ்பம் ப²லம் தோயம் = இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும்
    மே ப்ரயச்ச²தி = எனக்கு அளிப்பவன் ஆயின்
    ப்ரயதாத்மந: = முயற்சியுடைய அவர்
    ப⁴க்த்யுபஹ்ருதம் = அன்புடன் அளித்த
    தத் அஹம் அஸ்²நாமி = அவற்றை நான் அருந்துகிறேன்
    இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன்புடனே எனக்கு அளிப்பவன் ஆயின், முயற்சியுடைய அன்னவன் அன்புடன் அளித்ததை உண்பேன் யான்.


    यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् ।
    यत्तपस्यसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम् ॥९- २७॥
    யத்கரோஷி யத³ஸ்²நாஸி யஜ்ஜுஹோஷி த³தா³ஸி யத் |
    யத்தபஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மத³ர்பணம் || 9- 27||
    கௌந்தேய = குந்தி மகனே!
    யத்கரோஷி = எந்த கர்மத்தை செய்கிறாயோ
    யத³ஸ்²நாஸி = எதை உண்கிறாயோ
    யத் ஜுஹோஷி = எதை ஹோமம் செய்கிறாயோ
    யத் த³தா³ஸி = எதை தானம் அளிக்கிறாயோ
    யத் தபஸ்யஸி = எந்த தவம் செய்கிறாயோ
    தத் மத³ர்பணம் குருஷ்வ = அதை எனக்கு அர்ப்பணம் செய்து விடு
    நீ எது செய்யினும், எதனை நீ உண்பினும், எதை நீ ஓமம் பண்ணினும், எதனைக் கொடுத்தாலும், எத்தவத்தைச் செய்தாலும், குந்தி மகனே, கடவுளுக்கு அர்ப்பணமென்று செய்.


    शुभाशुभफलैरेवं मोक्ष्यसे कर्मबन्धनैः ।
    संन्यासयोगयुक्तात्मा विमुक्तो मामुपैष्यसि ॥९- २८॥
    ஸு²பா⁴ஸு²ப⁴ப²லைரேவம் மோக்ஷ்யஸே கர்மப³ந்த⁴நை: |
    ஸம்ந்யாஸயோக³யுக்தாத்மா விமுக்தோ மாமுபைஷ்யஸி || 9- 28||
    ஏவம் ஸு²ப⁴ அஸு²ப⁴ ப²லை: = இங்ஙனம் மங்களம் அமங்களமாகிய பயன்களை
    கர்மப³ந்த⁴நை: = கர்மத் தளைகளினின்றும்
    மோக்ஷ்யஸே = விடுபடுவாய்
    ஸந்யாஸ யோக³ யுக்தாத்மா = துறவெனும் யோகத்திசைந்து
    விமுக்த: = விடுபட்டவனாக
    மாம் உபைஷ்யஸி = என்னையும் பெறுவாய்
    இங்ஙனம் மங்களம் அமங்களமாகிய பயன்களைத் தருவனவாகிய கர்மத் தளைகளினின்றும் விடுபடுவாய். துறவெனும் யோகத்திசைந்து விடுதலை பெறுவாய். என்னையும் பெறுவாய்.


    समोऽहं सर्वभूतेषु न मे द्वेष्योऽस्ति न प्रियः ।
    ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम् ॥९- २९॥
    ஸமோऽஹம் ஸர்வபூ⁴தேஷு ந மே த்³வேஷ்யோऽஸ்தி ந ப்ரிய: |
    யே ப⁴ஜந்தி து மாம் ப⁴க்த்யா மயி தே தேஷு சாப்யஹம் || 9- 29||
    அஹம் ஸர்வபூ⁴தேஷு ஸம: = நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன்
    மே த்³வேஷ்ய: ந = எனக்குப் பகைவனுமில்லை
    ப்ரிய: ந அஸ்தி = நண்பனுமில்லை
    து யே ப⁴க்த்யா மாம் ப⁴ஜந்தி = ஆனால் என்னை அன்புடன் தொழுவோர்
    தே மயி ச அஹம் தேஷு அபி = அவர்கள் என்னிடமும் நான் அவர்களிடமும் (காணக் கூடியவனாக இருக்கிறேன்)
    நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன். எனக்குப் பகைவனுமில்லை, நண்பனுமில்லை. ஆனால் என்னை அன்புடன் தொழுவோர் – அன்னவர் என்னகத்தமர்ந்தார்; அவரகத்து நான் உளேன்.


    अपि चेत्सुदुराचारो भजते मामनन्यभाक् ।
    साधुरेव स मन्तव्यः सम्यग्व्यवसितो हि सः ॥९- ३०॥
    அபி சேத்ஸுது³ராசாரோ ப⁴ஜதே மாமநந்யபா⁴க் |
    ஸாது⁴ரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக்³வ்யவஸிதோ ஹி ஸ: || 9- 30||
    ஸுது³ராசார: அபி = மிகவும் தீய நடத்தை உள்ளவனானாலும்
    அநந்யபா⁴க் = வேறு எதிலும் நாட்டமின்றி என் பக்தனாக ஆகி
    மாம் ப⁴ஜதே சேத் = என்னை வழிபடுவானாகில்
    ஸ: ஸாது⁴: ஏவ மந்தவ்ய: = அவன் நல்லோனென்றே கருதுக
    ஹி ஸ: ஸம்யக் வ்யவஸித: = ஏனெனில் அவன் நன்கு முயல்கின்றான்
    மிகவும் கொடிய நடையோனாயினும் பிறிது வழிபடாதே என்னை வழிபடுவோன் நல்லோனென்றே கருதுக. ஏனெனில், நன்கு முயல்கின்றான் ஆதலின்,


    क्षिप्रं भवति धर्मात्मा शश्वच्छान्तिं निगच्छति ।
    कौन्तेय प्रति जानीहि न मे भक्तः प्रणश्यति ॥९- ३१॥
    க்ஷிப்ரம் ப⁴வதி த⁴ர்மாத்மா ஸ²ஸ்²வச்சா²ந்திம் நிக³ச்ச²தி |
    கௌந்தேய ப்ரதி ஜாநீஹி ந மே ப⁴க்த: ப்ரணஸ்²யதி || 9- 31||
    க்ஷிப்ரம் த⁴ர்மாத்மா ப⁴வதி = விரைவிலேயே தர்மாத்மாவாக ஆகிறான்
    ஸ²ஸ்²வத் ஸா²ந்திம் நிக³ச்ச²தி = நித்திய சாந்தியு மெய்துவான்
    கௌந்தேய = குந்தி மகனே
    மே ப⁴க்த: = என்னுடைய பக்தன்
    ந ப்ரணஸ்²யதி = அழிவதில்லை
    ப்ரதி ஜாநீஹி = சத்தியத்தை உறுதியாக அறிந்து கொள்
    அன்னவன் விரைவிலே அறவானாவான்,
    நித்திய சாந்தியு மெய்துவான்.
    குந்தி மகனே; குறிக்கொள்!
    என தன்பன் சாகமாட்டான்.


    मां हि पार्थ व्यपाश्रित्य येऽपि स्युः पापयोनयः ।
    स्त्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम् ॥९- ३२॥
    மாம் ஹி பார்த² வ்யபாஸ்²ரித்ய யேऽபி ஸ்யு: பாபயோநய: |
    ஸ்த்ரியோ வைஸ்²யாஸ்ததா² ஸூ²த்³ராஸ்தேऽபி யாந்தி பராம் க³திம் || 9- 32||
    ஹி பார்த² = ஏனெனில் பார்த்தா
    ஸ்த்ரிய: வைஸ்²யா: ஸூ²த்³ரா: = பெண்களாயினும் எந்த வர்ணத்தவராயினும்
    ததா² = அதே போல
    பாபயோநய: = பாவிகளானாலும்
    யே அபி ஸ்யு: = எவர்களாக இருந்தாலும்
    தே அபி மாம் வ்யபாஸ்²ரித்ய = அவர்களும் என்னை தஞ்சமடைந்து
    பராம் க³திம் யாந்தி = மேலான கதியை அடைகிறார்கள்
    பாவிகளென்னைப் பணிவாராயினும்,
    மாதரேனும், வைசியரேனும்,
    சூத்திரரும் பரகதி பெறுவார்.


    किं पुनर्ब्राह्मणाः पुण्या भक्ता राजर्षयस्तथा ।
    अनित्यमसुखं लोकमिमं प्राप्य भजस्व माम् ॥९- ३३॥
    கிம் புநர்ப்³ராஹ்மணா: புண்யா ப⁴க்தா ராஜர்ஷயஸ்ததா² |
    அநித்யமஸுக²ம் லோகமிமம் ப்ராப்ய ப⁴ஜஸ்வ மாம் || 9- 33||
    புண்யா: = புனிதமான
    ப்³ராஹ்மணா: ராஜர்ஷய: ப⁴க்தா: = அந்தணரும் ராஜரிஷிகளும் எனக் கன்பராயின்
    கிம் புந: = சொல்லவும் வேண்டுமோ!
    அநித்யம் அஸுக²ம் = நிலையற்றதும் இன்ப மற்றதுமாகிய
    இமம் லோகம் ப்ராப்ய = இவ்வுலகப் பிறவி யெய்திய நீ
    மாம் ப⁴ஜஸ்வ = என்னை வழிபடக் கடவாய்
    அப்படியிருக்கத் தூய்மை யார்ந்த
    அந்தணரும் ராஜரிஷிகளும்
    எனக் கன்பராயின், என்னே! ஆதலால்;
    நிலையற்றதும் இன்ப மற்றதுமாகிய
    இவ்வுலகப் பிறவி யெய்திய நீ
    என்னை வழிபடக் கடவாய்.


    मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु ।
    मामेवैष्यसि युक्त्वैवमात्मानं मत्परायणः ॥९- ३४॥
    மந்மநா ப⁴வ மத்³ப⁴க்தோ மத்³யாஜீ மாம் நமஸ்குரு |
    மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண: || 9- 34||
    மந்மநா: ப⁴வ = மனத்தை எனக்காக்கி விடு
    மத்³ப⁴க்த: = பக்தியை எனக்காக்கு
    மத்³யாஜீ = என்னைத் தொழு
    மாம் நமஸ்குரு = என்னை வணங்கு
    ஏவம் ஆத்மாநம் யுக்த்வா = இவ்வாறு மனம், புலன்களுடன் கூடிய உடலை (என்னிடம்) ஈடுபடுத்தி
    மாம் ஏவ ஏஷ்யஸி = என்னையே அடைவாயாக
    மனத்தை எனக்காக்கி விடு; பக்தியை எனக்காக்கு; என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள். இங்ஙனமியற்றும் தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய்.


    ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
    श्रिकृष्णार्जुन सम्वादे राजविद्याराजगुह्ययोगो नाम नवमोऽध्याय: || 9 ||
    ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
    ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
    உரையாடலில் ‘ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்’ எனப் பெயர் படைத்த
    ஒன்பதாம் அத்தியாயம் நிறைவுற்றது.
    Source:Sangatham.com
Working...
X