Announcement

Collapse
No announcement yet.

Greatness of Thirumurai

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Greatness of Thirumurai

    திருமுறைகளின் சிறப்பு :-
    திருமுறையே சைவநெறிக் கருவூலம்
    தென்தமிழின் தேன்பா காகும்
    திருமுறையே கயிலையின் கண் சிவபெருமான்
    செவிமடுத்த செந்தமிழ் வேதம்
    திருமுறையே நடராசன் கரம் வருந்த
    எழுதியருள் தெய்வ நூலாம்
    திருமுறையே சொக்கேசன் மதிமலிவாய்
    மலர்ந்தருளும் சிறப்பிற்றாமால்.
    *
    பன்னிருதிருமுறைகளை அருளிய அருளாளர்கள்:-
    திருஞானசம்பந்தர் வாகீசர் சுந்தரர்
    திருவாத வூரர் மற்றைத்
    திருமாளிகைத் தேவர் சேந்தனார் கருவூரர்
    தெள்ளு பூந்துருத்தி நம்பி
    வருஞான கண்டரா தித்தர் வேணாட்டடிகள்
    வாய்ந்த திரு வாலி யமுதர்
    மருவு புருடோத்தமர் சேதிராயர் மூலர்
    மன்னு திரு ஆல வாயார்
    ஒருகாரைக் காலம்மை ஐயடிகள் சேரமான்
    ஒளிர் கீரர் கல்லாடனார்
    ஒண் கபிலர் பரணர் மெய்உண ரிளம் பெருமானோடு
    ஓங்கும் அதிராவடிகளார்
    திருமேவு பட்டினத்தடிகளொடு
    நம்பியாண்டார்நம்பி சேக்கிழாரும்
    சிவநெறித் திருமுறைகள் பன்னிரண்டருளிச் செய்த
    தெய்விகத் தன்மையோரே.
    Courtesy: Sri.GS.Dattatreyan
Working...
X