Announcement

Collapse
No announcement yet.

சக்தி வழிபாடு சகலமும் தரும்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சக்தி வழிபாடு சகலமும் தரும்

    சக்தி வழிபாடு சகலமும் தரும்


    “சும்மா தொணதொணங்காதே, சக்தி இருந்தா செய். இல்லாட்டி சிவனேன்னு கிட.” சாதாரணமாக எல்லார் வாக்கிலும் வரக்கூடிய வார்த்தைகள் தான் இவை. சௌந்தர்யலஹரியில் முதல் பாட்டின் கருத்து இது.
    எவ்வளவு சொன்னாலும் சக்தியின் பெருமைக்கு முடிவே இருக்காது. அதனால்தான் வியாசர் அதற்குத் தனிப்பெருமை கொடுத்தார். மகாபாரதம் எழுதியவர் வியாசர் தான். ஆனால் அதைச் சொன்னவர் வைசம்பாயனர். இராமாயணம் எழுதியவர் வால்மீகி. ஆனால் அதை வெளிப்படுத்தியவர் லவ-குசன் ஆகிய இருவர்.

    நூலை எழுதியவரே, அதைச் சொல்லி வெளிப்படுத்துவது என்பது சாதாரண செயலல்ல. அதைச் செய்தார் வியாசர். அந்தப் பெருமை ஸ்ரீதேவி பாகவதத்திற்குக் கிடைத்தது. அம்பிகையின் மகிமைகளைப் பற்றி, அடுத்தவரைச் சொல்லச் செய்வதைவிட, நாமே சொல்வதுதான் சாலச்சிறந்தது என்றே வியாசர் அவ்வாறு செய்தார்.
    ஆனால், வேத வியாசர் முதலான ஆசார்ய புருஷர்கள் எவ்வளவோ பாடுபட்டு நமக்காகச் செய்த ஞான நூல்களை நாம் லட்சியம் செய்வது இல்லை. எல்லாரும் பரபரப்பாக எதையோ தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். இதில் ஒரு விசேஷம், எதைத் தேடுகிறோம் என்பதே தெரியாமல் தேடிக் கொண்டிருக்கிறோம். உண்மையிலேயே நாம் தேட வேண்டியது, நமக்காக நம் ஆசார்ய புருஷர்கள் சேர்த்து வைத்துவிட்டுப் போன ஞானப் புதையலைத்தான். அவர்கள் புதைத்து வைக்கவில்லை. நம்முடைய அஜாக்கிரதையால் அலட்சியத்தால் அவர்கள் வைத்து விட்டுப்போன ஞானச் சொத்து புதைந்து போய்விட்டது. வாருங்கள் அதிலிருந்து சிறிதளவையாவது தேடி எடுக்க முயற்சிசெய்யலாம். நவராத்திரி வருவதால் அதைப்பற்றிய தகவல்கள் சில இங்கே இடம் பெறுகின்றன.
    கடும் வெயில் காலத்தையும் கடும் மழைக் காலத்தையும் யமனுடைய இரண்டு கோரைப்பற்களாக, நமது ஞான நூல்கள் வர்ணிக்கின்றன. ஏனென்றால் அந்தக் காலங்களில் தான் பலவிதமான நோய்கள், நம்மைத்தாக்கி பாதிக்கின்றன. இந்த பாதிப்புகளிலிருந்து நம்மைக் கட்டிக் காப்பாற்றுபவள் அம்பிகை. அதனால்தான் அம்பிகைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நவராத்திரி என்ற பெயரில் ஒன்பது இரவுகள் அம்பிகையைப் பூஜை செய்கிறோம்.
    அண்ட சராசரத்தில் இருக்கும் அத்தனை ஜீவராசிகளிலும் அம்பிகை கொலுவிருக்கிறாள். அவள் அருளால்தான், எல்லாம் உயிர் வாழ்கின்றன. இதை உணர்த்துவதற்காகவே கொலு வைக்கப்படுகிறது. பலவிதமான பொம்மைகளை இஷ்டப்படி வைக்காமல், கொலுவை முறையாக வைக்க வேண்டும்.
    ஒன்பது, ஏழு, ஐந்து என ஒற்றைப்படை வரிசையில் கொலு வைக்க வேண்டும். ஒன்பது படிகள் என்ற முறையில் கீழிருந்து வரிசையாக, முதல் படியில் ஓரறிவுள்ள செடி, கொடி, மரங்கள் முதலானவற்றை வைக்க வேண்டும். இரண்டாவது படியில் ஈரறிவுள்ள சங்கு, நத்தை, அட்டை முதலான, மெதுவாக ஊரும் உயிரினங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மூன்றாவது படியில் கறையான், எறும்பு முதலான, சற்று வேகமாக ஊர்ந்து போகும் மூவறிவுள்ள ஜீவராசிகளின் பொம்மைகளை வைக்கவேண்டும். நான்காவது படியில் பறவை, வண்டு முதலான நான்கறிவுள்ள உயிரினங்கள். ஐந்தாவது படியில் பசு முதலான ஐந்தறிவுள்ள உயிரினங்கள். ஆறாவது படியில் குறவன்-குறத்தி, செட்டியார், பாம்புப் பிடாரன் முதலான ஆறறிவுள்ள மனிதர்களின் பொம்மைகள். ஏழாவது படியில் ஞானிகள் மகான்களின் வடிவங்கள் எட்டாவது படியில் தசாவதாரம் முதலான தெய்வ வடிவங்கள். ஒன்பதாவது படியில் அதாவது மேல் படியில் பூர்ண கும்பத்துடன் அம்பிகையின் திருவடிவம் மட்டுமே இருக்க வேண்டும். அவள் அருளால்தான் பலப்பல ஜீவராசிகள் உருவாகி, படிப்படியாக உயர்ந்து மேல் நிலையை அடைகின்றன என்பதை உணர்த்தவே இந்தக் கொலு அமைப்பு.
    இதே போல, நவராத்திரியின் போது, நவ கன்னிகை பூஜை செய்வது விசேஷம். இதன் முறைகளையும் பலன்களையும் தேவிபாகவதத்தில் வியாசர் விவரிக்கிறார்.
    நவராத்திரியின் போது ஒன்பது நாள்களும் முறைப்படி ஒன்பது கன்னிகைகளைப் பூஜை செய்ய வேண்டும்.
    முதல் நாள்: இரண்டு வயதுள்ள பெண் குழந்தையைக் ‘குமாரி’ என்ற பெயரில் பூஜை செய்யவேண்டும். (அந்தப் பெண்ணின் பெயர் குமாரி என்று இருக்க வேண்டும் என்பது பொருள் அல்ல.) குமாரியைப் பூஜை செய்வதன் மூலம் தரித்திரம், பகை நீங்கும். ஆயுளும் செல்வமும் வளரும்.
    இரண்டாம் நாள்: மூன்று வயதுள்ள பெண்ணை திரிமூர்த்தி என்ற பெயரில் பூஜை செய்ய வேண்டும். இப்பூஜை அறம், பொருள், இன்பம், தானியம் ஆகியவை கிடைக்கச் செய்யும். பெயரன், பெயர்த்தி என பரம்பரையும் நீண்ட ஆயுளும் கிடைக்கும்.
    மூன்றாம் நாள்: நான்கு வயதுள்ள பெண்ணை ‘கல்யாணி’ என்ற பெயரில் பூஜை செய்ய வேண்டும். இதன் மூலம் ராஜ்ய சுகம், வித்தை ஆகியவை கிடைக்கும்.
    நான்காவது நாள்: ஐந்து வயதுள்ள பெண்ணை ரோகிணி என்ற பெயரில் வழிபடவேண்டும். ரோகங்கள் நாசமாகும்.
    ஐந்தாவது நாள்: ஆறு வயதுள்ள பெண்ணை காளிகா என்ற பெயரில் பூஜை செய்ய வேண்டும். பகைவர்கள் அழிந்து போவார்கள்.
    ஆறாவது நாள்: ஏழு வயதுள்ள பெண்ணை சண்டிகா என்ற பெயரில் பூஜை செய்ய வேண்டும். சண்டிகா பூஜை ஸர்வ ஐஸ்வர்யங்களையும் அளிக்கும்.
    ஏழாவது நாள்: எட்டு வயதுள்ள பெண்ணை சாம்பவி என்ற பெயரில் வழிபாடு செய்ய வேண்டும். போரில் வெற்றி, ராஜ யோகம் ஆகியவை கிடைக்கும்.
    எட்டாவது நாள்: ஒன்பது வயதுள்ள பெண்ணை துர்க்கை என்ற பெயரில் பூஜை செய்ய வேண்டும். கொடூரமான பகைவர்களை அழிக்கும், அரிய செயல்களைச் செய்யும் ஆற்றலைக் கொடுக்கும். முக்தி இன்பத்தை அளிக்கும். அப்படிப்பட்ட வழிபாடு இது.
    ஒன்பதாவது நாள்: பத்து வயதுள்ள பெண்ணை சுபத்திரா என்ற பெயரில் பூஜை செய்ய வேண்டும். இந்தப் பூஜையால் அடங்காத மனமும் அடங்கும்.
    வசதியும் மனமும் கொண்டவர்கள் முதல் நாளன்று ஒரு பெண், இரண்டாம் நாளன்று இரண்டு பெண்கள் என ஒவ்வொரு நாளும் அந்தந்த நாளுக்குண்டான எண்ணிக்கைப்படி பெண்களை உட்கார வைத்துப் பூஜை செய்யலாம். மிகவும் சக்திவாய்ந்த வழிபாடு இது.
    இவ்வாறு சொன்ன வியாசர், ஆங்கிரச முனிவரின் நவராத்திரி பூஜையையும் சொல்கிறார். அது:-
Working...
X