Announcement

Collapse
No announcement yet.

கீதை – பதிமூன்றாவது அத்தியாயம் 13-1

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – பதிமூன்றாவது அத்தியாயம் 13-1

    க்ஷேத்ர – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்
    இதில் தேகம், ஆத்மா இவைகளுடைய சொரூபமும் இவைகள் ஒன்றோடொன்று சேர்வதற்குக் காரணமும் கூறப்படுகின்றன. தேகம் என்பது பிரகிருதியின் விகாரமாகும். அது ஐந்து பூதங்களும் பதினோரு புலன்களும் அடங்கியது.
    இத்தேகத்தின் சேர்க்கையால்தான் ஆத்மாவுக்கு அற்ப விஷயங்களில் விருப்பமும், இன்பம், துன்பம், கோபம், தாபம் முதலியவைகளும் உண்டாகின்றன. கைவல்ய நிலை பெற்ற ஆத்மாவிற்கு இவை ஒன்றுமில்லை. அத்தகைய நிலையைப் பெறவேண்டுமானால் கர்வம், டம்பம் இவைகளை விடவேண்டும்.
    ஆசாரியனைப் பணிந்து அவனருளால் தூய்மை பெற்றுப் புலன்களை அடக்க வேண்டும். வேறு பலனைக் கோராமல் கடவுளைத் தியானிக்க வேண்டும். ஆத்மாவுக்கு உண்மையில் பிறப்பு இறப்பு கிடையாது. தேகசம்பந்தமே பிறப்பெனவும், அதன் பிரிவே இறப்பெனவும் கூறப்படும்.

    அறிவற்ற தேகமானது ஆத்ம சம்பந்தத்தால் பற்பல காரியங்களைச் செய்கிறது. இவ்வித ஆத்ம சொரூபத்தைக் கர்ம யோகத்தினாலும், ஞானயோகத்தினாலும் பெறலாம். தாவர, ஜங்கமங்களெல்லாம் ஆத்ம பிரகிருதியின் சேர்க்கையால் உண்டாகின்றன.
    अर्जुन उवाच
    प्रकृतिं पुरुषं चैव क्षेत्रं क्षेत्रज्ञमेव च |
    एतद्वेदितुमिच्छामि ज्ञानं ज्ञेयं च केशव ||
    அர்ஜுந உவாச
    ப்ரக்ருதிம் புருஷம் சைவ க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞமேவ ச |
    ஏதத்³வேதி³துமிச்சா²மி ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச கேஸ²வ ||
    அர்ஜுந உவாச கேஸ²வ = அர்ஜுனன் சொல்லுகின்றான், கேசவா
    ப்ரக்ருதிம் புருஷம் க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞ ச = பிரகிருதி, புருஷன், க்ஷேத்திரம், க்ஷேத்திரக்ஞன்
    ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஏவ ச = ஞானம், ஞேயம் என்னும்
    ஏதத் வேதி³தும் = இவற்றை அறிய
    இச்சா²மி = விரும்புகிறேன்


    श्रीभगवानुवाच
    इदम् शरीरं कौन्तेय क्षेत्रमित्यभिधीयते ।
    एतद्यो वेत्ति तं प्राहुः क्षेत्रज्ञ इति तद्विदः ॥१३- १॥
    ஸ்ரீப⁴க³வாநுவாச
    இத³ம் ஸ²ரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யபி⁴தீ⁴யதே |
    ஏதத்³யோ வேத்தி தம் ப்ராஹு: க்ஷேத்ரஜ்ஞ இதி தத்³வித³: || 13- 1||
    ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
    கௌந்தேய = குந்தி மகனே
    இத³ம் ஸ²ரீரம் க்ஷேத்ரம் இதி = இந்த உடம்பு க்ஷேத்திரம் என்று
    அபி⁴தீ⁴யதே = சொல்லப்படுகிறது
    ஏதத் ய: வேத்தி = இதனை எவன் அறிகிறானோ
    தம் க்ஷேத்ரஜ்ஞ இதி = அவனை க்ஷேத்திரக்ஞன் என்று
    தத்³வித³: ப்ராஹு: = ஞானிகள் கூறுகிறார்கள்
    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: குந்தி மகனே, இந்த உடம்பு க்ஷேத்திரம் என்று சொல்லப்படுகிறது. இதனை அறிந்து நிற்போனை க்ஷேத்திரக்ஞ னென்று பிரம்ம ஞானிகள் சொல்லுகிறார்கள்.


    क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत ।
    क्षेत्रक्षेत्रज्ञयोर्ज्ञानं यत्तज्ज्ञानं मतं मम ॥१३- २॥
    க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்³தி⁴ ஸர்வக்ஷேத்ரேஷு பா⁴ரத |
    க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோர்ஜ்ஞாநம் யத்தஜ்ஜ்ஞாநம் மதம் மம || 13- 2||
    பா⁴ரத = பாரதா,
    ஸர்வக்ஷேத்ரேஷு = எல்லா க்ஷேத்திரங்களிலும்
    க்ஷேத்ரஜ்ஞம் அபி = க்ஷேத்திரக்ஞனும்
    மாம் வித்³தி⁴ = நானே என்றுணர்
    ச க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோ: = க்ஷேத்திரமும், க்ஷேத்திரக்ஞனும் (பற்றி அறியும்)
    யத் ஜ்ஞாநம் = எது ஞானம்
    தத் ஜ்ஞாநம் மம மதம் = அதுவே ஞானமென்பது என் கொள்கை
    பாரதா, எல்லா க்ஷேத்திரங்களிலும் க்ஷேத்திரக்ஞன் நானே என்றுணர். க்ஷேத்திரமும், க்ஷேத்திரக்ஞனும் எவை என்றறியுஞ் ஞானமே உண்மையான ஞானமென்பது என் கொள்கை.


    तत्क्षेत्रं यच्च यादृक्च यद्विकारि यतश्च यत् ।
    स च यो यत्प्रभावश्च तत्समासेन मे शृणु ॥१३- ३॥
    தத்க்ஷேத்ரம் யச்ச யாத்³ருக்ச யத்³விகாரி யதஸ்²ச யத் |
    ஸ ச யோ யத்ப்ரபா⁴வஸ்²ச தத்ஸமாஸேந மே ஸ்²ருணு || 13- 3||
    தத் க்ஷேத்ரம் யத் = அந்த க்ஷேத்திரமென்பது யாது?
    ச யாத்³ருக் = எவ்வகைப்பட்டது?
    ச யத்³விகாரி = என்ன மாறுதல்களுடையது?
    யத: யத் ச = எங்கிருந்து வந்தது?
    ஸ: ய: ச = அவன் (க்ஷேத்திரக்ஞன்) யார்?
    யத்ப்ரபா⁴வ ச = அவன் பெருமை எப்படிப்பட்டது?
    தத் ஸமாஸேந மே ஸ்²ருணு = இவற்றை சுருக்கமாக என்னிடமிருந்து கேள்
    அந்த க்ஷேத்திரமென்பது யாது? எவ்வகைப்பட்டது? என்ன மாறுதல்களுடையது? எங்கிருந்து வந்தது? க்ஷேத்திரக்ஞன் யார்? அவன் பெருமை எப்படிப்பட்டது? இவற்றை நான் சுருக்கமாகச் சொல்லுகிறேன், கேள்.


    ऋषिभिर्बहुधा गीतं छन्दोभिर्विविधैः पृथक् ।
    ब्रह्मसूत्रपदैश्चैव हेतुमद्भिर्विनिश्चितैः ॥१३- ४॥
    ருஷிபி⁴ர்ப³ஹுதா⁴ கீ³தம் ச²ந்தோ³பி⁴ர்விவிதை⁴: ப்ருத²க் |
    ப்³ரஹ்மஸூத்ரபதை³ஸ்²சைவ ஹேதுமத்³பி⁴ர்விநிஸ்²சிதை: || 13- 4||
    ருஷிபி⁴: ப³ஹுதா⁴ கீ³தம் = ரிஷிகளால் பலவகைகளிலே பாடப் பட்டது
    விவிதை⁴: ச²ந்தோ³பி⁴: ப்ருத²க் = பலவிதமான சந்தங்கள் (வேத மந்திரங்கள்) மூலமாகவும் தனித்தனியே கூறப் பட்டது
    ச விநிஸ்²சிதை: ஹேதுமத்³பி⁴ = நல்ல நிச்சயமுடையனவுமாகிய, யுக்திகளுடன் விளங்கும்
    ப்³ரஹ்மஸூத்ரபதை³: ஏவ = பிரம்ம சூத்திர பதங்களிலும் இசைக்கப்பட்டது
    அது (க்ஷேத்திரம்) ரிஷிகளால் பலவகைகளிலே பல்வேறு சந்தங்களில் பாடப்பட்டது. ஊகம் நிறைந்தனவும், நல்ல நிச்சயமுடையனவுமாகிய பிரம்ம சூத்திர பதங்களில் இசைக்கப்பட்டது.


    महाभूतान्यहंकारो बुद्धिरव्यक्तमेव च ।
    इन्द्रियाणि दशैकं च पञ्च चेन्द्रियगोचराः ॥१३- ५॥
    மஹாபூ⁴தாந்யஹங்காரோ பு³த்³தி⁴ரவ்யக்தமேவ ச |
    இந்த்³ரியாணி த³ஸை²கம் ச பஞ்ச சேந்த்³ரியகோ³சரா: || 13- 5||
    மஹாபூ⁴தாநி அஹங்கார: பு³த்³தி⁴: ச = மகா பூதங்கள் (ஐம் பூதங்கள்), அகங்காரம், புத்தி
    அவ்யக்தம் ஏவ = அவ்யக்தம்
    த³ஸ² இந்த்³ரியாணி ச = பத்து இந்திரியங்கள் (புலன்கள்)
    ஏகம் ச = மனதுடன் சேர்த்து (பதினொன்று)
    பஞ்ச இந்த்³ரியகோ³சரா: = இந்திரிய நிலங்கள் ஐந்து (சுவை, ஒளி, ஓசை போன்ற புலன் நுகர் பொருட்கள்)
    மகா பூதங்கள் அகங்காரம், புத்தி, அவ்யக்தம், பதினோரு இந்திரியங்கள், இந்திரிய நிலங்கள் ஐந்து,


    इच्छा द्वेषः सुखं दुःखं संघातश्चेतना धृतिः ।
    एतत्क्षेत्रं समासेन सविकारमुदाहृतम् ॥१३- ६॥
    இச்சா² த்³வேஷ: ஸுக²ம் து³:க²ம் ஸங்கா⁴தஸ்²சேதநா த்⁴ருதி: |
    ஏதத்க்ஷேத்ரம் ஸமாஸேந ஸவிகாரமுதா³ஹ்ருதம் || 13- 6||
    இச்சா² த்³வேஷ: = வேட்கை, பகைமை,
    ஸுக²ம் து³:க²ம் = இன்பம், துன்பம்,
    ஸங்கா⁴த: சேதநா = உடம்பு, சைதன்ய சக்தி
    த்⁴ருதி: = உள்ளத்துறுதி
    ஸவிகாரம் = ஆகிய மாறுபாடுகள் உடைய
    ஏதத் க்ஷேத்ரம் = இந்த க்ஷேத்திரம்
    ஸமாஸேந உதா³ஹ்ருதம் = சுருக்கி சொல்லப் பட்டது
    வேட்கை, பகைமை, இன்பம், துன்பம், உடம்பு, உணவு, உள்ளத்துறுதி இவையே க்ஷேத்திரமும் அதன் வேறுபாடுகளுமாம் என உனக்குச் சுருக்கிக் காட்டினேன்.


    अमानित्वमदम्भित्वमहिंसा क्षान्तिरार्जवम् ।
    आचार्योपासनं शौचं स्थैर्यमात्मविनिग्रहः ॥१३- ७॥
    அமாநித்வமத³ம்பி⁴த்வமஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம் |
    ஆசார்யோபாஸநம் ஸௌ²சம் ஸ்தை²ர்யமாத்மவிநிக்³ரஹ: || 13- 7||
    அமாநித்வம் = கர்வமின்மை,
    அத³ம்பி⁴த்வம் = டம்பமின்மை,
    அஹிம்ஸா = ஹிம்சை செய்யாமை,
    க்ஷாந்தி = பொறுமை,
    ஆர்ஜவம் = நேர்மை,
    ஆசார்ய உபாஸநம் = ஆசாரியனை வழிபடுதல்,
    ஸௌ²சம் = தூய்மை,
    ஸ்தை²ர்யம் = ஸ்திரத்தன்மை,
    ஆத்மவிநிக்³ரஹ: = தன்னைக் கட்டுதல்
    கர்வமின்மை, டம்பமின்மை, ஹிம்சை செய்யாமை, பொறுமை, நேர்மை, ஆசாரியனை வழிபடுதல், தூய்மை, ஸ்திரத்தன்மை, தன்னைக் கட்டுதல்.


    इन्द्रियार्थेषु वैराग्यमनहंकार एव च ।
    जन्ममृत्युजराव्याधिदुःखदोषानुदर्शनम् ॥१३- ८॥
    இந்த்³ரியார்தே²ஷு வைராக்³யமநஹங்கார ஏவ ச |
    ஜந்மம்ருத்யுஜராவ்யாதி⁴து³:க²தோ³ஷாநுத³ர்ஸ²நம் || 13- 8||
    இந்த்³ரிய அர்தே²ஷு வைராக்³யம் ச = இந்திரிய விஷயங்களில் விருப்பமின்மை
    அநஹங்கார: ஏவ = அகங்காரம் இல்லாமை,
    ஜந்ம ம்ருத்யு = பிறப்பு, இறப்பு,
    ஜராவ்யாதி⁴ = நரை, நோய்,
    து³:க² தோ³ஷ = துக்கம், தோஷம்
    அநுத³ர்ஸ²நம் = இவற்றின்கண் இசைந்த காட்சியுடைமை
    இந்திரிய விஷயங்களில் விருப்பமின்மை, அகங்காரம் இல்லாமை, பிறப்பு, இறப்பு, நரை, நோய், துக்கம், தோஷம் இவற்றின்கண் இசைந்த காட்சியுடைமை.


    असक्तिरनभिष्वङ्गः पुत्रदारगृहादिषु ।
    नित्यं च समचित्तत्वमिष्टानिष्टोपपत्तिषु ॥१३- ९॥
    அஸக்திரநபி⁴ஷ்வங்க³: புத்ரதா³ரக்³ருஹாதி³ஷு |
    நித்யம் ச ஸமசித்தத்வமிஷ்டாநிஷ்டோபபத்திஷு || 13- 9||
    புத்ர தா³ர க்³ருஹாதி³ஷு = மகனையும் மனைவியையும், வீட்டையும்
    அஸக்தி = பற்றின்மை
    அநபி⁴ஷ்வங்க³: = தன்னுடைமையெனக் கருதாமை,
    ச = மேலும்
    இஷ்ட அநிஷ்ட உபபத்திஷு = விரும்பியனவும் விரும்பாதனவும் எய்துமிடத்தே
    நித்யம் ஸமசித்தத்வம் = எப்போதுமே சமசித்தமுடைமை
    பற்றின்மை, மகனையும் மனைவியையும், வீட்டையும் தன்னுடைமையெனக் கருதாமை, விரும்பியனவும் விரும்பாதனவும் எய்துமிடத்தே சமசித்தமுடைமை


    मयि चानन्ययोगेन भक्तिरव्यभिचारिणी ।
    विविक्तदेशसेवित्वमरतिर्जनसंसदि ॥१३- १०॥
    மயி சாநந்யயோகே³ந ப⁴க்திரவ்யபி⁴சாரிணீ |
    விவிக்ததே³ஸ²ஸேவித்வமரதிர்ஜநஸம்ஸதி³ || 13- 10||
    மயி அநந்யயோகே³ந = என்னிடம் பிறழ்ச்சியற்ற யோகத்துடன்
    அவ்யபி⁴சாரிணீ ப⁴க்தி: ச = தவறுதலின்றிச் செலுத்தப்படும் பக்தி
    விவிக்த தே³ஸ² ஸேவித்வம் = தனியிடங்களை மேவுதல்
    ஜநஸம்ஸதி³ அரதி = ஜனக் கூட்டத்தில் விருப்பமின்மை
    பிறழ்ச்சியற்ற யோகத்துடன் என்னிடம் தவறுதலின்றிச் செலுத்தப்படும் பக்தி, தனியிடங்களை மேவுதல், ஜனக் கூட்டத்தில் விருப்பமின்மை


    Continued
Working...
X