Announcement

Collapse
No announcement yet.

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்

    information

    Information

    ‘அம்பிகை வளர்த்த அறங்கள்’ என்ற தலைப்பில் சில மாதங்களுக்கு முன்பு ‘மனித குலம் செய்யவேண்டிய 32 வகை அறங்கள்’ குறித்து ஒரு பதிவை அளித்திருந்தோம். அவை மிகவு சுருக்கமாக இருந்தது. அது பற்றி விரிவான ஒரு பதிவை அளிக்குமாறு அப்பொழுதே ஒரு வாசகர் கேட்டிருந்தார். அது குறித்து உரிய ஆதாரங்களை திரட்டி நேரம் வரும்போது அளிப்பதாக அவருக்கு பதிலளித்திருந்தோம்.
    சமீபத்தில் ஒரு நாள் பல்லாவரம் சென்றிருந்தபோது, ‘ஸ்ரீ பூர்ண மஹா மேரு டிரஸ்ட்’ என்னும் ஆதரவற்ற முதியோர் இல்லம் ஒன்றை பார்க்க நேர்ந்தது. அந்த முதியோர் இல்லத்தின் வாசலில் ‘மனித குலம் செய்யவேண்டிய 32 அறங்கள்’ குறித்து ஒரு மிகப் பெரிய பேனரை வைத்திருந்தார்கள். அதை படித்தபோது நாம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை






    notice

    Notice

    இவை அனைத்தும் நம் அம்பிகை தனது பல்வேறு அவதாரங்களில் வளர்த்த அறங்களே. ஆகையால் தான் அவளுக்கு ‘தர்மசம்வர்த்தினி’ என்கிற பெயர் உண்டாயிற்று. ‘தர்மசம்வர்த்தினி’ = அறம் வளர்த்த நாயகி.
    அறங்களை படிக்கும்போதே இத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறதே… அவற்றை செய்தால் இன்னும் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்?
    அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
    புறத்த புகழும் இல (குறள் 39)
    இவற்றில் பல அறங்கள் செய்ய மிகப் பெரிய பொருளாதார வசதி தேவையில்லை. பரபரப்பான உங்கள் வாழ்க்கையில் சில மணித்துளிகளும், இதயத்தின் ஓரத்தில் கொஞ்சம் ஈரமும், ஏழைகளுக்கு உதவவேண்டும் என்கிற எண்ணமுமே போதுமானது.


    திருக்குறளில் பல்வேறு இடங்களில் திருவள்ளுவர் அறம் செய்து வாழ்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.
    ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
    வைத்திழக்கும் வன்க ணவர். (குறள் 228)




    ===========================================================
    மனித குலம் செய்யவேண்டிய 32 அறங்கள்



    1) ஆதுலர்க்கு சாலை அமைத்தல் : நோயாளிகள் மற்றும் முதியோர்களுக்கு வீடு கட்டி தந்து அன்பாக மருந்தளித்தல்
    2) ஓதுவார்க்கு உணவு : கல்வி பயில்பவர்களுக்கு நல்ல முறையில் கல்வி புகட்டி அவர்களுக்கு உணவு அளித்தால்


    3) மாந்தர்க்கு உணவு : சமய வேறுபாடின்றி அனைவருக்கும் உணவு வழங்குதல்
    4) பசுவுக்கு வாயுறை :பசுக்களை தெய்வமாக பாவித்து அவற்றை போஷித்து உணவளித்தல்
    5) சிறைச்சோறு : சிறையில் அடைக்கப் பட்டிருப்பவர்களுக்கு நல்ல உணவளித்தல்
    6) ஐயம் : இரப்பவர்க்கு ஈதல். யாசகம் கேட்டு வருபவர்களுக்கு ‘இல்லை’ என்று சொல்லாமல் இயன்ற உதவி செய்தல்
    7) வழிப்போக்கர்க்கு உதவுவதல் : வழிப்போக்கர்களுக்கு உணவு வழங்கி அவர்களது பசி தீர்த்தல்
    8) அறவைச் சோறு : ஆதரவற்ற அனாதைகளுக்கு உணவளித்தல்
    9) மகப்பேறுவித்தல் : பெண்கள் பிரசவிக்கும் நேரத்தில் அவர்கள் உடனிருந்து தேவையான உதவிகளை செய்தல்
    10) மகவு வளர்த்தல் : குழந்தைகளை பராமரித்து அவர்களை வளர்ப்பதில் உதவுதல்
    11) மகப்பால் வார்த்தல் : தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்குப் பாலளித்தல்
    12) அறிவைப் பிணம் சுடுதல் : அனாதைகள் மற்றும் ஆதரவற்றவர்களின் உடலுக்கு ஈமச்சடங்கு செய்து தகனம் செய்ய உதவுதல்


    13) அறவைத் தூரியம் : ஆதரவற்றவர்களுக்கு தேவையான துணிமணிகள் மற்றும் ஆடைகள் கொடுத்து அவர்கள் மானம் காத்தல்
    14) சுண்ணம் : தாம்பூலம் தரிப்பவர்களுக்கு சுண்ணாம்பு கொடுத்து உதவுதல்
    15) நோய்மருந்து : நோயில் தவிப்பவர்களுக்கு மருந்து வாங்கித் தந்து உதவுதல்
    16) வண்ணார் : ஏழை எளியோருக்கு துணி துவைக்க உதவுதல், அவர்கள் ஆடைகளை வெளுத்துக் கொடுத்து உதவுதல் (வண்ணார்களுக்கு தரவேண்டிய கூலியை உடனே தந்துவிடவேண்டும். தாமதிக்ககூடாது.)




    17) நாவிதர் : ஏழை எளியோருக்கு முடிவெட்டிக்கொள்ள, முகச்சவரம் செய்ய உதவுதல் (நாவிதர்களின் கூலியையும் உடனே தந்துவிடவேண்டும். தாமதிப்பது பாபம்.)
    18) கண்ணாடி : ஒருவர் தங்களை ஒழுங்குபடுத்தி சரி செய்துகொள்ள கண்ணாடி கொடுத்து உதவுதல்
    19) காதோலை : பெண்கள் காதணியில்லாது (தோடு) இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு காதணி வாங்கித் தந்து உதவுதல்
    20) கண்மருந்து : பெண்கள் தங்கள் கண்களை அழகுபடுத்திக்கொள்ள கண்மை அளித்தல்
    21) தலைக்கு எண்ணை : பரட்டை தலையோடு இருக்கும் ஏழை எளியோருக்கு தலைக்கு எண்ணை வாங்கி கொடுத்தல்
    22) பெண் போகம் : தனக்குரிய பெண்ணிடம் முறையான இன்பம் அனுபவிக்க வழியில்லா ஏழைகளுக்கு உரிய தனியிடம் அமைத்து தருதல்
    23) பிறர் துயர் தீர்த்தல் : காயமோ நோயோ ஏற்பட்டு துன்பப்படுபவர்களுக்கு உதவுதல்
    24) தண்ணீர் பந்தல் : தாகத்தால் தவிப்பவர்களுக்கு தண்ணீர் தந்து உதவுதல்
    25) மடம் : வழிப்போக்கர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள, குளிக்க, இயற்கை உபாதையை தணித்துக்கொள்ள சாலையோரங்களில், விடுதி அமைத்தல்
    26) தடம் : வழிப்போக்கர்கள் நீர் அருந்தி இளைப்பாற குளம் தோண்டுதல், அவற்றை பராமரித்தல்
    27) சோலை : நிழல் தரும் மரங்கள் மற்றும் பூஞ்சோலை அமைத்து அவர்கள் தங்கி இளைப்பாற உதவுதல்
    28) ஆ உராய்ஞ்சிக்கல் நிறுவுதல் : பசுக்கள் மேயும் இடங்களிலும், பசு கொட்டில்களிலும் அவை தங்கள் உடலை தேய்த்துக்கொள்ள பசு உராய்ஞ்சிக்கல் நிறுவதல்
    29) ஏறு விடுதல் : பசுக்களை சினைப்படுத்த தரமான எருதுகளை கொடுத்து உதவுதல் மற்றும் எருதுகளை பேணுதல்
    30) விலங்கிற்கு உணவு : பல்வேறு விலங்கினங்கள் பசியாற உணவை கொடுத்து உதவுதல்
    31) விலை கொடுத்து உயிர் காத்தல் : கொலைக்குச் செல்லும் உயிர்களை வாங்கிக் காத்தல்
    32) கன்னிகா தானம் : வரன் தேடிக் கொடுத்து உதவுதல். ஏழைப் பெண்களின் திருமணத்திலும் திருமண வயது நெருங்கியும் திருமணமாகாமல் தவிக்கும் முதிர்கன்னிகளுக்கும் திருமணம் செய்து வைத்து உதவுதல்.

    ===========================================================
    மாதம் ரூ.5,000/- சம்பாதிப்பவர் முதல் ரூ.5,00,000/- சம்பாதிப்பவர் வரை அவரவர் சக்திக்கு ஏற்ப, செய்யக்கூடிய பலவகை அறங்கள் மேற்படி பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
Working...
X