Announcement

Collapse
No announcement yet.

பாக்யதா லட்சுமி பாரம்மா’.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பாக்யதா லட்சுமி பாரம்மா’.

    Courtesy: Sri.GS.Dattatreyan


    பாக்யதா லட்சுமி பாரம்மா'.


    எளிமை எளிமை எளிமை
    இனிமை இனிமை இனிமை


    அதற்கு இன்னொரு அற்புதமான உதாரணம் இந்தப் பாடல்.


    மஹாலட்சுமியின் சிறப்புகளை விளக்கும் வேத மந்திரமான ஸ்ரீ சூக்தத்தின் சாரத்தினை அப்படியே இந்தப் பாட்டில் தந்திருக்கிறார் புரந்தரதாஸர்.


    சூரியசந்திரர்களைப் போல் ஒளியுடைய,
    குதிரைகளைப் பூட்டிய தேரில் பவனி வரும்,
    ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் மனைவியான


    ஸ்ரீ லட்சுமி தேவி


    தன் பக்தர்களின் குறைகளை போக்கும் இளகிய மனமுடையவள்,
    சகல சௌபாக்கியங்களை கொடுக்கக்கூடியவள்,
    தன்னை வணங்குபவர்கள் எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருக்கும்படி செய்பவள்


    என்று ஸ்ரீ சூக்தம் ஸ்ரீ லட்சுமி தேவியின் சிறப்புகளை எடுத்துச் சொல்கிறது.


    அதையே நம்ம தாஸர் எளிய கன்னடத்தில் நமக்கு புரியும்படி எடுத்துரைக்கிறார்.


    இப்போ பாடல்.


    ***


    பாக்யதா லட்சுமி பாரம்மா
    நம்மம்மா நீ சௌபாக்யதா லட்சுமி பாரம்மா


    பாக்கியத்தை கொடுக்கும் லட்சுமியே வாம்மா
    என் தாயே, சகல சௌபாக்கியத்தை கொடுக்கும் லட்சுமியே வாம்மா


    ஹெஜ்ஜெ கால்களா த்வனிய மாடுதா
    ஹெஜ்ஜெய மேல் ஒந்து ஹெஜ்ஜெய நிக்குதா
    சஜ்ஜன சாது பூஜெயெ வேளெகே
    மஜ்ஜிகே ஒளகின பெண்ணேயந்தே (பாக்யதா)


    கொலுசு அணிந்த கால்களால் சத்தத்தை செய்தவாறு
    அடி மேல் அடி வைத்து
    நன்கு படித்தவர்களின் பூஜை வேளையில்
    தயிரிலிருந்து (கடைந்தால்) வரும் வெண்ணையைப் போல் (பாக்யதா)


    கனக வ்ருஷ்டியா கரெயுத பாரே
    மன காமனெயா சித்தியு தோரே
    தினகர கோடி தேஜதி ஹொளெயுத
    ஜனகராயன குமாரி பேக (பாக்யதா)


    தங்க மழை பெய்தவாறே வாராய்
    என் விருப்பங்களை நிறைவேற்றுவாய்
    கோடி சூரியர்களின் ஒளியை (போல தேஜஸ்) கொண்ட
    ஜனகனின் மகளே (சீதையே) சீக்கிரம் (பாக்யதா)


    அத்தித்தகலதே பக்தர மனெயொளு
    நித்ய மஹோத்ஸவ நித்ய சுமங்கள
    சத்யவ தோருவ சாது சஜ்ஜனர
    சித்ததி ஹொளெயுவ புத்தளி பொம்பே (பாக்யதா)


    அங்கிங்கு போகாமல் (நேராக) பக்தர்களின் வீட்டிற்கு (நீ வந்தால்)
    (அங்கே) எப்போதும் திருவிழா; தினமும் சந்தோஷம்
    (வேத சாஸ்திரங்களின்) உண்மையை எடுத்துரைக்கும் பக்திமான்களின்
    மனதில் எப்போதும் நிலைகொண்டிருக்கும் லட்சுமி (பாக்யதா)


    சங்க்யே இல்லதா பாக்யவ கொட்டு
    கங்கண கையா திருகுத பாரே
    குங்குமாங்கிதே பங்கஜ லோசன
    வேங்கடரமணன பட்டத ராணி (பாக்யதா)


    கணக்கேயில்லாத பாக்கியத்தைக் கொடுக்கும்
    வளையல்கள் கூடிய (உன்) வலது கையை காட்டியவாறே வாராய்
    குங்குமம் இட்ட நெற்றியோடு, தாமரை (போல்) விழிகளை கொண்டவளே,
    வேங்கடரமணனின் பட்டத்து ராணியே (பாக்யதா)


    சக்கரே துப்பவ காலுவே ஹரிசி
    சுக்ரவாரதா பூஜய வேளகே
    அக்கரெயுள்ள அளகிரி ரங்கன
    சொக்க புரந்தர விட்டலன ராணி (பாக்யதா)


    சக்கரையும், நெய்யும் மழையாய் பெய்ய
    வெள்ளிக்கிழமை பூஜை வேளையில்
    கருணையே வடிவான ரங்கனின்,
    புரந்தர விட்டலனின் ராணியே (பாக்யதா)
Working...
X