Announcement

Collapse
No announcement yet.

கீதை – பதினான்காவது அத்தியாயம் 14 [1]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – பதினான்காவது அத்தியாயம் 14 [1]

    குணத்ரய விபாக யோகம்


    தேக சம்பந்தமே ஆத்மாவின் சுக துக்கங்களுக்கும் கோபதாபம் முதலிய குணங்களுக்கும் காரணமென்று முற்கூறிய விஷயம் இதில் விவரிக்கப்படுகிறது. உலகத்தை படைக்க எண்ணங்கொண்ட கடவுள் முதலில் பிரகிருதியையும், ஜீவனையும் சேர்க்கிறார்.
    பிறகு பிரகிருதி ஆத்மாவின் மும்மைக் காமத்துக்கேற்ப தேவ மனுஷ்ய பசு பக்ஷி ரூபங்களைப் பெற்று சத்வ, ரஜஸ், தமோ குணங்களால் ஆத்மாவைப் பிணிக்கிறது. அவற்றுள் சத்வம் மனிதனுக்கு ஞானவொளியையும் நன்மார்க்கத்தில் விருப்பத்தையும் அளிக்கிறது.

    ரஜஸ் அவா, பற்றுதல் முதலிய குணங்களையளித்து கர்மங்களில் தூண்டுகிறது; தமஸ் மயக்கம், சோம்பல், உறக்கம் முதலியவற்றையளிக்கிறது. இம்மூன்று குணங்களுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமயங்களில் தலையெடுத்து நிற்கும். அப்போது மனிதனுக்கு அதற்கேற்ற குணங்கள் உதிக்கின்றன. முற்கூறிய கடவுளைடத் தியானிப்போன் இம்மூன்று குணங்களையும் வென்று சித்தி பெறுவான்
    श्रीभगवानुवाच
    परं भूयः प्रवक्ष्यामि ज्ञानानां ज्ञानमुत्तमम् ।
    यज्ज्ञात्वा मुनयः सर्वे परां सिद्धिमितो गताः ॥१४- १॥
    ஸ்ரீப⁴க³வாநுவாச
    பரம் பூ⁴ய: ப்ரவக்ஷ்யாமி ஜ்ஞாநாநாம் ஜ்ஞாநமுத்தமம் |
    யஜ்ஜ்ஞாத்வா முநய: ஸர்வே பராம் ஸித்³தி⁴மிதோ க³தா: || 14- 1||
    ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
    யத் ஜ்ஞாத்வா ஸர்வே முநய: = எதை அறிந்து எல்லா முனிவர்களும்
    இத: பராம் ஸித்³தி⁴ம் க³தா: = இவ்வுலகத்திலேயே ஈடேற்றம் பெற்றிருக்கிறார்களோ
    ஜ்ஞாநாநாம் உத்தமம் = அந்த ஞானங்களிலேயே உயர்ந்த
    பரம் ஜ்ஞாநம் = பரம ஞானத்தை
    பூ⁴ய: ப்ரவக்ஷ்யாமி = மறுபடி உரைக்கிறேன்
    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஞானங்களனைத்திலும் மேலான பரம ஞானத்தை உனக்கு மீட்டுமுரைக்கிறேன். அதை யறிந்து முனிவரெல்லாரும் இவ்வுலகத்திலேயே ஈடேற்றம் பெற்றிருக்கிறார்கள்.


    इदं ज्ञानमुपाश्रित्य मम साधर्म्यमागताः ।
    सर्गेऽपि नोपजायन्ते प्रलये न व्यथन्ति च ॥१४- २॥
    இத³ம் ஜ்ஞாநமுபாஸ்²ரித்ய மம ஸாத⁴ர்ம்யமாக³தா: |
    ஸர்கே³ऽபி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யத²ந்தி ச || 14- 2||
    இத³ம் ஜ்ஞாநம் உபாஸ்²ரித்ய = இந்த ஞானத்தை அடைந்து
    மம ஸாத⁴ர்ம்யம் ஆக³தா: = அதனால் என்னியல்பு பெற்றோர்
    ஸர்கே³ அபி ந உபஜாயந்தே = படைப்புக் காலத்தில் பிறவார்
    ப்ரலயே ந வ்யத²ந்தி ச = ஊழியிலும் சாகமாட்டார்
    இந்த ஞானத்தை அடைந்து அதனால் என்னியல்பு பெற்றோர், படைப்புக் காலத்தில் பிறவார். ஊழியிலும் சாகமாட்டார்.


    मम योनिर्महद्ब्रह्म तस्मिन्गर्भं दधाम्यहम् ।
    संभवः सर्वभूतानां ततो भवति भारत ॥१४- ३॥
    மம யோநிர்மஹத்³ப்³ரஹ்ம தஸ்மிந்க³ர்ப⁴ம் த³தா⁴ம்யஹம் |
    ஸம்ப⁴வ: ஸர்வபூ⁴தாநாம் ததோ ப⁴வதி பா⁴ரத || 14- 3||
    பா⁴ரத = பாரதா
    மம மஹத்³ப்³ரஹ்ம யோநி = பெரிய பரப்பிரம்மமே எனக்காதாரம்
    அஹம் தஸ்மிந் க³ர்ப⁴ம் த³தா⁴மி = அதில் நான் கருத்தரிக்கிறேன்
    தத: ஸர்வபூ⁴தாநாம் ஸம்ப⁴வ: ப⁴வதி = எல்லா உயிர்களும் அதிலேதான் பிறக்கின்றன
    பெரிய பரப்பிரம்மமே எனக்காதாரம்; அதில் நான் கருத்தரிக்கிறேன். பாரதா, எல்லா உயிர்களும் அதிலேதான் பிறக்கின்றன.


    सर्वयोनिषु कौन्तेय मूर्तयः संभवन्ति याः ।
    तासां ब्रह्म महद्योनिरहं बीजप्रदः पिता ॥१४- ४॥
    ஸர்வயோநிஷு கௌந்தேய மூர்தய: ஸம்ப⁴வந்தி யா: |
    தாஸாம் ப்³ரஹ்ம மஹத்³யோநிரஹம் பீ³ஜப்ரத³: பிதா || 14- 4||
    கௌந்தேய = குந்தியின் மகனே
    ஸர்வயோநிஷு = பல விதமான பிறப்பிடங்களிலும்
    யா: மூர்தய: ஸம்ப⁴வந்தி = எந்த உடல்கள் (வடிவங்கள்) கொண்ட பிராணிகள் உண்டாகின்றனவோ
    தாஸாம் மஹத் ப்³ரஹ்ம: யோநி: = அவை எல்லாவற்றிற்கும் பிரக்ருதியே பிறப்பிடம் (கருத்தரிக்கும் தாய்)
    அஹம் பீ³ஜப்ரத³: பிதா = நான் விதை அளிக்கும் தந்தை
    எல்லாக் கருக்களிலும் பிறக்கும் வடிவங்களனைத்திற்கும் பிரம்மமே பெரிய காரணம். நான் விதை தரும் பிதா.

    सत्त्वं रजस्तम इति गुणाः प्रकृतिसंभवाः ।
    निबध्नन्ति महाबाहो देहे देहिनमव्ययम् ॥१४- ५॥
    ஸத்த்வம் ரஜஸ்தம இதி கு³ணா: ப்ரக்ருதிஸம்ப⁴வா: |
    நிப³த்⁴நந்தி மஹாபா³ஹோ தே³ஹே தே³ஹிநமவ்யயம் || 14- 5||
    மஹாபா³ஹோ = பெருந்தோளாய்
    ஸத்த்வம் ரஜ: தம இதி = சத்வம், ரஜஸ், தமஸ் இந்த குணங்கள்
    ப்ரக்ருதிஸம்ப⁴வா: கு³ணா: = பிரகிருதியில் எழுவன
    தே³ஹே = இவை உடம்பில்
    அவ்யயம் தே³ஹிநம் = அழிவற்ற ஆத்மாவைப்
    நிப³த்⁴நந்தி = பிணைக்கின்றன
    சத்வம், ரஜஸ், தமஸ் இந்த குணங்கள் பிரகிருதியில் எழுவன. பெருந்தோளாய், இவை உடம்பில் அழிவற்ற ஆத்மாவைப் பிணிக்கின்றன.


    तत्र सत्त्वं निर्मलत्वात्प्रकाशकमनामयम् ।
    सुखसङ्गेन बध्नाति ज्ञानसङ्गेन चानघ ॥१४- ६॥
    தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத்ப்ரகாஸ²கமநாமயம் |
    ஸுக²ஸங்கே³ந ப³த்⁴நாதி ஜ்ஞாநஸங்கே³ந சாநக⁴ || 14- 6||
    அநக⁴ = பாவமற்றவனே
    தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத் ப்ரகாஸ²கம் = அவற்றுள்ளே சத்வம், நிர்மலத்தன்மையால் ஒளிகொண்டது
    அநாமயம் = நோவற்றது
    ஸுக²ஸங்கே³ந = அது இன்பச் சேர்க்கையாலும்
    ஜ்ஞாநஸங்கே³ந ச = ஞானச் சேர்க்கையாலும்
    ப³த்⁴நாதி = கட்டுப்படுத்துவது
    அவற்றுள்ளே சத்வம், நிர்மலத்தன்மையால் ஒளிகொண்டது; நோவற்றது, பாவமற்றோய் அது இன்பச் சேர்க்கையாலும் ஞானச் சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது.


    रजो रागात्मकं विद्धि तृष्णासङ्गसमुद्भवम् ।
    तन्निबध्नाति कौन्तेय कर्मसङ्गेन देहिनम् ॥१४- ७॥
    ரஜோ ராகா³த்மகம் வித்³தி⁴ த்ருஷ்ணாஸங்க³ஸமுத்³ப⁴வம் |
    தந்நிப³த்⁴நாதி கௌந்தேய கர்மஸங்கே³ந தே³ஹிநம் || 14- 7||
    கௌந்தேய = குந்தி மகனே
    ராகா³த்மகம் ரஜ: = விருப்ப இயல்புடையது ரஜோகுணம்
    த்ருஷ்ணா ஸங்க³ ஸமுத்³ப⁴வம் வித்³தி⁴ = அவாவின் சேர்க்கையால் பிறப்பது என்று அறிந்து கொள்
    தத் தே³ஹிநம் கர்மஸங்கே³ந = அது ஆத்மாவைத் தொழிற் சேர்க்கையால்
    நிப³த்⁴நாதி = கட்டுகிறது
    ரஜோகுணம் விருப்ப இயல்புடையது; அவாவின் சேர்க்கையால் பிறப்பது. குந்திமகனே, அது ஆத்மாவைத் தொழிற் சேர்க்கையால் கட்டுகிறது.


    तमस्त्वज्ञानजं विद्धि मोहनं सर्वदेहिनाम् ।
    प्रमादालस्यनिद्राभिस्तन्निबध्नाति भारत ॥१४- ८॥
    தமஸ்த்வஜ்ஞாநஜம் வித்³தி⁴ மோஹநம் ஸர்வதே³ஹிநாம் |
    ப்ரமாதா³லஸ்யநித்³ராபி⁴ஸ்தந்நிப³த்⁴நாதி பா⁴ரத || 14- 8||
    பா⁴ரத = பாரதா!
    ஸர்வதே³ஹிநாம் மோஹநம் தம: = உடற்பற்றுடைய எல்லாரையும் மயக்கக் கூடிய தமோ குணமோ
    அஜ்ஞாநஜம் வித்³தி⁴ = அஞ்ஞானத்திலிருந்து உண்டாவதாக தெரிந்து கொள்
    தத் ப்ரமாத ஆலஸ்ய நித்³ராபி⁴ = அது தவறுதலாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும்
    நிப³த்⁴நாதி = கட்டுப்படுத்துகிறது
    தமோகுணம் அஞ்ஞானத்தில் பிறப்பதென்றுணர். இதுவே எல்லா ஜீவர்களையும் மயங்கச்செய்வது. தவறுதலாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும் அது கட்டுப்படுத்துகிறது. பாரதா!


    सत्त्वं सुखे संजयति रजः कर्मणि भारत ।
    ज्ञानमावृत्य तु तमः प्रमादे संजयत्युत ॥१४- ९॥
    ஸத்த்வம் ஸுகே² ஸஞ்ஜயதி ரஜ: கர்மணி பா⁴ரத |
    ஜ்ஞாநமாவ்ருத்ய து தம: ப்ரமாதே³ ஸஞ்ஜயத்யுத || 14- 9||
    பா⁴ரத = பாரதா

    ஸத்த்வம் ஸுகே² ஸஞ்ஜயதி = சத்வம் இன்பத்திலே பற்றுதல் விளைவிக்கிறது
    ரஜ: கர்மணி = ரஜோகுணம் செய்கையில் பற்றுறுத்துகிறது
    தம: து ஜ்ஞாநமாவ்ருத்ய = தமோ குணம் ஞானத்தைச் சூழ்ந்து (ஜீவனை)
    ப்ரமாதே³ உத ஸஞ்ஜயதி = மயக்கத்தில் பிணிக்கிறது
    சத்வம் இன்பத்திலே பற்றுதல் விளைவிக்கிறது. பாரதா, ரஜோகுணம் செய்கையில் பற்றுறுத்துகிறது. தமோ குணம் ஞானத்தைச் சூழ்ந்து (ஜீவனை) மயக்கத்தில் பிணிக்கிறது.


    रजस्तमश्चाभिभूय सत्त्वं भवति भारत ।
    रजः सत्त्वं तमश्चैव तमः सत्त्वं रजस्तथा ॥१४- १०॥
    ரஜஸ்தமஸ்²சாபி⁴பூ⁴ய ஸத்த்வம் ப⁴வதி பா⁴ரத |
    ரஜ: ஸத்த்வம் தமஸ்²சைவ தம: ஸத்த்வம் ரஜஸ்ததா² || 14- 10||
    பா⁴ரத = பாரதா
    ரஜ: தம: ச அபி⁴பூ⁴ய ஸத்த்வம் ப⁴வதி = ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் அடக்கி சத்வம் இயல்கிறது
    ஸத்த்வம் தம: ச ரஜ: = சத்வத்தையும் தமோ குணத்தையும் அடக்கி ரஜோ குணம் நிற்கிறது
    ததா² ஏவ ஸத்த்வம் ரஜ: ச தம: = அங்ஙனமே சத்வத்தையும் ரஜோ குணத்தையும் அடக்கித் தமஸ் மிஞ்சுகிறது
    பாரதா (சில வேளை) ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் அடக்கி சத்வம் இயல்கிறது. (சிலவேளை) சத்வத்தையும் தமோ குணத்தையும் அடக்கி ரஜோ குணம் நிற்கிறது; அங்ஙனமே சத்வத்தையும் ரஜோ குணத்தையும் அடக்கித் தமஸ் மிஞ்சுகிறது.


    सर्वद्वारेषु देहेऽस्मिन्प्रकाश उपजायते ।
    ज्ञानं यदा तदा विद्याद्विवृद्धं सत्त्वमित्युत ॥१४- ११॥
    ஸர்வத்³வாரேஷு தே³ஹேऽஸ்மிந்ப்ரகாஸ² உபஜாயதே |
    ஜ்ஞாநம் யதா³ ததா³ வித்³யாத்³விவ்ருத்³த⁴ம் ஸத்த்வமித்யுத || 14- 11||
    யதா³ அஸ்மிந் தே³ஹே ஸர்வத்³வாரேஷு = எப்போது இந்த உடம்பில் எல்லா வாயில்களிலும்
    ப்ரகாஸ² ஜ்ஞாநம் உபஜாயதே = ஞான ஒளி பிறக்கிறதோ
    ததா³ ஸத்த்வம் உத = அப்போது சத்வ குணம்
    விவ்ருத்³த⁴ம் இதி வித்³யாத் = வளர்ச்சிபெற்ற தென்றறியக் கடவாய்
    இந்த உடம்பில் எல்லா வாயில்களிலும் ஞான ஒளி பிறக்குமாயின் அப்போது சத்வ குணம் வளர்ச்சிபெற்ற தென்றறியக் கடவாய்.


    लोभः प्रवृत्तिरारम्भः कर्मणामशमः स्पृहा ।
    रजस्येतानि जायन्ते विवृद्धे भरतर्षभ ॥१४- १२॥
    லோப⁴: ப்ரவ்ருத்திராரம்ப⁴: கர்மணாமஸ²ம: ஸ்ப்ருஹா |
    ரஜஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்³தே⁴ ப⁴ரதர்ஷப⁴ || 14- 12||
    ப⁴ரதர்ஷப⁴ = பாரதக்காளையே!
    ரஜஸி விவ்ருத்³தே⁴ = ரஜோ குணம் மிகைப்படுவதிலிருந்து
    லோப⁴: ப்ரவ்ருத்தி = அவா, முயற்சி,
    கர்மணாம் ஆரம்ப⁴: = தொழிலெடுப்பு
    அஸ²ம: ஸ்ப்ருஹா = அமைதியின்மை, விருப்பம்
    ஏதாநி ஜாயந்தே = இவை தோன்றுகின்றன
    அவா, முயற்சி, தொழிலெடுப்பு, அமைதியின்மை, விருப்பம் இவை ரஜோ குணம் மிகைப்படுவதிலிருந்து தோன்றுகின்றன. பாரதா, காளையே!


    अप्रकाशोऽप्रवृत्तिश्च प्रमादो मोह एव च ।
    तमस्येतानि जायन्ते विवृद्धे कुरुनन्दन ॥१४- १३॥
    அப்ரகாஸோ²ऽப்ரவ்ருத்திஸ்²ச ப்ரமாதோ³ மோஹ ஏவ ச |
    தமஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்³தே⁴ குருநந்த³ந || 14- 13||
    குருநந்த³ந = குருகுலச்செல்வமே!
    தமஸி விவ்ருத்³தே⁴= தமோ குணம் ஓங்குமிடத்தே
    அப்ரகாஸ²: அப்ரவ்ருத்தி: ச ப்ரமாத³: மோஹ ஏவ ச = ஒளியின்மை, முயற்சியின்மை, தவறுதல், மயக்கம்
    ஏதாநி ஜாயந்தே = இவை பிறக்கின்றன
    ஒளியின்மை, முயற்சியின்மை, தவறுதல், மயக்கம் இவை தமோ குணம் ஓங்குமிடத்தே பிறப்பன. குருகுலச்செல்வமே!

    यदा सत्त्वे प्रवृद्धे तु प्रलयं याति देहभृत् ।
    तदोत्तमविदां लोकानमलान्प्रतिपद्यते ॥१४- १४॥
    யதா³ ஸத்த்வே ப்ரவ்ருத்³தே⁴ து ப்ரலயம் யாதி தே³ஹப்⁴ருத் |
    ததோ³த்தமவிதா³ம் லோகாநமலாந்ப்ரதிபத்³யதே || 14- 14||
    யதா³ தே³ஹப்⁴ருத் ஸத்த்வே ப்ரவ்ருத்³தே⁴= எப்போது மனிதன் சத்வம் ஓங்கி நிற்கையிலே
    ப்ரலயம் யாதி = இறக்கிறானோ
    ததா³ து உத்தமவிதா³ம் = அப்போது மாசற்றவனாகிய உத்தம ஞானிகளின்
    அமலாந் லோகாந் = களங்கமற்ற உலகங்களை
    ப்ரதிபத்³யதே =அடைகிறான்
    சத்வம் ஓங்கி நிற்கையிலே சரீரி இறப்பானாயின், மாசற்றவனாகிய உத்தம ஞானிகளின் உலகங்களை அடைகிறான்.


    Continued
Working...
X