Announcement

Collapse
No announcement yet.

கீதை – பதினைந்தாவது அத்தியாயம் 15[2]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – பதினைந்தாவது அத்தியாயம் 15[2]

    புருஷோத்தம யோகம்
    Continued
    यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मन्यवस्थितम् ।
    यतन्तोऽप्यकृतात्मानो नैनं पश्यन्त्यचेतसः ॥१५- ११॥
    யதந்தோ யோகி³நஸ்²சைநம் பஸ்²யந்த்யாத்மந்யவஸ்தி²தம் |
    யதந்தோऽப்யக்ருதாத்மாநோ நைநம் பஸ்²யந்த்யசேதஸ: || 15- 11||
    யதந்த: யோகி³ந: = முயற்சியுடைய யோகிகள்
    ஆத்மநி அவஸ்தி²தம் ஏநம் பஸ்²யந்தி = இவனைத் தம்முள்ளேயே காண்கின்றனர்
    ச யதந்த: அபி அக்ருதாத்மாந: = முயற்சியுடையோராயினும் தம்மைத் தாம் தூய்மைப் படுத்தாதவர்கள்
    அசேதஸ: = அஞ்ஞானிகள்
    ஏநம் ந பஸ்²யந்தி = இவனைக் காண்கிலர்
    முயற்சியுடைய யோகிகள் இவனைத் தம்முள்ளேயே காண்கின்றனர். முயற்சியுடையோராயினும் தம்மைத் தாம் சமைக்காத அஞ்ஞானிகள் இவனைக் காண்கிலர்.


    यदादित्यगतं तेजो जगद्भासयतेऽखिलम् ।
    यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम् ॥१५- १२॥
    யதா³தி³த்யக³தம் தேஜோ ஜக³த்³பா⁴ஸயதேऽகி²லம் |
    யச்சந்த்³ரமஸி யச்சாக்³நௌ தத்தேஜோ வித்³தி⁴ மாமகம் || 15- 12||
    ஆதி³த்ய க³தம் தேஜ: = சூரியனிடமிருந்து ஒளி
    அகி²லம் ஜக³த் பா⁴ஸயதே = அனைத்து உலகத்தையும் பிரகாசிக்கச் செய்கிறதோ
    ச யத் சந்த்³ரமஸி = சந்திரனிடத்துள்ளதும்
    யத் அக்³நௌ ச = தீயிலுள்ளதும்
    தத் தேஜ: மாமகம் வித்³தி⁴ = அவ்வொளியெல்லாம் என்னுடையதே யென்றுணர்
    சூரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும் சந்திரனிடத்துள்ளதும் தீயிலுள்ளதும், அவ்வொளியெல்லாம் என்னுடையதே யென்றுணர்.


    गामाविश्य च भूतानि धारयाम्यहमोजसा ।
    पुष्णामि चौषधीः सर्वाः सोमो भूत्वा रसात्मकः ॥१५- १३॥
    கா³மாவிஸ்²ய ச பூ⁴தாநி தா⁴ரயாம்யஹமோஜஸா |
    புஷ்ணாமி சௌஷதீ⁴: ஸர்வா: ஸோமோ பூ⁴த்வா ரஸாத்மக: || 15- 13||
    ச அஹம் கா³ம் ஆவிஸ்²ய = நான் பூமியுட் புகுந்து
    ஒஜஸா பூ⁴தாநி தா⁴ரயாமி = உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன்
    ரஸாத்மக: ஸோம: ச பூ⁴த்வா = மேலும் நான் நிலவாகி
    ஸர்வா: ஒஷதீ⁴: புஷ்ணாமி = அனைத்து பயிர்பச்சைகளையும் போஷிக்கிறேன்
    நான் பூமியுட் புகுந்து உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன்.ரச வடிவமுள்ள சோமமாகிப் பூண்டுகளை யெல்லாம் வளர்க்கிறேன்.


    अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रितः ।
    प्राणापानसमायुक्तः पचाम्यन्नं चतुर्विधम् ॥१५- १४॥
    அஹம் வைஸ்²வாநரோ பூ⁴த்வா ப்ராணிநாம் தே³ஹமாஸ்²ரித: |
    ப்ராணாபாநஸமாயுக்த: பசாம்யந்நம் சதுர்வித⁴ம் || 15- 14||
    அஹம் ப்ராணிநாம் தே³ஹம் ஆஸ்²ரித: = உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன்
    ப்ராணாபாநஸமாயுக்த: = பிராண-அபான வாயுக்களுடன் கூடி
    வைஸ்²வாநர: பூ⁴த்வா = வைசுவாநரன் என்கிற அக்னியாகி
    சதுர்வித⁴ம் அந்நம் பசாமி = நால்வகைப்பட்ட அன்னத்தை ஜீரணமாக்குகிறேன்
    நான் வைசுவாநரனாய், உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன்; பிராணன் அபானன் என்ற வாயுக்களுடன் கூடி நால்வகைப்பட்ட அன்னத்தை ஜீரணமாக்குகிறேன்.


    सर्वस्य चाहं हृदि संनिविष्टो मत्तः स्मृतिर्ज्ञानमपोहनं च ।
    वेदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृद्वेदविदेव चाहम् ॥१५- १५॥
    ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி³ ஸந்நிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம் ச |
    வேதை³ஸ்²ச ஸர்வைரஹமேவ வேத்³யோ வேதா³ந்தக்ருத்³வேத³விதே³வ சாஹம் || 15- 15||
    ஸர்வஸ்ய ஹ்ருதி³ அஹம் ஸந்நிவிஷ்ட: = எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன்
    ச மத்த: = மேலும் என்னிடம் இருந்து தான்
    ஸ்ம்ருதி: ஜ்ஞாநம் அபோஹநம் ச = நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் பிறக்கின்றன
    ஸர்வை: வேதை³: ச வேத்³ய: அஹம் ஏவ = எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் நான்
    வேதா³ந்தக்ருத் வேத³வித் ச அஹம் ஏவ = வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே
    எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன். நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் என்னிடமிருந்து பிறக்கின்றன. எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் யான்; வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.


    द्वाविमौ पुरुषौ लोके क्षरश्चाक्षर एव च ।
    क्षरः सर्वाणि भूतानि कूटस्थोऽक्षर उच्यते ॥१५- १६॥
    த்³வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்²சாக்ஷர ஏவ ச |
    க்ஷர: ஸர்வாணி பூ⁴தாநி கூடஸ்தோ²ऽக்ஷர உச்யதே || 15- 16||
    லோகே க்ஷர: ச அக்ஷர ஏவ ச = உலகத்தில் அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என
    இமௌ த்³வௌ புருஷௌ = இரண்டு வகைப் புருஷருளர்
    ஸர்வாணி பூ⁴தாநி க்ஷர: = க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும்
    கூடஸ்த²: அக்ஷர உச்யதே = கூடஸ்தனே அக்ஷர புருஷன்
    உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர்; அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என. க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும். கூடஸ்தனே அக்ஷர புருஷன்.


    उत्तमः पुरुषस्त्वन्यः परमात्मेत्युदाहृतः ।
    यो लोकत्रयमाविश्य बिभर्त्यव्यय ईश्वरः ॥१५- १७॥
    உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதா³ஹ்ருத: |
    யோ லோகத்ரயமாவிஸ்²ய பி³ப⁴ர்த்யவ்யய ஈஸ்²வர: || 15- 17||
    ய: லோகத்ரயம் ஆவிஸ்²ய = எவர் மூன்று உலகுகளினுட் புகுந்து
    பி³ப⁴ர்தி = தாங்கி போஷிக்கிறாரோ
    அவ்யய: ஈஸ்²வர: பரமாத்மா இதி = அழிவற்றவர் என்றும் ஈசுவரன் என்றும் பரமாத்மா என்றும்
    உதா³ஹ்ருத: = அழைக்கப் படுகிறாரோ
    உத்தம: புருஷ: து = அந்த புருஷோத்தமன்
    அந்ய: = இவரில் வேறுபட்டோன்
    இவரில் வேறுபட்டோன் உத்தம புருஷன். அவனே பரமாத்மா எனப்படுவோன். அவன் மூன்று உலகுகளினுட் புகுந்து அவற்றைத் தரிக்கிறான்; கேடற்ற ஈசுவரன்.


    यस्मात्क्षरमतीतोऽहमक्षरादपि चोत्तमः ।
    अतोऽस्मि लोके वेदे च प्रथितः पुरुषोत्तमः ॥१५- १८॥
    யஸ்மாத்க்ஷரமதீதோऽஹமக்ஷராத³பி சோத்தம: |
    அதோऽஸ்மி லோகே வேதே³ ச ப்ரதி²த: புருஷோத்தம: || 15- 18||
    யஸ்மாத் அஹம் க்ஷரம் அதீத: ச = எக்காரணத்தினால் நான் அழியக் கூடிய ஜட வர்க்கத்திற்கு அப்பாற்ப்பட்டவனாகவும்
    அக்ஷராத் அபி உத்தம: = அக்ஷர புருஷனைக் (ஜீவாத்மாவைக்) காட்டிலும் சிறந்தவனாக உள்ளேனோ
    அத: லோகே வேதே³ ச = அக்காரணத்தினால் உலகத்தாராலும் வேதங்களாலும்
    புருஷோத்தம: ப்ரதி²த: அஸ்மி = புருஷோத்தமன் என்று புகழ் பெற்றுள்ளேன்
    நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஷனைக் காட்டிலும் சிறந்தோனாதலாலும், உலகத்தாராலும் வேதங்களாலும் புருஷோத்தம னென்று கூறப்படுகிறேன்.


    यो मामेवमसंमूढो जानाति पुरुषोत्तमम् ।
    स सर्वविद्भजति मां सर्वभावेन भारत ॥१५- १९॥
    யோ மாமேவமஸம்மூடோ⁴ ஜாநாதி புருஷோத்தமம் |
    ஸ ஸர்வவித்³ப⁴ஜதி மாம் ஸர்வபா⁴வேந பா⁴ரத || 15- 19||
    பா⁴ரத: = பாரதா!
    ய: அஸம்மூட⁴: மாம் = எந்த ஞானி என்னை
    ஏவம் புருஷோத்தமம் ஜாநாதி = இவ்வாறு புருஷோத்தமன் என்று அறிகிறானோ
    ஸர்வவித் ஸ: ஸர்வபா⁴வேந = எல்லாமறிந்த அவன் எல்லா விதமாகவும்
    மாம் ப⁴ஜதி = என்னை வழிபடுகிறான்.
    மடமை தீர்ந்தவனாய், எவன் யானே புருஷோத்தமனென்பத அறிவானோ, அவனே எல்லா மறிந்தோன். அவன் என்னை எல்லாத் தன்மையாலும் வழிபடுகிறான்.


    इति गुह्यतमं शास्त्रमिदमुक्तं मयानघ ।
    एतद्*बुद्ध्वा बुद्धिमान्स्यात्कृतकृत्यश्च भारत ॥१५- २०॥
    இதி கு³ஹ்யதமம் ஸா²ஸ்த்ரமித³முக்தம் மயாநக⁴ |
    ஏதத்³*பு³த்³த்⁴வா பு³த்³தி⁴மாந்ஸ்யாத்க்ருதக்ருத்யஸ்²ச பா⁴ரத || 15- 20||
    அநக⁴: = குற்றமற்றோய்
    இதி இத³ம் கு³ஹ்யதமம் ஸா²ஸ்த்ரம் = இங்ஙனம் இந்த மிகவும் ரகசியமான சாஸ்திரத்தை
    மயா உக்தம் = என்னால் கூறப் பட்டது
    ஏதத்³ பு³த்³த்⁴வா பு³த்³தி⁴மாந் க்ருதக்ருத்ய: ச = இதை யுணர்ந்தோன் புத்திமானாவான். செய்யத்தக்கது செய்பவன்
    ஸ்யாத் = ஆகிறான்
    குற்றமற்றோய், இங்ஙனம் மிகவும் ரகசியமான இந்தச் சாஸ்திரத்தை உனக்கு உரைத்தேன். பாரதா, இதை யுணர்ந்தோன் புத்திமானாவான். அவனே செய்யத்தக்கது செய்தான்.


    ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
    श्रिकृष्णार्जुन सम्वादे पुरुषोत्तमयोगो नाम पञ्चदशोऽध्याय: || 15 ||
    ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
    ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
    உரையாடலில் ‘புருஷோத்தம யோகம்’ எனப் பெயர் படைத்த
    பதினைந்தாம் அத்தியாயம் நிறைவுற்றது.
Working...
X