Announcement

Collapse
No announcement yet.

ஏகாதசி வ்ரதம்-நியமங்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஏகாதசி வ்ரதம்-நியமங்கள்



    வைகுந்த ஏகாதசி வ்ரதம் ஸ்ரீவைஷ்ணவருக்கான வ்ரதம் மட்டும் இல்லை. இந்த ஸ்ரீவைகுண்ட ஏகாதசி விரதம் மற்றும் அனைத்து ஏகாதசி ல்ரதங்களும் அனைத்து இந்துக்களின் வ்ரதமாகும். சைவ வைணவ பேதம் இதில் துளியும் கிடையாது. மொத்த மனிதர்களும் இருக்க வேண்டிய வ்ரதமாகும்.


    கேள்வி:-
    ஸ்ரீவைஷ்ணவர்கள் (வைகுண்ட) ஏகாதசிக்கு உபவாசம் தவிர கண்விழிக்கும் வழக்கம் உண்டா?
    எனில் ஏகாதசி வ்ரததின முதல் இரவு என்ன நியமனம், ஏகாதசி இரவு பின் துவாதசி பாரணை ஆன பிறகு அன்று இரவுதான் தூங்கவேண்டுமா -- என ஒருவர் ஸந்தேஹம் கேட்கிறார், தயவுசெய்து விளக்கம் அளிக்கவும்.


    பதில்:-
    ஏகாதசி நாளில் இரவில் தூங்காமல் இருப்பதும் மறுநாள் மதியமும் உறங்காமல் இருப்பதும் விதிக்கப்பட்டது. உபவாஸம் ஏகாதசி ப்ராஹ்மமுஹூர்த்தம் துவங்கி மறுநாள் விடியற்காலை வரை. த்வாதசி விடியற்காலை பெருமாள் திருவாராதனம் அகத்தில் செய்து கோவிலில் ஸேவித்து தீர்த்தம் பருகி உபவாஸத்தை பூர்த்தி செய்ய வேண்டும். தொடர்ந்து பாரணை. மதியம் உறக்கம் இல்லை. த்வாதசி மாலை ஏழு மணிக்கு மேல் உறங்கலாம். எல்லாம் கடினம் தான். ஆனால் ப்ரதி மாஸம் வரும் ஏகாதசிகளில் உபவாஸம் இருந்து பழகினால் எல்லாம் ஸுலபம் தான்.
    உபவாஸம் என்பது பகவானின் ஸமீபம் வசிப்பதாகும். அதாவது பெருமாள் நாமஸ்மரணை முக்யமாகும்.

    உபவாஸம் இருக்க முடியாதவர்கள் குறைவாக சாப்பிடுவது நல்லது. எட்டு வயதுக்கு உட்பட்டோர் எண்பது வயதுக்கு மேற்பட்டோருக்கும் வியாதியஸ்தர்களுக்கும் உபவாஸம் கட்டாயம் இல்லை. இன்று அனேகமாக 90% அனைவரும் வியாதியஸ்தர்களாக உள்ளனர் . அன்னம் குறைவாகவும் தூக்கமும் குறைவாகவும் கொள்க! பகவான் நாமஸ்மரணம் பஜனை ஸ்தோத்ரம் அதிகம் செய்வது சிறப்பு

    கேள்வி:-
    தசமியன்று விழித்திருக்க அவசியமில்லை அல்லவா, ஆனால் பரமபதவாசல் ப்ரவேசத்திற்காக வெகு சீக்கிரமாக எழுந்து தயாராக வேண்டும் அல்லவா?!

    பதில்:- அதுதான் தவறான வழக்கமாக உள்ளது. இப்படி ராத்ரி எல்லாம் வந்து காத்திருக்கும் அவலநிலை நீங்க வேண்டும்*. இதற்காகவே மக்கள் வைகுண்ட ஏகாதசி முழு தத்வத்தை அறிந்தால் பரமபத வாசல் என்ற புதிய தத்வத்தை பெரிதாக எண்ண மாட்டார்கள் *.
    வைகுந்த வாசல் ஆழ்வார் தம் தைவத் தமிழால் ஏற்பட்டது. அஃது தமிழின் திருவாசல். வேதங்கள் ஆகமங்களில் அது இல்லை* . மக்கள் திருவாசலைக் கொண்டாடுங்கள். அவசியம் அந்த வாசலைத்தாண்டி நமது பாவங்களை நிரஸித்து புண்யம் தேடுவோம்.
    ஆனால் போகிக்கு முதல்நாள் இரவு ஜனவரி 12 ராத்திரி இந்த முறை - தசமி ராத்ரி விழித்திருந்து ஏகாதசியைக் கொண்டாடுவது தவறு.

    த்வாதசி விஷ்ணுதிதி - பெருமாளின் திருநாள் . த்வாதசியன்று பகவானைக் கொண்டாடவே ஏகாதசி விரதம் ஏற்பட்டது. அதனை முதலில் பக்தர் பெருமக்கள் அறியவேண்டாமோ?



    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS
Working...
X