Re: Marriage rituals
அந்த காலத்தில் 51 எண்ணிக்கைகள் பக்ஷணங்கள், முடியாதவர்கள் 31 எண்ணீக்கை வைப்பார்கள். இது எதற்காக என்றால் அந்த காலத்தில் மாட்டு வண்டியை தவிர போய் வர வேறு வாஹனங்கள் கிடையாது. 8கிலொமீட்ட்ர் நடந்து கல்யாணதிற்கு வருவார்கள். 8 கிலொ மீட்டர் திரும்ப நடந்து செல்ல வேண்டும். இந்த பக்ஷணங்களை வாயில் போட்டு மென்று தின்று கொண்டே செல்வதால் நடந்து செல்லுவது சிரமம் தெரியாமல் இருக்கும்.
தற்காலத்தில் ஆட்டோ, டாக்சி, பஸ், ரயில், ஆகாய விமானம் எல்லாம் உள்ளது. சக்கரை வியாதியும் உள்ளது. இதற்கு சட்ட திட்டம் எதுவும் கிடையாது. ஒவ்வொன்றிலும் பதினொன்று வைத்தாலும் போதும். அக்காலத்தில் அரசாங்க திருமண பதிவு முறை இல்லை. ஆதலால் சாட்சி சொல்ல எல்லோரையும் அழைத்தார்கள். அவர்கள் கேட்டதை கொடுத்தார்கள்.
திருமணத்தன்று காலை காசி யாத்ரை; ஊஞ்சல்; வைதீக சடங்குகள்; மாங்கல்ய தாரணம், அம்மி மிதிதல். பொரி ஹோமம். செய்து விட்டு அரசாங்க திருமண பதிவு செய்தல்,
சாப்பாடு, எல்லோரும் திரும்ப வீடு செல்லுதல் என ஒரே நாளில் திருமண மண்டபம் வாடகை போதும்.. சம்பந்திகளிடம் முன்பே பேசி கொண்டு திருமண தம்பதி பேர்களில்
ஷேர், பிக்செட் டெபோசிட், ப்லாட் வாங்கி கொடுத்தல் இம்மாதிரி பிற்காலத்தில் அதிக பணம் வரும் வழி வகைகளில் பணத்தை சேமியுங்கள்.
Announcement
Collapse
No announcement yet.
Marriage rituals
Collapse
X
Leave a comment: