வைகாசி விசாகம் நம்மாழ்வார் அவதரித்த திருநாள் (24.05.2013 )

Click image for larger version

Name:	Namalwar.jpg
Views:	1
Size:	27.8 KB
ID:	34632
நம்மாழ்வார்வைகாசி விசாகத் திருநாளுக்கு மேலும் பல சிறப்புகளும் உண்டு. புத்த பெருமான் அவதரித்த “புத்த பூர்ணிமா” என்ற திருநாளும் வைகாசி மாதம் பௌர்ணமியன்று தான். சில சோதிட விதிவிலக்குகள் தவிர்த்து, அநேகமாக எல்லா ஆண்டுகளும் ஒரே நாளில் தான் இந்த இரண்டு திருவிழாக்களும் வரும். இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இந்தத் திருவிழாவிற்கு “விசாக்”(Vesak) என்றே பெயர்.

“வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்” என்று வைணவ ஆசாரியர்களில் முதலாவதாக வணங்கப் படும் நம்மாழ்வார் உதித்த நாளும் இது தான். நெல்லை மாவட்டத்தில் திருச்செந்தூருக்கு அருகிலேயே ஆழ்வார் திருநகரி என்ற திருத்தலத்தில் அவதரித்தவர். எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் பெருமாள் திருவடியில் சடாரியாக வீற்றிருந்து என்றென்றூம் அடியார்களை ஆசிர்வதிக்கிறார் ஆழ்வார். நம்மாழ்வார் திருநட்சத்திர விழா பற்றி மேலும் அறிய இங்கே பாருங்கள்.

http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=2660&Cat=3