Announcement

Collapse
No announcement yet.

96 tharpana vivaram. contd.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 96 tharpana vivaram. contd.

    23-11-2020 To 04-12-2020 No Broadcaste*
    *05-12-2020*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஷண்ணவதி தர்ப்பணம் என்கின்ற தலைப்பில் மேலும் தொடர்கிறார்.*


    *96 தர்ப்பணங்களை ஒரு வருடத்தில் நாம் நம்முடைய பித்ருக்களை உத்தேசித்து கட்டாயம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நித்தியம். அதாவது அவசியம் செய்ய வேண்டும் என்று பொருள்.*


    *தர்ம சாஸ்திரத்தில் எதெல்லாம் நித்தியம் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அவைகளை நாம் கட்டாயம் செய்யவேண்டும் செய்யாமல் இருத்தல் கூடாது.*


    *அப்படி நாம் செய்யாமல் இருந்துவிட்டால் அன்று அப்போ ஜனம் அதாவது அன்று போஜனம் செய்யாமல் இருக்கவேண்டும் சாப்பிடாமல். ஏனென்றால் அந்த அளவுக்கு இந்த ஷண்ணவதி தர்ப்பணம் முக்கியமாக சொல்லப்பட்டிருக்கிறது. சம்பிரதாயம் பழக்கத்தில் செய்வதில்லை என்று நாம்தான் சொல்லுகிறோமே ஒழிய, தர்ம சாஸ்திரத்தில் அப்படி சொல்லவில்லை நம்முடைய ரெஃபரன்ஸ் தர்மசாஸ்திரம் தான்.*


    *தர்ம சாஸ்திரத்தில் ஒரு விஷயம் நித்தியம் என்று சொல்லப்பட்டு இருந்தால் அதை மீறுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. உலகத்தில் இல்லை அல்லது வேறு காரணங்களை சொல்லி நாம் தப்பிப்பதற்கான வழியே தவிர அதில் சொல்லியுள்ளபடி நாம் அப்படியே செய்யவேண்டும்.*


    *அப்படி நாம் விட்டுவிட்டோமே ஆனால் அதற்கான பாவங்கள் நம்மை வந்து சேரும். பராசர மகரிஷி சொல்லும்பொழுது, புண்ணியம் பாவம் இவை இரண்டும் நாம் அனுபவித்தே ஆக வேண்டும் சுகத்தையும் துக்கத்தையும். இப்பொழுது நாம் லௌகீகமாக ஒரு கடன் வாங்கி இருக்கிறோம் அதை திருப்பி செலுத்த முடியவில்லை என்றால் வேறு ஏதாவது அதற்கு மாற்று வழியில் நாம் அடைப்பதற்கு முயற்சிக்கலாம் கொடுக்கலாம்.*


    *ஆனால் இந்த புண்ணிய பாபங்கள் இருக்கிறதே கோடி ஜென்மங்கள் எடுத்தாலும், அதை அனுபவித்தே ஆக வேண்டும் அதில் இருந்து தப்ப முடியாது. வேறு எந்த வழியிலும் இந்த பாவங்களை நாம் போக்க முடியாது. இந்த பூமியின் உள்ளே என்னென்ன தானியங்கள் விதைகள் கிடைக்கிறது என்று நமக்குத் தெரியாது. அது எப்படி வெளியில் வரும் என்றால் மழை ஒரேயடியாக பொழிந்து அவைகள் பரிபக்குவம் ஆகி வெளியே வரும். யார் அங்கே விதைகளை போட்டார்கள் என்று நமக்குத் தெரியாது. என்றோ அங்கு விழுந்த விதைகள் காத்துக்கொண்டிருக்கும் மழை பொழிவதற்காக.*


    *அதே போல் தான் நாம் செய்யக்கூடியது தான பாபங்கள் அந்த ஆத்மாவின் மனசில் ஒட்டிக் கொண்டே வரும். நமக்கு ஒரு சிறிய சிரமம் வரும்பொழுது அத்தனை பாவங்களும் சேர்ந்து ஆரம்பித்துவிடும். ஆகைனால் ஏதோ மாற்று வழிகள் இருக்கின்றது என்று நினைத்து அதை எல்லாம் நாம் சரிசெய்ய முடியாது.*


    *தர்ம சாஸ்திரத்தில் எதையெல்லாம் கட்டாயம் என்று சொல்லப்பட்டிருக்கிறது அவைகளை நாம் செய்துதான் ஆகவேண்டும் பழக்கத்தில் இல்லை சம்பிரதாயத்தில் இல்லை நம் வீடுகளில் அதை இப்போது வேண்டாம் என்று சொல்கிறார்கள், அது எல்லாம் பிரமாணமாக ஆகாது. அடிப்படையாக தர்மசாஸ்திரம் தான் நமக்கு பிரமாணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.*


    *மேலும் நாம் விட்டதினால் வரக்கூடிய பாபங்களை கஷ்டங்களை நாம் தான் அனுபவிக்க வேண்டுமே தவிர நம்மை சுற்றியுள்ளவர்களும் நமக்கு ஆலோசனை சொன்னவர்களும் அனுபவிக்க மாட்டார்கள்.*


    *அதாவது பாவம் என்றால் இங்கே செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டது ஒரு பாவமாக அனுஷ்டானங்களை விட்டது. அந்தப் பாவங்கள் எப்போது வேலை செய்யும் என்றால் யுகம் வாரியாக அது மாறுபடுகிறது.*


    *கிருதயுகத்தில் ஏ உடனேயே அது வேலை செய்ய ஆரம்பித்து விடும். திரேதா யுகத்திலே பத்து நாட்களில் அது வேலை செய்யும். துவாபர யுகத்திலே ஒரு மாதம் கழித்து அது நம்முடைய அனுபவத்திற்கு வரும். ஆனால் கலியிலே ஒரு வருட காலம் எடுத்துக்கொள்ளும் ஏனென்றால் அதற்கான பரிகாரம் ஏதாவது அந்த வருடத்தில் செய்கிறானா என்று கலிபுருஷன் நமக்கு அவகாசம் கொடுக்கிறார். ஆகையினாலே தர்ம சாஸ்திரத்தில் இந்த பித்ரு காரியங்களை கட்டாயம் நாம் செய்ய வேண்டும் என்பதை இந்த ஷண்ணவதி தர்ப்பணங்களிலே காண்பித்திருக்கிறார்கள்.*


    *அமாவாஸ்யா மன்வாதி யுகாதி சங்கரமனம் வைதிருதி வ்தீபாதம் மஹாளயம் திஸ்ரோஷ்டகாஹா என்று இவைகள் தான் 96 தர்ப்பணங்கள். இவைகளை முன்னரே நாம் பார்த்தோம் இவைகளை அவசியம் நாம் செய்ய வேண்டும். ஒரு 15 நிமிட காரியம்தான் நம்முடைய முன்னோர்கள் இதையெல்லாம் செய்து தான் சௌகரியமாக இருந்தார்கள். அவர்கள் எந்தப் பெரிய மருத்துவமனைக்கு சென்றார்கள் அல்லது எந்த சுகத்தை அனுபவிக்க எதைத் தேடி சென்றார்கள்? கிராமத்திலேயே தான் அவர்கள் வசித்தார்கள். மிகப்பெரிய வசதிகள் இல்லாவிட்டாலும் கூட தர்ப்பணங்களை விடாமல் செய்து வந்தார்கள்.*


    *ஒரு குடும்பத்தில் நான்கு காரியங்களில் முக்கியமாக வைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த பிதுரு காரியங்களை விடக்கூடாது என்று முயற்சி செய்து செய்து கொண்டிருந்தார்கள்.*


    *சிராத்தங்களை முதல் நாளில் இருந்து ஆரம்பித்து செய்வது, தர்ப்பணங்களை விடாமல் செய்வது. மேலும் கிராமங்களை விட்டு வெளியில் போகக்கூடாது என்று முக்கியமாக வைத்துக் கொண்டிருந்தார்கள். வெளியூர்களில் வேறு வசதிகள் இருக்கிறது என்று போக மாட்டார்கள் இங்கு என்ன சௌரியம் இருக்கோ அதை வைத்துக்கொண்டு கிராமத்திலேயே வாழ்ந்தார்கள். இயற்கையான சூழலில் கிராமத்தில் அமைத்துக் கொண்டார்கள்.

    மேலும் கிராம காரியங்களை எதுவும் விட்டுக்கொடுக்காமல் செய்துகொண்டிருந்தார்கள். ராதா கல்யாணம் சீதா கல்யாணங்கள் கிராமங்களில் நடக்கும். திருமணங்கள் நடக்கும் போது அனைவரும் சென்று ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு விட்டுக்கொடுக்காமல் செய்து கொண்டிருந்தனர். மேலும் குலதெய்வத்தினுடைய பிரார்த்தனைகளை விடாமல் செய்து வந்தார்கள்.

    வருடத்திற்கு இரண்டு தடவையாவது குலதெய்வத்தை சென்று பார்ப்பது அந்த காரியங்களை விடாமல் செய்வது என்று வைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த நான்கு காரியங்களை வைத்துக்கொண்டு சௌக்கியமாக இருந்தார்கள் நம் முன்னோர்கள்.*


    *இந்த நாட்களில் இந்த நான்குமே நாம் விட்டுவிட்டோம். பித்ரு காரியங்களை நாம் குறைத்து விட்டதால் இந்த நாட்களில் இவ்வளவு சிரமங்களை நாம் அனுபவிக்க நேரிடுகிறது. ஆகையினாலே இவைகளை விடக்கூடாது இதற்கான பிராயச்சித்தங்கள் என்ன சொல்லியிருக்கிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.*
Working...
X