ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்

தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத் தடிகளை
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
ஆரார் உலகத்தறிவுடையார் அமரர் நன்னாட்டரசு ஆள
பேர் ஆயிரமும் ஒதுமின்கள் அன்றி யிவையே பிதற்றுமினே ——————–1-5-10-


————————————————————————————————————
வியாக்யானம் –
தாரா இத்யாதி –
தாராக்களாலே நிறைந்து இருந்துள்ள வயல் சூழ்ந்த
ஸ்ரீ சாளக்கிராமத்திலே
வந்து சந்நிஹிதனானார் ஸ்வாமியை கவி பாடிற்று –
காரார்-இத்யாதி –
மேகங்களின் உடைய நிரந்தர சஞ்சாரத்தை உடைத்தான
பர்யந்த்தத்தை உடைய திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
ஒலி உடைத்தாம் படியாக சொன்ன சொல் தொடை
ஆரார் உலகத்தறிவுடையார் –
லோகத்தில் அறிவு உடையாராய் இருப்பார் –
அமரர் நன்னாட்டரசு ஆள –
நித்ய சூரிகள் உடைய நல் நாடு உண்டு -பரம பதம்
அத்தை
ஆள்மின்கள் வானகம் -என்கிறபடியே
தாங்கள் இட்ட வழக்காம் படி நடத்த –
பேர் ஆயிரமும் ஒதுமின்கள்
ஆயிரம் திரு நாமங்களையும் வாயாலே சொல்லப் பாரும் கோள் –
அன்றி யிவையே பிதற்றுமினே —
அங்கன் இன்றிக்கே
இவற்றையே அடைவு கெட சொல்லப் பாரும் கோள்
—————————————————————————————