கோவிலுக்கு செல்பவர்களுக்கு விபத்து நேர்ந்தால் கிண்டல் செய்ய அந்த செய்தியை உலகின் ஒரே பகுத்தறிவு ஏடுகளான "உண்மை", "விடுதலை" இதழ்களில் செய்தியாக வெளியிட்டு தங்களது "பகுத்தறிவு" மேதைமையை(!) வெளியிட்டுக்கொள்வார்கள்.

இந்த செய்தியை "உண்மை", "விடுதலை" இதழ்கள் வெளியிடுமா? அல்லது ஊமையாகிவிடுமா?

பகுத்தறிவு குஞ்சுகளின் உறைவிடமான "கலைஞர் டிவி ", "சன் டிவி" தங்களது "நிஜம்" ," நடந்தது என்ன?" நிகழ்சிகளில் ஒலி, ஒளிபரப்பு செய்யுமா? அப்படி செய்வது தானே உண்மையான பகுத்தறிவு.

தமிழகத்தில் இன்றும் ஏமாற்றத்தின் அடையாளமாக "திருமண்ணையும் "கோவிந்தா " என்பதையும் கிண்டல் செய்யும் பக்திமான்களும்(!) இதைப் படித்த பிறகாவது உண்மையான பக்தர்களாக மாறுவார்களா?

"கோவிந்தா" என்னும் திருமாலின் நாமத்தினையும் (பெயரையும்) அவனது நாமத்தினை (பெயரினைச்) சொல்லி வைஷ்ணவர்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளும் திருமண்ணையும் கிண்டல் செய்யும் போலி பக்தர்களும் இனியாவது அதன் மகிமையை உணர்வார்களா?