information

Information

ஆசார்யாளும் சரி, அவருக்கு முந்தி க்ருஷ்ண பரமாத்மாவும் சரி, கர்மயோக அதிகாரிகள், ஞானயோக அதிகாரிகள் என்று இரண்டே பிரிவுகளை மட்டும் பண்ணினார்கள்?, மூன்றாவதாக பக்தியோக அதிகாரிகள் என்ற பிரிவினை ஏன் பண்ணவில்லை?. ஏனென்றால் கர்மயோகி, ஞான யோகி ஆகிய இருவருக்குமே பக்தி அத்யாவச்யம் என்பதால் அதனை தனியாகப் பிரித்துச் சொல்லாது இரண்டு வழிகளுக்கும், இரு பிரிவுகளுக்கும் ஒரு முக்யமான அங்கமாக பக்தி பண்ண வேண்டியிருப்பதால் அதனைத் தனியாகச் சொல்லவில்லை. கர்மயோகியும் ஒரு லெவலில் பக்தி பண்ண வேண்டும், ஞான வழிச் செல்பவனும் ஒரு லெவலில் பக்தி பண்ணதான் வேண்டும். ச்ரத்தையில் கீழ் மட்டத்தில் ஒன்று, மேல் மட்டத்தில் ஒன்று என இரண்டு லெவல் சொன்னது போல பக்தி-சிரத்தை என்று சேர்த்துச் சொல்வதற்கு ஏற்றபடி இரண்டு லெவல்.








அதற்கு மேலே - மேலோ, கீழோ, 'ஹை'யா, 'லோ'வா எதுவுமே தெரியாத - அநுபுதியையே அடைந்துவிட்ட ஆத்ம சாக்ஷாத்காரம் என்ற ஸித்தியைப் பெற்ற ஸித்தர்கள் (இங்கு குறிப்பிடுபவர்கள் அஷ்டமா ஸித்தி பெற்றவர்கள் அல்ல) கூட பக்தி பண்ணுவார்கள், அதற்குக் காரணமே கிடையாது என்று சுகாச்சார்யாள் கூட ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லியிருக்கிறார்.
ஆக, இப்படி எல்லா நிலையிலும் கர்மா, ஞானம் ஆகிய இரண்டிலும் பக்தி இருப்பதால்தான் அதை தனியாகப் பிரித்துச் சொல்லவில்லை.


நன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 6; பக்கம் 278-279