Originally posted by bmbcAdmin
View Post
ஸ்ரீ ஸ்வாமின்,
மேலே சொன்ன பதில் என் ஆத்துக்காரரின் கேள்விக்கானதுதான். ஸ்ரீ NVS ஸ்வாமியிடம் கேட்டுத் தெளியவே கேட்டிருந்தார்.
அடுத்த மாதம் வேறு வீடு மாற உள்ளோம். ஆத்து ப்ருஹஸ்பதி ஸ்வாமி சற்று பிசியாக இருப்பதால் புண்யாஹவாசனம் நாமே செய்துகொள்ளலாம் என்று எங்கள் உறவுக்காரப் பெரியவர் அறிவுறுத்துகிறார். அவரே தொலைபேசியில் மந்திரத்தை சந்தை சொல்லி ஆரம்பித்து வைப்பதாகவும் சொல்லுகிறார்.
ஆனால் மந்திரங்களை வலை மூலம் அனுப்பி வைக்க அவர் அசக்தர் என்பதால் எப்படியாவது புத்தகம் வாங்கிக்கொள், நான் ஆரம்பித்துத் தருகிறேன், இதைத் தெரிந்து கொள்வது நமக்கு மிகவும் அவசியமான ஒன்று என்றும் அறிவுறுத்துகிறார். உடனே அடியோங்களுக்கு நினைவுக்கு வந்தது தாங்கள்தான். உங்களுடைய வலைத்தளத்தில் தேடினால் கிடைக்கும் என்று நினைத்தோம்.
தாங்கள் அட்டாச் செய்த pdf தரவிறக்கம் செய்து கொண்டோம். அதுவே ஆடியோ file ஆகவும் கிடைக்குமா? Youtubeல் சில வீடியோக்கள் உண்டு, தங்களது ஆடியோ இருக்கிறதா?
இனி புண்யாஹவாசனம் பற்றி எங்களுடைய சந்தேகங்களையும் தெளிவு படுத்தினால் பிறருக்கும் உபயோகமாக இருக்கும்.
1. புண்யாஹவாசனம் என்பது எப்போதெல்லாம் செய்யலாம்?
2. எல்லாவற்றுக்கும் ஒரே மந்திரம் தானா?
3. ப்ருஹஸ்பதி சுவாமி கிடைக்காதபோது நாமே செய்து கொள்ளலாமா?
Leave a comment: